english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. அந்நிய பாஷையில் பேசுங்கள் மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சி பெறுங்கள்
అనుదిన మన్నా

அந்நிய பாஷையில் பேசுங்கள் மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சி பெறுங்கள்

Tuesday, 9th of April 2024
0 0 880
Categories : அந்நிய பாஷைகளில் பேசுங்கள் ( Speak in Tongues)
"பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்" (ஏசாயா 28:11-12) என்றும் கூறினார்

ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்,  தேவனின் சிறந்த மனிதர், ஒரு பிளம்பர் மட்டுமே. ஆனால் ஆயிரக்கணக்கான ஜீவன்களைத் தொட தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட ஊழியத்தின் மூலம் பலர் குணமடைந்து விடுவிக்கப்பட்டனர்.

விகில்ஸ்வொர்த் ஒருமுறை ஒரு இறுதிச் சடங்கின் உட்காரும் அறைக்குள் நுழைந்தார், அங்கு ஒரு மனிதனின் சடலம் மூன்று நாட்களாக கிடந்தது. அவர் தேவனிடமிருந்து ஒரு பணியில் இருந்தார். அவர் திடீரென குடும்பத்தினரை அறையை விட்டு வெளியேறச் சொன்னார். பின்னர் அவர் அந்த மனிதனை மடியில் பிடித்து கலசத்திலிருந்து வெளியே இழுத்தார்! உடலைச் சுவரில் முட்டுக்கொடுத்து, "ஜீவன் பெறுவாயாக" என்று கட்டளையிட்டார். அவர் அந்த மனிதனின் உடலை விடுவித்தபோது,  விறைத்த சடலம் உடனடியாக ஒரு சத்தத்துடன் தரையில் விழுந்தது. அந்த இடத்தில் நீங்களும் நானும் வெளியேறியிருப்போம், ஆனால் விக்கிள்ஸ்வொர்த் கொண்டிருந்த நம்பிக்கை நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை! (தேவன் நமக்கு துணை புரிவார்)

விக்லெஸ்வொர்த் சடலத்தின் மீது இருந்த கோட்டின் மடிப்புகளைப் பிடித்து மீண்டும் ஒருமுறை சுவரில் உடலை முட்டுக்கொடுத்தார். மீண்டும் ஒரு முறை சொன்னார், இப்போது மீண்டும் சொல்கிறேன்... ஜீவன் பெறுவாயாக. மீண்டும், விறைத்த சடலம் முதல்முறை செய்த அதே சத்தத்துடன் தரையில் விழுந்தது. அந்த ஏழைக் குடும்பமும், இறுதிச் சடங்கு செய்யும் வேலையாட்களும் அந்த மூடிய கதவுக்குப் பின்னால் இருந்து வரும் சத்தத்துடன் யோசித்துக்கொண்டிருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்!
மூன்றாவது முறையாக விக்கிள்ஸ்வொர்த் சடலத்தை எடுத்துச் சுவரில் முட்டுக்கொடுத்தார். அவர் உடலை நோக்கி விரலைக் காட்டி, "உன்னிடம் ஒருமுறை சொன்னேன், இரண்டு முறை சொன்னேன், ஆனால் இந்த மூன்றாவது முறைக்குப் பிறகு நான் உன்னிடம் சொல்ல மாட்டேன், இப்போது ஜீவன் பெறுவாயாக" திடீரென்று அந்த மனிதர் இருமல் வந்து, தலையை ஆட்டி, முகத்தைத் துடைத்துக்கொண்டு, அந்த இறுதிச் சடங்கிலிருந்து வெளியேறினார்! இறந்தவர்களின் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிர்த்தெழுதல் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தின் ஊழியத்தில் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, 14 முறை நடந்தது.

அவர் 80 வயதில் இருந்தபோதும், அவரது வீரியம் குறையவே இல்லை. ஒருமுறை அவரிடம் ஒருவர், “ஐயா, நீங்கள் விடுமுறை எடுக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார், "நான் தினமும் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்." பின்னர் அவர் விளக்கினார், “நான் ஒவ்வொரு நாளும் அந்நிய பாஷையில் பேசுவதன் மூலம் ஓய்வெடுத்து என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன். அதுதான் என் உண்மையான விடுமுறை."

இன்றைய பரபரப்பான மன அழுத்தம் மற்றும் பிஸியான கால அட்டவணைகள் மற்றும் மற்ற எல்லா அழுத்தங்களிலும், தேவனுடன் தனியாக நேரத்தை செலவிடுவதன் மூலம் வரும் உள் புத்துணர்ச்சி நமக்கு அடிக்கடி தேவைப்படுகிறது. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கர்த்தராகிய இயேசு உங்களை அழைக்கிறார். (மத்தேயு 11:28)

நீங்கள் சமீப காலமாக சோர்வாகவும், இளைப்படைந்தவராகவும் உணர்கிறீர்களா, அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவனை  அந்நிய பாஷையில் ஆராதிக்க சிறிது நேரம் செலவிடுங்கள். நீங்கள் நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் அப்பால் இது உங்களைப் புதுப்பிக்கும்.

(அனுதின மன்னா உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். கீழே ஒரு கருத்தை பதிவிடுங்கள். மேலும்,  நீங்கள் கொடுப்பதன் மூலம் தேவனின் வேலையை ஆதரிக்க மறக்காதீர்கள்)
ప్రార్థన
பிதாவே, என் அவிசுவாசதிற்க்காக என்னை மன்னியும். நான் முழு மனதுடன் உம்மிடம் திரும்புகிறேன், உமது பிரசன்னத்தில் இருந்து வரும் புத்துணர்ச்சியை நான் பெறுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்! (அப்போஸ்தலர் 3:19)


Join our WhatsApp Channel


Most Read
● தேவனிடம் நெருங்கி வாருங்கள்
● உங்கள் மறுருபத்திற்கு எதிரி அஞ்சுகிறான்
● நண்பர் கோரிக்கை: பிரார்த்தனையுடன் தேர்வு செய்யவும்
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I
● நாள் 01:40 நாட்கள் உபவாச ஜெபம்
● தைரியமாக இருங்கள்
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 2
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్