english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. நீதியின் வஸ்திரம்
అనుదిన మన్నా

நீதியின் வஸ்திரம்

Tuesday, 4th of February 2025
0 0 329
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
“துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத்தரித்துக்கொள்ளுங்கள்.” (ரோமர்‬ ‭13‬:‭14‬ ) 

ஆடை என்பது உடலை மறைக்கும் ஆடை மட்டுமல்ல; நாம் எங்கு செல்கிறோம் என்பதையும் இதுகுறிக்கிறது. ஒரு நபர் எங்கு செல்கிறார் என்பதை அவரது ஆடை மூலம் நீங்கள் யூகிக்க முடியும். எங்களிடம் சில ஆடைக் குறியீடுகளுடன் சில நிகழ்வுகள் உள்ளன, குறிப்பாக கார்ப்பரேட்அமைப்புகளில் நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள். விழாவுக்காக ஆடை அணிந்தவர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள் என்பதை இது குறிக்கிறது.

மற்ற நிகழ்வுகளைப் போலவே, ராஜாக்கள் முன் தோன்றுவதற்கும் சில ஆடைகள் உள்ளன. எஸ்தரும் மற்ற எல்லாப் பெண்களும் தங்களுக்குப் பிடித்ததை அணியவில்லை; அதனால்தான்அவர்கள் ராஜாவுக்கு முன்பாகத் தோற்றமளிக்கும் வகையில் அவர்களுக்கு அலங்காரம் செய்ய ராஜாநியமித்த அதிகாரியாய் அவர்களுடன் வைத்திருந்தார்கள். அரண்மனையின் ஆடைக் குறியீட்டைபெண்கள் கடைப்பிடிப்பதை ராஜாக்களின் அதிகாரி உறுதி செய்வார். ஆனால் எஸ்தரின் இடத்தில் இருந்த வித்தியாசம் என்ன? அவள் வெறும் ஆடையை மட்டும் அணிந்திருக்கவில்லை; அவளுடைய இதயம் நீதியின் ஆடையால் தரிக்கப்பட்டு இருந்தது.

உண்மை என்னவென்றால், சுயநீதியின் ஆடையில் இருந்து எடுக்கும் ஆடைகள் கிறிஸ்து இயேசுவில் உள்ள நீதியுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. பெரும்பாலும், நாம் சுயமாக உருவாக்கிய நீதியின்காரணமாக நாம் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்று நினைக்கிறோம், மாறாக, கிறிஸ்துவின் மூலம்நாம் நீதியை அணிந்திருக்கும்போது மட்டுமே தேவன் நம்மை ஏற்றுக்கொள்கிறார்.

எஸ்தர் இருந்த வண்ணம் அவள் ஏற்றுக்கொள்ளப்பட்டவள் அல்ல. அது அவள் அசுத்தமாக இருந்ததாலோ அல்லது துர்நாற்றம் வீசுவதனாலோ அல்ல, ஆனால் அவளின் சிறந்தது ராஜாவுக்குபோதுமானதாக இல்லாததால். அவளிடத்தில் வித்தியாசமான நறுமணம் வீசியதின் காரணம், வித்தியாசமான வாசனையை கொண்டவளாக இருந்தாள். நீங்கள் என்ன ஆடையை அணிந்திருக்கிறீர்கள்?

கர்த்தராகிய இயேசு ஒரு உவமையைப் போதித்தார், மத்தேயு 22:8-14, “அப்பொழுது, அவன் தன்ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோஅதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிறயாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர்புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும்கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளிகளைப்பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனைஅங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்றுகேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிறபுறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.”

ராஜா ஒரு விருந்து செய்து பலரையும் தன் அறுசுவை உணவை உண்ண அழைத்தான். ராஜா பல்வேறு பகுதிகள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த பெண்களுக்கு ராணிக்கான போட்டியைத்திறந்தது போலவே அவரது ஊழியர்கள் மக்களை விருந்துக்கு அழைத்தனர். ஆனால் ஒரு மனிதன்முதலில் நுழைவதற்குத் தேவையான ஆடையை அணியாமல் விருந்துக்கு வந்தான். தான் விரும்பியதை அணிந்துகொண்டு ராஜா முன் தோன்றலாம் என்று உணர்ந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவன் ராஜாவின் முன்னிலையில் இருந்து வெளியேற்றப்பட்டான் . ஆம், பலர் அழைக்கப்பட்டனர், ஆனால் நீதியின் வஸ்திரம் அணிந்திருந்தவர்கள் மட்டுமே ராஜாவுக்கு முன்பாக நிற்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நண்பர்களே, நீங்கள் என்ன வகையான ஆடையை அணிந்திருக்கிறீர்கள்? நீங்கள் நீதியின் ஆடையையா அல்லது பெருமையின் ஆடையையா அணிந்திருக்கிறீர்களா? அது தூய்மையின் ஆடையையா அல்லது நேர்மையின் ஆடையா? லூக்கா அதிகாரம் 18 ஆம் அதிகாரத்தில், ராஜாவுக்கு முன் வந்த இரண்டு மனிதர்களைப் பற்றி எடுத்துக்கொள்கிறது, அவர்களில் ஒருவன் வசனங்கள் 11-12 இல், "“பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.” இந்த மனிதனின் ஜெபத்தை நிராகரித்ததாக இயேசு கூறினார். ஒப்பிடுகையில், கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொண்ட மற்ற மனிதர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்,

“மாசில்லா சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்”

அது போலவே, ராஜாவின் சந்நிதியில் பிரவேசிக்க, இயேசுவின் இரத்தத்தில் தோய்ந்த ஒரு வஸ்திரத்தை உடுத்திக்கொள்ள வேண்டும். பாவத்தின் ஆடையைக் களைந்து, ஆண்டவர்இயேசுவை உடுத்துங்கள்.

Bible Reading: Leviticus 10-12
ప్రార్థన
பிதாவே, உம்முடைய முடிவில்லா கிருபைக்கு நன்றி. நான் இருக்கிறவண்ணமே உம்மிடம் வருகிறேன், நீர் என்னைச் சுத்திகரித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் என்னைச் சுத்திகரிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இன்று நான் என் ஆடையை உம் முன் வைத்து, உம் விலையேறப்பெற்ற இரத்தம் என்னைச் சுத்திகரித்து, என்னை முழுமையடையச் செய்ய ஜெபிக்கிறேன். இனிமேல், நான் ராஜாவுக்கு முன்பாக நிராகரிக்கப்படமாட்டேன், ஆனால் எஸ்தரைப் போன்றபார்வையாளர்களைப் பெறுவேன். இயேசுவின் நாமத்தில் ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● அவருடைய நீதியை அநிந்திரிக்கிறோம்
● தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்ற பிறகு என்ன செய்வது?
● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 4
● அவர்கள் சிறிய இரட்சகர்கள்
● தேவ வகையான விசுவாசம்
● மனித இயல்பு
● விதை பற்றிய திடுக்கிடும் உண்மை
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్