english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உணர்ச்சிகள் என்ற ரோலர் கோஸ்டர்ல்
అనుదిన మన్నా

உணர்ச்சிகள் என்ற ரோலர் கோஸ்டர்ல்

Monday, 14th of October 2024
0 0 719
Categories : உணர்ச்சிகள் (Emotions) விடுதலை (Deliverance)
“அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.” 1 இராஜாக்கள்‬ ‭19‬:‭3‬-‭5‬ ‭

உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க கடினமான நேரத்தைக் கொண்ட ஒரே நபர் நீங்கள் மாத்திரம்தான் என்று நினைத்தால், உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

எலியா தீர்க்கதரிசி நம்மைப் போன்ற இயல்புடையவர் என்று வேதம் விவரிக்கிறது (யாக்கோபு 5:17). ஒரு கணத்தில், அவர் பரலோகத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்தவர், பாகாலின் 450 தீர்க்கதரிசிகளைக் கொன்றார், மற்றொரு கணம், அவர் பயந்து ஓடிப்போய் மரிக்கவேண்டும் என்று ஜெபம் செய்தார். அவரது உணர்ச்சிகரமான வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டரை ஒத்திருந்தது.

உண்மை என்னவென்றால், தேவன் நாம் இருக்கின்ற வண்ணமவே நம்மை நேசிக்கிறார், ஆனால் அவர் நம்மை விட்டுவிடுவதில்லை மிக அதிகமாக நேசிக்கிறார்.

தேவன் ஒரு தூதரை அனுப்பினார், அவர் பயணத்திற்கு வலிமை பெறுவதற்காக எலியாவை உண்ணவும் குடிக்கவும் வலியுறுத்தினார். புத்துயிர் பெற்ற பிறகு, எலியா வனாந்தரத்தில் 40 நாள் மலையேற்றத்தை மேற்கொள்ள முடிந்தது, அங்கு தேவன் அவரை தம்முடைய "மெல்லிய சத்தத்தின்" மூலம் ஊக்கப்படுத்தினார் (1 இராஜாக்கள் 19:12).

நம் உணர்ச்சிகளில் வெற்றியை அனுபவிக்க சில நடைமுறை வழிகள் இங்கே உள்ளன.

1. உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டாம்
உணர்ச்சி தூண்டுதல்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றுவது ஒரு உத்தரவாதமான தவறு, நீங்கள் பின்னர் வருத்தப்படுவீர்கள்.

2. ஆவிக்குரிய காரியங்களில் கவனம் செலுத்துங்கள்
வேதாகமம் நமக்குச் சொல்கிறது, “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”(கொலோசெயர் 3:2)

உங்கள் மனம் மாம்சம், உங்கள் அவசியங்கள், உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் குறைபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், எதிரி உங்களை கவர்ந்திழுத்து உங்களை நீண்ட நேரம் உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டரில் சிக்க வைக்கலாம்.

கர்த்தராகிய இயேசு யோவான் 8:31-32 ல் கூறினார், நாம் அவருடைய வார்த்தையில் நிலைத்திருக்கும்போது, ​​​​நாம் சத்தியத்தை அறிவோம், மேலும் சத்தியம் நம்மை விடுவிக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதையும் அதை நம் வாழ்வில் பயன்படுத்துவதையும் நிறுத்தும்போது, ​​​​சத்துருவின் குரலுக்கு அதிக கவனம் செலுத்தத் தொடங்குகிறோம்-அவனது குற்றச்சாட்டுகள், கண்டனம் மற்றும் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்ற உணர்வுகள் வராஆரம்பிக்கும். இங்கு தான் நமது உணர்ச்சிக்கு சவால் வரும் தருணம்.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையில் நேரத்தை செலவிடுவதற்கும், அதைப் படிப்பதற்கும், அதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிக்க நீங்கள் அனுமதிக்கும்போது அவருடைய வாக்குத்தத்தங்களை அறிக்கையிடுவதற்கும் உங்கள் முதன்மையான முன்னுரிமையாக கொடுங்கள். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​கர்த்தருடைய மகிழ்ச்சி உங்கள் மனதையும் ஆவியையும் நிரப்ப தொடங்கும் (நெகேமியா 8:10). இந்த மகிழ்ச்சி உங்களை பலப்படுத்தும்,  உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டருக்கு உங்களை பலியாக்காது.

3. சபை ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்
சபை ஆராதனைகளில் கலந்துகொள்ளுமாறு நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிரசங்கிக்கப்படும் வார்த்தையிலிருந்து ஒரு வார்த்தை உங்களை எல்லா அலைகளைத் தாண்டி மேலே உயர்த்தும்.

இதை தொடர்ந்து செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் இப்போதே ஒரு வித்தியாசத்தை காணாமல் இருக்கலாம், ஆனால் அதைத் தொடருங்கள், நீங்கள் மாற்றத்தை காண்பிர்கள் .
ప్రార్థన
இயேசுவின் நாமத்தில், தேவனுடைய வார்த்தை சொல்லுகிறபடியே அன்பில் செயல்படுவேன். என் உணர்ச்சிகள் என் மீது செல்வாக்கு செலுத்த முடியாது. தேவன் எனக்கு உதவி செய்வார்.


Join our WhatsApp Channel


Most Read
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● தேவன் பலன் அளிப்பவர்
● இரகசியத்தைத் தழுவுதல்
● கர்த்தருக்குள் உங்களை எப்படி திடப்படுத்திக்கொள்வது ?
● தைரியமாக இருங்கள்
● சில தலைவர்கள் வீழ்ந்ததால் நாம் வெளியேற வேண்டுமா?
● நீங்கள் தேவனின் நோக்கத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్