english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. யூதா எழுந்து புறப்படக்கடவன்
అనుదిన మన్నా

யூதா எழுந்து புறப்படக்கடவன்

Friday, 22nd of March 2024
0 0 1052
Categories : பாராட்டு (Praise)
”யூதாவில் தேவன் அறியப்பட்டவர்.“
‭‭சங்கீதம்‬ ‭76‬:‭1‬ ‭

யூதா (அல்லது எபிரேயுவில் எதூதா) யாக்கோபின் நான்காவது மகன், அவருடைய சந்ததிகளில் ஒருவர் மேசியாவாக இருக்க வேண்டும் (ஆதியாகமம் 29:35; 49:8-12)

சுவாரஸ்யமாக யூதா என்பதன் அர்த்தம் 'புகழ்'. யூதாவில் தேவன் அறியப்படுகிறார் அல்லது வெளிப்படுத்தப்படுகிறார்.

”யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;“
‭‭சங்கீதம்‬ ‭76‬:‭1‬ ‭நாம் அவரைத் துதிக்கும்போது தேவன் அறியப்படுகிறார்.

யாக்கோபின் மனைவி லேயாள் தன் நான்காவது மகனுக்கு யூதா என்று பெயரிட்டாள். ஏனென்று  உங்களுக்கு தெரியுமா?

யாக்கோபுக்கு லேயாள் மூன்று  மகன்களைப் பெற்றிருந்தாலும், தன் கணவன் தன்னை நேசிக்கவில்லை என்பதை அவள் அறிந்தாள். இந்த நேரத்தில், அவள் சரணடைய முடிவு செய்தாள் மற்றும் யாக்கோபு தன் மீது அன்பு இல்லாததால் புலம்பவில்லை; அவள் சொன்னாள்: "இம்முறை நான் கர்த்தரைத் துதிப்பேன்" (ஆதி. 29:35). அப்போதுதான் யூதா பிறந்தார்.

யூதா தேவனின் இருதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது போல், இன்று தேவனின் இருதயத்திலும் துதி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. துதி வல்லமை வாய்ந்தது, தேவனின் ஆசீர்வாதங்களுக்கு தேவையானதும் திறவுகோலாகவும் இருக்கிறது.

”யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.“
‭‭நியாயாதிபதிகள்‬ ‭1‬:‭1‬-‭2‬ ‭

இதையே நியாயாதிபதிகள் 20:18ல் பார்க்கிறோம், யுத்தம் நடந்தபோது யூதா கோத்திரம் முதலில் புறப்பட்டது. நாம் எப்படி யுத்தத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்கான தீர்க்கதரிசன படம் இது. நீங்கள் என்ன யுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தீர்க்கதரிசனமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் தனியாக யுத்தத்தில் நுழைய வேண்டாம், முதலில் யூதாவை நாம் அனுமதிக்க வேண்டும்; முதலில் தேவனை துதிக்க வேண்டும்.

உங்கள் பிரச்சனை அல்லது சூழ்நிலையைப் பற்றி தேவனிடம் குறை கூறி முணுமுணுத்து ஜெபத்தில் நுழையாதீர்கள். யூதா முதலில் போகட்டும்; முதலில் அவரை துதித்துப் பேசுங்கள். யூதா தன் குடும்பத்தில் நான்காவதாக இருந்தான், ஆனால் தேவனின் வரிசையில், அவன் முதலாவதாக ஆனான்.

ஒருவேளை நீங்கள் தேவனைப் போற்ற விரும்பவில்லை. ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் தேவனைத் துதிப்பதற்கு எதுவும் இல்லை. எப்படியும் அவரைத் துதியுங்கள். அவர் துதிக்கு பாத்திரராய் இருக்கிறார்.

2 நாளாகமம் 20ல், யோசபாத் ராஜா மணல் போன்ற திரளான படைகளை எதிர்கொண்டபோது. இந்த யுத்தம் தனது வலிமைக்கு அப்பாற்பட்டது என்பதை அவர் அறிந்திருந்தார். அப்போதுதான் அவர் தேவனின் முகத்தை நாடினார். வெற்றி பெறவே முடியாது என்று தோன்றிய யுத்தத்தில் அவர் எப்படி பிரவேசித்தார் தெரியுமா?

”அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.“
‭‭2 நாளாகமம்‬ ‭20‬:‭22‬ ‭

நீங்கள் என்ன யுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை அது ஏதாவது வியாதி, நீதிமன்ற வழக்கு, வாடிக்கையாளர் பிரச்சனை, சில சமூகப் பிரச்சினை அல்லது சில நீண்டகால குடும்பத் தகராறு, தேவனின் துதி உங்கள் வாயிலிருந்து வெளியேறட்டும். தேவனுடைய துதிகள் உங்கள் வயிற்றிலிருந்து பாய்ந்தோடும் ஜீவத்தண்ணீரைப்போல இருக்கட்டும் (யோவான் 7:38). உங்கள் உதடுகளில் ஒரு பாடலுடன் 2024 ஐ கடந்து செல்வீர்கள்.

தேவனுடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட இந்த பூமியில் கிறிஸ்துமஸ் இரவில் துதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

”இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.“
‭‭லூக்கா‬ ‭2‬:‭11‬, ‭13‬-‭14‬ ‭
ప్రార్థన
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப துதித்து பாட NOAH பயன்பாட்டில் உள்ள துதி பகுதியைப் பயன்படுத்தவும். அடுத்த 21 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் இதைச் செய்யுங்கள். (இது ஒரு தீர்க்கதரிசன அறிவுறுத்தல், இதை புறக்கணிக்காதீர்கள்)


Join our WhatsApp Channel


Most Read
● அந்த காரியங்களை செயல்படுத்துங்கள்
● துளிர்விட்ட கோல்
● பரலோகம் என்று அழைக்கப்படும் இடம்
● தேவனுடைய திட்டத்தில் உத்தியின் வல்லமை
● குற்றத்தின் பொறியில் இருந்து விடுபடுதல்
● பூமியின் ராஜாக்களுக்கு மேல் ஆளுகை
● உங்கள் இலக்குகளை அடைவதற்கான வல்லமையை பெறுங்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్