english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. தள்ளிப்போடும் எண்ணத்தை கொண்டுவரும் ராட்சதனை கொல்வது
అనుదిన మన్నా

தள்ளிப்போடும் எண்ணத்தை கொண்டுவரும் ராட்சதனை கொல்வது

Sunday, 26th of January 2025
0 0 776
Categories : தள்ளிப்போடுதல் (procrastination)
“இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”நீதிமொழிகள்‬ ‭24‬:‭33‬-‭34‬ ‭

மேற்கண்ட வசனங்களில் 3 'இன்னுங்கொஞ்சம்' என்று இருப்பதைக் கவனியுங்கள்

மேலோட்டமாகப் பார்த்தால், இன்னுங்கொஞ்சம் என்றுசொல்லும்போது அதுபெரியாதாக தெரியவில்லை என்றாலும், 'இன்னுங்கொஞ்சம்' காரியங்களில் ஈடுபடுவதன் மூலம், அந்த நாள் முடிந்து, உண்மையான வேலைக்கான நேரம் முடிந்துவிடுகிறது. வயல் முட்களால் நிரம்பியுள்ளது, மனிதன் தனது இன்பத்தின் விளைவுகளான வறுமையை அனுபவிக்கிறான் - வறுமை. ஒருவர் இப்படி சொன்னார், "இன்னுங்கொஞ்சம் என்று தள்ளிப்போடுவதால்தான் மனிதர்கள் தங்கள் ஆத்துமாவை கெடுக்கிறார்கள்."

சோதோம் கொமோராவை அழிக்க வந்த தேவதூதர்கள், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க விரைவாக வெளியேற வேண்டும் என்று லோத்துக்குத் தெளிவாகக் கூறப்பட்டது. அவர்களுக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, அவர் தாமதித்தார். அவர் விஷயங்களைத் தாமதப்படுத்தினார். தேவனுடைய கிருபையால், தேவதூதர்கள் அவரையும், அவர் மனைவியையும், மகள்களையும் கைப்பிடித்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். (ஆதியாகமம் 19:15-16 பார்க்கவும்)

நாம் தள்ளிப்போடும்போது, ​​​​ஒரு முடிவை மட்டுமே தள்ளிப்போடுகிறோம் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். உண்மையில், தள்ளிப்போடுவதற்கான அடிப்படைக் காரணம் கவனக்குறைவும் சோம்பலும்தான். நாம் தள்ளிப்போடும்போது, ​​முடிவெடுப்பதற்குப் போதுமான தகவல் நம்மிடம் இல்லாததால் அல்ல. பெரும்பாலும், என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காக அதைச் செய்ய நாம் நினைக்கவில்லை.

தொடர்ந்து தள்ளிப்போடுவதில் ஈடுபடுவதன் மூலம், அது ஒரு பழக்கமாகி இறுதியில் உங்கள் குணத்தின் ஒரு பகுதியாக மாறும்.

முடிவெடுக்கும் போது, ​​எப்படியாவது காரியங்கள் தாங்களாகவே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், தாமதமாகும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். உண்மையில், இது ஒருபோதும் நடக்காது.

அப்படிப்பட்டவர்கள் உணராதது என்னவென்றால், ஒரு முடிவை எடுக்காமல், அவர்கள் ஒரு முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் செயல்படத் தவறுவது பொதுவாக நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

வேதம் நம்மை தலைப்போடுவாதின் ஆபத்தை எச்சரிக்கிறது, “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.”
எபிரெயர்‬ ‭3‬:‭15‬ ‭

சாத்தானுக்கு பிடித்த வார்த்தை "நாளை". நாளை வரை தனது இரட்சிப்பைப் பற்றி யோசிப்பதைத் தள்ளிப்போட ஒருவரைப் பெற முடிந்தால், அவர் வெற்றியடைகிறான். மறுபுறம், 'இன்று' என்ற வார்த்தை தேவனுடைய இதயத்திற்கு மிகவும் பிடித்தது.

பெலிக்ஸ் என்ற ரோமானிய அதிகாரி, அவனுடைய கதையை அப்போஸ்தலர் 24:22-27 இல் காண்கிறோம். பெலிக்ஸ் மற்றும் அவனது மனைவி ட்ருசில்லா, தாமதப்படுத்தியதால் இரட்சிப்புக்கான வாய்ப்பை இழந்தனர்.

பேலிக்ஸ் அப்போஸ்தலனாகிய பவுலுக்குப் பதிலளித்தான், “இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.”
அப்போஸ்தலர்‬ ‭24‬:‭25‬ ‭

'நாளை' என்பது மிகவும் ஆபத்தான வார்த்தை, ஏனென்றால் அது பலரின் கனவுகளைப் பறித்துவிடுகிறது. இது மாணவர்களின் தொழில் வாய்ப்புகளையும், தகப்பன் மற்றும் தாய்மார்களின் குழந்தைகளுடனான உறவுகளையும் பறிக்கிறது.

தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் கற்றுக்கொண்டவற்றின்படி செயல்படத் தொடங்கவில்லை என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றும் யாக்கோபு கூறுகிறார். (யாக்கோபு 1:22) வார்த்தைக்கு உடனடியாகக் கீழ்ப்படிய முடிவு செய்யுங்கள். தாமதியாதேயுங்கள (தள்ளிப்போடாதேயுங்கள்)

Bible Reading: Exodus 23-25
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் என்னை உமக்குக் கீழ்ப்படிகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறேன். தள்ளிப்போடுதல் மற்றும் குழப்பத்தின் ஆவியை இப்போது என் வாழ்க்கையை விட்டு வெளியேறும்படி நான் கட்டளையிடுகிறேன்.

Join our WhatsApp Channel


Most Read
● உங்களை வழிநடத்துவது யார்?
● ஆவியின் கனியை எவ்வாறு வளர்ப்பது -2
● மறக்கப்பட்டக் கட்டளை
● உங்கள் திருப்புமுனையைப் பெறுங்கள்
● நிச்சயமற்ற காலங்களில் ஆராதனையின் வல்லமை
● பிடித்தவை அல்ல ஆனால் நெருக்கமானவை
● கடந்த காலத்தின் அலமாரியைத் திறக்கிறது
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్