english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. வார்த்தைகளின் வல்லமை
అనుదిన మన్నా

வார்த்தைகளின் வல்லமை

Sunday, 20th of October 2024
0 0 564
Categories : மனநலம் (Mental Health)
“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.” நீதிமொழிகள்‬ ‭18‬:‭21‬ ‭

வார்த்தைகள் நம்பமுடியாத பலன் கொண்டுள்ளன. நாம் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் உயர்த்த அல்லது இடிக்க, ஊக்கப்படுத்த அல்லது சோர்வடைய, நம்பிக்கை அல்லது விரக்தியைக் கொண்டுவரும் ஆற்றல் கொண்டது. உண்மையில், நம்முடைய வார்த்தைகள் மிகவும் வல்லமைவாய்ந்தவை, ஜீவனையும் மரணத்தையும் தரக்கூடியது என வேதம் விவரிக்கிறது. குறிப்பாக நாம் கடினமான காலங்களைச் சந்திக்கும் போது, ​​நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் தாக்கத்தைப் பற்றி எத்தனை முறை யோசிக்கிறோம்? போராட்டத்தின் தருணங்களில், நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் பெரும்பாலும் நம் இருதயத்தின் நிலையை பிரதிபலிக்கின்றன. நாம் கவனமாக இல்லாவிட்டால், நம் உணர்ச்சிகள் மற்றும் ஆவிக்குரிய போராட்டங்களில் இருந்து நம்மை உயர்த்துவதற்குப் பதிலாக அவற்றை கீழே விழதள்ளும் வார்த்தைகளைப் பேசலாம்.

வேதத்தில் வல்லமைமிக்க தீர்க்கதரிசிகளில் ஒருவரான எலியா, தனது வாழ்க்கையில் ஒரு ஆழ்ந்த விரக்தியை அனுபவித்தார். பெரும் அழுத்தத்தையும் ஆபத்தையும் எதிர்கொண்ட பிறகு, எலியா முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதாக உணர்ந்து வனாந்தரத்திற்கு ஓடிவிட்டார். இந்த நேரத்தில் தேவனிடம் அவர் ஜெபித்த ஜெபம் தன் திடுக்கிட வைக்கிறது: “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,” (1 இராஜாக்கள் 19:4). அதிசயமான வழிகளில் தேவனின் வல்லமையை கண்ட எலியா, மனச்சோர்வினால் இருதயம் கனத்தபோது நம்பிக்கையின்மை மற்றும் தோல்வியின் வார்த்தைகளைப் பேசினார். அவரது பேச்சு அவரது மனமும் உணர்ச்சிகளின் நிலையை பிரதிபலித்தது.

இதே போன்ற சூழ்நிலைகளில் நாம் எத்தனை முறை நம்மைக் காண்கிறோம்? வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, ​​​​நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படாததாகத் தோன்றும்போது அல்லது சூழ்நிலைகளால் நாம் அழுத்தமாக உணரும்போது, ​​​​நம் வார்த்தைகள் மாறத் தொடங்குகின்றன. விசுவாசமும் நம்பிக்கையையும் பேசுவதற்குப் பதிலாக, தோல்வியை வாய்மொழியாகப் பேசத் தொடங்குகிறோம்: "இனி என்னால் இதைச் செய்ய முடியாது," "விஷயங்கள் ஒருபோதும் சிறப்பாக இருக்காது" அல்லது "நான் பயனற்றவன்." இவை வெறும் வார்த்தைகள் அல்ல - அவை நம்மை ஊக்கமின்மையிலும் நம்பிக்கையின்மையிலும் ஆழமாக மூழ்கடிக்கும் அறிவிப்புகள்.

நம்முடைய வார்த்தைகளில் இருக்கும் மகத்தான வல்லமையை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. நீதிமொழிகள் 18:21 கூறுகிறது, "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." இதன் பொருள், நாம் சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஜீவனையும் கொடுக்கலாம் அல்லது மரணத்தைக் கொண்டுவரலாம். நாம் தோல்வியின் வார்த்தைகளைப் பேசும்போது, ​​​​நாம் அடிக்கடி அதிக தோல்வியை அனுபவிக்கிறோம். ஆனால் நாம் நம்பிக்கையின் வார்த்தைகளைப் பேசும்போது, ​​​​இருண்ட தருணங்களில் கூட, நம் சூழ்நிலையில் நுழைவதற்கு தேவனின் ஜீவன் தரும் வல்லமைக்கான கதவைத் திறக்கிறோம்.

இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: தேவன் உலகைப் படைத்தபோது, ​​அவர் அதை வார்த்தைகளால் உருவாக்கினார். அவர், "வெளிச்சம் உண்டாவதாக" என்று கூறினார், அங்கே வெளிச்சம் உண்டானது. நமது வார்த்தைகள் வெறும் சத்தம் அல்ல - அவை உருவாக்கும் வல்லமை கொண்டுள்ளன. நாம் தேவனின் வாக்குத்தத்தங்களுடன் ஒத்துப் பேசும்போது, ​​நாம் அவருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறோம், அவருடைய வல்லமை நம் வாழ்வில் செயல்பட அனுமதிக்கிறோம். ஆனால் நாம் எதிர்மறையாகப் பேசும்போது, ​​சத்துருவின் பொய்களை ஒப்புக்கொள்கிறோம், பயம், சந்தேகம் மற்றும் விரக்தி ஆகியவற்றைப் பிடிக்க இடமளிக்கிறோம்.

போராட்டக் காலங்களில், நம் நாவைக் காத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அநேக நேரங்களில் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் நாம் பேசும் விதத்தை மாற்றுகிறது. எதிர்மறையான காரியங்களை நாம் எவ்வளவு அதிகமாகச் சொல்கிறோமோ, அவ்வளவு ஆழமாக அந்த எதிர்மறைக்கு செல்கிறோம் என்பதை உணராமல், நம் வலியை வார்த்தையாக சொல்ல ஆரம்பிக்கலாம். ஆனால் நம் உணர்ச்சிகள் நம்மை எதிர் திசையில் இழுத்தாலும் கூட, நம் வார்த்தைகளை மாற்றுவதற்கான ஒரு நனவான முடிவை இங்குதான் எடுக்க முடியும்.

எல்லாவற்ற்றிலும் மரணம் போல் உணர்ந்தாலும், ஜீவனை பேசுவதே முக்கியமானது. நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், நம்பிக்கையை அறிக்கை  செய்ய வேண்டும். இப்படிச் செய்வது எல்லாம் நன்றாக இருக்கிறது என்று பாசாங்கு செய்வது அல்ல - இது தேவனின் வாக்குத்தத்தங்களுடன் நம் வார்த்தைகளை சீரமைப்பது பற்றியது, அவருடைய வார்த்தைகள் நம் சூழ்நிலைகளை விட வல்லமை வாய்ந்தது என்று நம்புவது.

உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் சூழ்நிலையில் நீங்கள் பேசிய வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க இன்று நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வார்த்தைகள் ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கிறதா, அல்லது உங்கள் சூழ்நிலைகளில் மரணத்தைப் பேசுகின்றனவா? நீங்கள் விரும்பாவிட்டாலும், நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பின் வார்த்தைகளை பேச உங்களை சவால் விடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வார்த்தைகளுக்கு உங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கும் வல்லமை உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வாக்குத்தத்தங்களை அறிக்கை செய்ய வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பலவீனமாக உணரும்போது, ​​"என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவிநாளே மூலமாக என்னால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு" என்று சொல்லுங்கள் (பிலிப்பியர் 4:13). நீங்கள் கவலைப்படும்போது, ​​“எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் என் இருதயத்தையும் சிந்தையையும் காக்கும்” (பிலிப்பியர் 4:7) என்று அறிக்கைச் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளை வழிநடத்த தேவனுடைய வார்த்தையின் வல்லமையை அனுமதியுங்கள்.

அடுத்த ஏழு நாட்களுக்கு, குறிப்பாக கடினமான தருணங்களில் நீங்கள் பேசும் வார்த்தைகளை உணர்வுபூர்வமாக கண்காணியுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எதிர்மறையான அல்லது பிற்போக்காண வார்த்தைகளை ஏதாவது ஒன்றைச் சொல்லும்போது, ​​அதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வேதவசனத்திலிருந்து ஒரு நேர்மறையான வசனத்தை அறிக்கையீடுங்கள். காலப்போக்கில், உங்கள் வார்த்தைகளில் இந்த மாற்றம் உங்கள் சவால்களை நீங்கள் அனுபவிக்கும் விதத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
ప్రార్థన
ஆண்டவரே, நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என் நாவை பாதுகாத்துக்கொள்ளும், ஜீவனை பேசவும் எனக்கு உதவும். என் வார்த்தைகளின் வல்லமையை எனக்கு நினைவூட்டும் , குறிப்பாக காரியங்கள் கடினமானதாக இருக்கும்போது, என் வாழ்க்கையில் உமது வாக்குத்தத்தங்களை அறிக்கை செய்ய எனக்கு வழிகாட்டும். உமது வார்த்தையிலும் அந்தவார்த்தை தரும் ஜீவனிலும் நான் விசுவாசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● புளிப்பில்லாத இதயம்
● நாள் 26: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● பழி மாறுதல்
● விசுவாசத்தில் அல்லது பயத்தில்
● மன்னிக்காத தன்மை
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
● மற்றொரு ஆகாப் ஆக வேண்டாம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్