english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்
అనుదిన మన్నా

தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்

Saturday, 13th of September 2025
0 0 580
Categories : தேவனின் வார்த்தை ( Word of God )
பல ஆண்டுகளாக, ஐனங்கள் தேவனுடைய வார்த்தையை புறக்கணிப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலர் தேவனுடைய வார்த்தையைப் படிக்காமல் நாட்கள் மற்றும் வாரங்கள் செல்கிறார்கள். எப்படியோ, ஞாயிற்றுக்கிழமை காலை சொற்பொழிவைக் கேட்டாலே போதும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

பல ஆண்டுகளாக தேவாலயத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் கூட தேவனுடைய வார்த்தையை முறையாக படிப்பதில்லை. 

இன்னும், தேவனுடைய வார்த்தையை வாசிப்பதில் பல நன்மைகள் உள்ளன. பரிசுத்த ஆவியானவர் இதைப் பயன்படுத்தி, அவருடைய வார்த்தைக்கான பசியையும் தாகத்தையும் உங்களில் உண்டாக்கட்டும். பின்வருவனவற்றை மிகவும் கவனமாகப் படியுங்கள். இவை ஒரு ராஜாவுக்கான தேவனின் அறிவுரைகள். “மேலும், அவர் (ராஜா) தனது ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது, இந்தச் சட்டத்தின் ஒரு நகலை, ஆசாரியர்களான லேவியர்களுக்கு முன்பாக ஒரு புத்தகத்தில் எழுத வேண்டும்.

"அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது,  அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமைகொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,  இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, 
இவைகளின்படி செய்வதற்காகத் தன்

தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,
அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன், இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்".
(உபாகமம் 17:18-20)

ஒரு ராஜா இந்த பூமியில் வாழும் வரை தேவனின் வார்த்தையை தினமும் படிக்க வேண்டும். இது ராஜாவைப் பல வழிகளில் ஆயத்தப்படுத்தியது.

1. கர்த்தருக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார்
2. அது அவரை பெருமையிலிருந்து காப்பாற்றும்
3. அது அவனை தேவனின் . பாதைகளில் வழிநடக்க வைக்கும்
4. அது அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளைத் தரும்.
5. அவரது தலைமை நிறுவப்படும்

அவருடைய பரிபூரண தியாகத்தின் மூலம் வேதம் சொல்கிறது;
 "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்".
(வெளிப்படுத்தினத விசேஷம் 1:6)
எனவே, நீங்களும் நானும் ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆனோம்.

ஆசாரியர்களாகிய நாம் தந்தைக்கு முன்பாக துதி மற்றும் பரிந்துரையின் பலிகளைச் செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். ராஜாக்களாக, சுவிசேஷத்திற்காக நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதன் மூலமும் பிசாசுகளைத் துரத்துவதன் மூலமும் நம் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். தேவனின் இந்த அழைப்பை திறம்பட நிறைவேற்ற, கர்த்தர் உபாகமம் 17:18-20 ல் ராஜாக்களுக்கு கூறியது போல் தேவனின் வார்த்தையுடன் நம்மை தயார்படுத்த வேண்டும்.
 
அவருடைய விலைமதிப்பற்ற வார்த்தையை நேசித்து மதிக்கிறவர்களைக் கனப்படுத்தவும் ஆசீர்வதிக்கவும் தேவன் கடமைப்பட்டிருக்கிறார். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, தேவன் தம் மனதையும் இருதயத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். "புல் உலர்ந்து பூ உதிரும், நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது". (ஏசாயா 40:8) நாம் அவருடைய வார்த்தையை விசுவாசித்து கீழ்ப்படிந்தால், அவருடைய மகிமையால் நம் வாழ்வு பிரகாசிக்கும்.

பாஸ்டர் மைக்கேல் எழுதிய இந்த சிறு புத்தகங்களைப்  படியுங்கள்:

 1. வேதத்தை எவ்வாறு வாசிப்பது : https://bit.ly/2ZABBKc

2. ஆசிர்வதிக்கப்பட்டவர் : https://tinyurl.com/5dma39h5

Bible Reading: Ezekiel 33-35

ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, உமது வார்த்தையை எப்பொழுதும் நிறைவேற்ற முடிந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். தினமும் உமது வார்த்தையைப் படிக்கவும் தியானிக்கவும் எனக்கு கிருபை அருளும். ஆமென்!



Join our WhatsApp Channel


Most Read
● அவரது வலிமையின் நோக்கம்
● யூதாஸின் வீழ்ச்சியிலிருந்து மூன்று பாடங்கள்
● தேவன் தாய்மார்களை சிறப்புறப் படைத்தார்
● ஆண்டவராகிய இயேசுவின் மூலம் கிருபை
● செழிப்புக்கான மறக்கப்பட்ட திறவுகோல்
● பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-1
● நடக்க கற்றுக்கொள்வது
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్