english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்
అనుదిన మన్నా

கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்

Monday, 26th of February 2024
0 0 1068
Categories : கிறிஸ்துவில் நமது அடையாளம்(our identity in Christ)
”நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி

 தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.“
‭‭வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭1‬:‭6‬ ‭

வார்த்தைகளின் வரிசையைக் கவனியுங்கள்: முதலில் அன்புகூர்ந்து, பின்னர் தமது இரத்தத்தினாலே, பின்னர் கழுவினார்.

தேவன் நம்மை ஒருவித கடமை உணர்விலிருந்து கழுவி, பின்னர் நாம் சுத்தமாக இருந்ததால் நம்மை நேசித்தார் என்பது அல்ல. நாம் அழுக்காக இருக்கும்போது அவர் நம்மை நேசித்தார், ஆனால் அவர் நம்மை கழுவினார்.

ரோமர் 5:8, இதையே உறுதிப்படுத்துகிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.“
‭‭ரோமர்‬ ‭5‬:‭8‬ ‭

”நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.“
‭‭வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭1‬:‭6‬ ‭

கர்த்தராகிய இயேசு ‘நம்மைக் கழுவுவதில்’ மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக அவர் நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களாகவும் ஆக்கினார்.

இப்போது சட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு, ராஜாவாகவும் ஆசாரியனாகவும் இருந்த ஒரு மனிதன் இருந்தான் - மெல்கிசேதேக் (ஆதியாகமம் 14:18). இருப்பினும், பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமானம் வழங்கப்பட்ட பிறகு, ராஜாக்களையும் ஆசாரியர்களையும் இணைப்பது தடைசெய்யப்பட்டது. நீங்கள் ராஜாவாகவோ அல்லது ஆசாரியனாகவோ இருக்கலாம் - இருவரும் அல்ல.

யூதாவின் அரசன் உசியா இரண்டு காரியங்களையும் ஒருங்கிணைக்க முயன்று அதற்கான தண்டனையாய் தொழுநோய் பெற்றான். 2 நாளாகமம் 26:16-21 -ஐ வாசியுங்கள்; அது முழு கதையையும் நமக்கு சொல்கிறது.

ராஜாக்களும் ஆசாரியர்களுமாகிய இரு பதவிகளையும் இணைக்க முயன்ற மற்றொரு நபர் சவுல் - அவர் கர்த்தரால் நிராகரிக்கப்பட்டார் மற்றும் அவரது ராஜ்யத்தை இழந்தார். 1 சாமுவேல் 13:8-14ஐ படியுங்கள்.

இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளும் பழைய ஏற்பாட்டில் ராஜாக்களையும் ஆசாரியர்களையும் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், புதிய உடன்படிக்கையின் கீழ், நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல இருக்க முடியும், அவர் ராஜாவாகவும் பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார்.

இப்போது இங்கே ஒரு கொள்கை உள்ளது. கர்த்தராகிய இயேசு ராஜாவாகவும் ஆசரியராகவும் இருந்ததால், அவர் நம்மை தேவனுக்கு ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆக்க முடியும். நீங்கள் இல்லாதவராக வேறொருவரை உருவாக்க முடியாது.

இப்போது 1 பேதுரு 2:9 க்கு செல்lungal: ”நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.“

ராஜரீகமான ஆசாரியத்துவம் என்ற சொற்களின் கலவையைக் கவனியுங்கள். அப்படியானால், தேவன்மீது உண்மையான விசுவாசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசாரியராகவும் ராஜாவாகவும் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

கிறிஸ்துவைப் போலவே நாமும் இரு வழிகளிலும் ஊழியம் செய்ய வேண்டும்; ஆசாரியர்களாகிய நாம் தந்தைக்கு முன்பாக துதி மற்றும் பரிந்துரையின் பலிகளைச் செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். ராஜாக்களாக, சுவிசேஷத்திற்காக நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதன் மூலமும் பிசாசுகளைத் துரத்துவதன் மூலமும் நம் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ఒప్పుకోలు
நான் கிறிஸ்துவில் இருக்கிறேன், எனவே நான் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், நான் அற்புதமான செயல்களை முன்வைத்து, அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்டவன்.


Join our WhatsApp Channel


Most Read
● இறுதி சுற்றில் வெற்றி பெறுவது
● அசாதாரண ஆவிகள்
● ஆத்துமாவுக்கான தேவனின் மருந்து
● கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வீட்டைக் கட்டுதல்
● நித்தியத்தை மனதில் கொண்டு வாழ்வது
● எதிராளி இரகசியமானவன்
● பின்னடைவு முதல் திரும்ப எழும் வரை
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్