english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. அசுத்தஆவிகளின் நுழைவுவாயலை அடைதல் - III
అనుదిన మన్నా

அசுத்தஆவிகளின் நுழைவுவாயலை அடைதல் - III

Monday, 3rd of March 2025
0 0 375
Categories : ஆன்மீக போர் (Spiritual warfare) ஞானம் (Wisdom) பாவம்(Sin) மனந்திரும்புதல் ( Repentance) விடுதலை (Deliverance)
கலாத்தியர் 5:19-21 இல், அப்போஸ்தலனாகிய பவுல் மாம்சத்தின் செயல்களில் பொறாமை மற்றும் பெருமை ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார், இந்த எதிர்மறை உணர்ச்சிகள் ஒரு நபரின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும், காணக்கூடியவை மற்றும் கவனிக்கத்தக்கவை என்பதை வலியுறுத்துகிறார். யாரோ ஒருவர் தங்கள் இருதயத்தில் பொறாமை அல்லது பெருமையைக் கொண்டால், அது மறைக்கப்பட்ட உணர்ச்சி அல்ல, மாறாக அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் அடையாளம் காணக்கூடிய எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உணர்வு.

ஒரு நபர் தொடர்ந்து பெருமை அல்லது பொறாமைக்கு அடிபணியும்போது உண்மையான ஆபத்து எழுகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் கொலை செய்யும் அசுத்த ஆவி நுழைவதற்கு கதவைத் திறக்கிறது. இந்த இருண்ட சக்தி, பொறாமை என்ற பெயரில் மக்களை பயங்கரமான செயல்களைச் செய்யத் தூண்டுகிறது, இதனால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் மாற்ற முடியாத தீங்கு விளைவிக்கும்.

போர்க்களத்தில் தாவீதின் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட சவுலின் காரியமும் அதுதான். தாவீது தன் ராஜ்யத்தை பறித்துவிடுவான் என்று நினைத்தான்.

“அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.” ‭‭1 சாமுவேல்‬ ‭18‬:‭7‬-‭10‬‬‬

தாவீதை மக்கள் புகழ்ந்ததன் மூலம் ராஜா சவுலில் எழுந்த பொறாமையின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்தது, அதுமுதல் அவர் தாவீதை ஒழிப்பதில் வெறித்தனமாக மாறிnaan. அவனுடைய அனைத்தையும் நுகரும் பொறாமை, ஒரு கொடூரமான கொலை ஆவிக்கான கதவைத் திறந்தது, இது தாவீதின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவனது உறுதியைத் தூண்டியது, கட்டுப்பாடற்ற பொறாமையின் அழிவு சக்தியை வெளிப்படுத்தியது.

காயீனின் காணிக்கையால் தேவன் அதிருப்தி அடைந்தார், ஆனால் காயீனின் சகோதரர் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டபோது காயீனுக்கும் இதேபோன்ற ஒரு விஷயம் நடந்தது. பொறாமையும் கோபமும் நிறைந்த காயீன் தன் சகோதரனைக் கொன்றான். (ஆதியாகமம் 4:1-8ஐப் பார்க்கவும்.) இறுதியில், பொறாமை எப்போதும் கோபத்தின் பொருளைக் கொல்ல விரும்புகிறது.

எனவே, சவுலில் கொலை ஆவிக்கான நுழைவுப் புள்ளி பொறாமையின் பாவம். சவுல் இந்தப் பாவத்திலிருந்து ஒருபோதும் மனந்திரும்பவில்லை, மேலும் அவன்  மற்ற தீவிர வழிகளில் தேவனுக்கு  கீழ்ப்படியவில்லை, மேலும், சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் கர்த்தரின் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற மறுத்துவிட்டான் (1 சாமுவேல் 13:1-14; 15:1-22) (1 சாமுவேல் 28:3-19).

ஒருவரின் உடல் உயிரை எடுக்க விரும்புவதைத் தாண்டி கொலையின் ஆவி நீண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்; இது அவர்களின் தன்மை, நற்பெயர் மற்றும் செல்வாக்கை அழிக்கும் விருப்பத்தையும் உள்ளடக்கியது. மற்றொரு நபரின் மீது பொறாமை ஏற்படும் போது, ​​​​அவரது மரணத்தை நீங்கள் விரும்ப வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் அல்லது அவர்களின் வெற்றியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் நீங்கள் செயல்கள் அல்லது நடத்தைகளில் ஈடுபடலாம். ஒருவர் மீது வெறுப்பு அல்லது நியாயமற்ற கோபத்தை வைத்திருப்பது நம் இருதயங்களில் கொலை செய்வதற்கு சமம் என்று வேதம் போதிக்கிறது.

“கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.” மத்தேயு‬ ‭5‬:‭21‬-‭22‬ ‭

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: “நான் யாரையும் பார்த்து பொறாமைப்படுகிறேனா? வேறொரு நபரின் பரிசுகளைப் பற்றியோ அல்லது தேவனின் கிருபையையோ அல்லது அவர் மீது  தேவனின் ஆசீர்வாதங்களையோ நான் பொறாமைப்படுகிறேனா? இந்த நபர் உங்களை விட வெற்றிகரமானவராகவோ, அதிக அபிஷேகம் செய்யப்பட்டவராகவோ அல்லது சிறந்த தோற்றமுடையவராகவோ தோன்றலாம். நீங்கள் எந்த வகையிலும் தலைமைப் பதவியில் இருந்தால், உங்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஒருவரைப் பற்றியோ அல்லது உங்கள் அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஒருவரைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படுகிறீர்களா?

உங்கள் பொறாமைக்கான குறிப்பிட்ட காரணத்தைப் பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் வரும் பொறாமை கொலையின் ஆவிக்கான கதவைத் திறக்கும் என்பதை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன். மனந்திரும்பி, சவுலின் சாபத்திற்கு ஆளாகாமல் ஓடிப்போங்கள்! தேவனுக்கு கீழ்ப்படிவதன் மூலமும், ஆவியின் பலனை உங்கள் வாழ்வில் வளர்த்துக்கொள்வதன் மூலமும் இந்த அசுத்த ஆவியை உடனடியாகத் துரத்தவும், இந்த அணுகலை நிரந்தரமாகத் தடுக்கவும் முடிவெடுடுங்கள்.

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” கலாத்தியர்‬ ‭5‬:‭22‬-‭23‬ 

‭Bible Reading: Deuteronomy 7-9
ప్రార్థన
பிதாவே, எனக்கு மனத்தாழ்மையின் பரிசைக் கொடுங்கள், அதனால் நான் என் சொந்த பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டு பொறாமை இல்லாமல் மற்றவர்களின் பரிசுகளையும் திறமைகளையும் பாராட்டுகிறேன். உமது அன்பால் என் இருதயத்தை நிரப்புங்கள், நீங்கள் என்னை நேசிப்பதைப் போல நானும் மற்றவர்களை நேசிப்பேன், பிரிவினையை விட ஒற்றுமைக்காக பாடுபடுவேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● பாலங்கள் கட்டும், தடைகள் அல்ல
● மன்னா, கற்பலகைகள் மற்றும் கோல்
● மனிதனின் இதயம்
● யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - 1
● உங்கள் இரட்சிப்பின் நாளைக் கொண்டாடுங்கள்
● நாள் 22: 40 நாட்கள் உபவாச
● அவர்களை இளமையாகப் இருக்கும்போதே பிடிக்கவும்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్