english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. பரிசுத்தப்படுத்துதல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது
అనుదిన మన్నా

பரிசுத்தப்படுத்துதல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

Friday, 26th of September 2025
0 0 454
1. பரிசுத்தமாக்குதல் என்பது தேவனுடன் ஒரு தரமான ஆவிக்குரிய வழியை பராமரிப்பது மற்றும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை சரியான முறையில் கவனித்துக்கொள்வதாகும்.

2. பரிசுத்தமாக்குதல் என்பது ஒரு வாழ்க்கை முறையாக தேவ பயத்தில் வாழ்வது. போத்திபரின் மனைவி யோசேப்பிடம் தவறு செய்ய  முயன்றாள். யோசேப்பு, அன்பானவர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் வெகு தொலைவில், வெளிநாட்டில் தனியாக இருந்ததால், கண்டிப்பாக விட்டுக்கொடுக்க ஆசைப்பட்டிருப்பார். இங்கே அவர் சொன்னார், "இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்". (ஆதியாகமம் 39:9) யோசேப்பின் வாழ்க்கை தேவ பயத்தால் வழிநடத்தப்பட்டது.

3. பரிசுத்தமாக்குதல் என்பது எல்லா நேரங்களிலும் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவதாகும்.
லூக்கா 6:26 இன் செய்தி மொழிபெயர்ப்பில், நமக்குச் சொல்லப்படுகிறது: "எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்" பிரபல போட்டிகள் உண்மைப் போட்டிகள் அல்ல. உங்கள் பணி உண்மையாக இருக்க வேண்டும் மாறாக பிரபலமாக இருக்கக்கூடாது.

ஒரு கிறிஸ்தவப் பெண்மணி எனக்கு எழுதினார், "நான் என் திருமணத்தில் மதுவை வழங்கவில்லை என்றால், ஜனங்கள் என்ன சொல்வார்கள்?" நான் நிச்சயமாக அவளிடம் எதுவும் சொல்லவில்லை. தேவன் சொல்வதை விட ஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், "நான் மனிதனைப் பிரியப்படுத்துவதை விட தேவனைப் பிரியப்படுத்த விரும்புகிறேன்" என்று கூறுபவர்கள் குறைவாக உள்ளார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் பரிசுத்தமாக்குதலை வரையறுத்த்துகிறார். "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்". (மத்தேயு 5:6)

நீதிக்கான உங்கள் பசியும் தாகமும் உலகப் பொருட்களுக்கான பசி மற்றும் தாகத்தை விட அதிகமாக இருக்கும்போது, ​​நீங்கள் பரிசுத்தமாக நடப்பீர்கள். இந்தப் பசியும் தாகமும் தேவனால் மட்டுமே உங்களுக்குத் தரப்படும்.
 
ஆகவே, அவருடைய பிரசன்னத்திற்காகவும் அவருடைய வழிகளுக்காகவும் இந்த பசி மற்றும் தாகத்திற்காக தினமும் அவரிடம் கேட்பதை ஒரு குறிபாக்குங்கள். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​நீங்கள் பரிசுத்தமாக்கப்படுவீர்கள், மேலும் மேலும் அவரைப் போலாவீர்கள்.

Bible Reading: Hosea 5-10
ప్రార్థన
தந்தையே, உம்மை மேலும் மேலும் அறிந்துகொள்ள எனக்கு பசியையும் தாகத்தையும் கொடும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!



Join our WhatsApp Channel


Most Read
● ஒரு வித்தியாசமான இயேசு, வித்தியாசமான ஆவி மற்றும் மற்றொரு நற்செய்தி - I
● உங்களுக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை
● చింతగా ఎదురు చూడటం
● தேவன் பெரிதும் அநுகூலமுமான கதவுகளைத் திறக்கிறார்
● தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-2
● மன்றாட்டு ஜெபத்தின் முக்கியத்துவம்
● நீங்கள் தேவனை எதிர்க்கிறீர்களா?
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్