english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. மன்னிக்காத தன்மை
అనుదిన మన్నా

மன்னிக்காத தன்மை

Wednesday, 2nd of April 2025
0 0 310
Categories : நம்பிக்கைகள்(Beliefs) மனம் ( Mind) மாற்றம்(transformation)
”ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” கொலோசெயர் 3:16

யாராவது உங்களை புண்படுத்தும் அளவுக்கு நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். ஆம், ஜனங்கள் எப்போதும் உங்களை எரிச்சலூட்டலாம். உங்களைப் புண்படுத்தும் செயல்களை நீங்கள் செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், ஆனால் உங்களோடு பேசுவதையோ அல்லது உங்களை நேசிப்பதையோ அவர்கள் நிறுத்தவில்லை. மன்னிப்பு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையானது. நம் மீட்பின் அடிப்படை தேவன் நம்மை மன்னிப்பதாகும். ஆம், ஜனங்கள் எரிச்சலூட்டலாம், காயம் ஆழமாக இருக்கலாம், ஆனால் எப்படியும் மன்னிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இது மிகவும் உண்மை, ஏனென்றால் நீங்கள் எவ்வளவு புண்படுத்தப்பட்டாலும், தேவனுக்கு முன்பாக நாம் செய்த குற்றம் அதிகமாக உள்ளது, ஆனால் அவர் நம்மை மன்னித்தார்.

மத்தேயு 18:21-35 ல், கர்த்தராகிய இயேசு மன்னிப்பைத் தடுத்து நிறுத்துவதை ஒருசுவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு ஒப்பிட்டார். மன்னிக்காதது என்பது நம் மனதில் கட்டியிருக்கும் ஒரு மதிலை போன்றது. மத்தேயு 6:14-15ல் இயேசு சொன்னார், 14. “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15.மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” நாம் மன்னிக்க முடியாத நிலையில் வாழும்போது,  தேவனின் மன்னிப்பை நம் வாழ்விலிருந்து தடுக்கிறோம்.

முரண்பாடாக, மன்னிக்க மறுப்பவர் அவர்கள் கட்டிய மதில்களுக்கு பின்னால் சிக்கிக் கொள்கிறார்கள். எபேசியர் 4:32ல், கிறிஸ்து நம்மை மன்னித்தது போல் ஒருவரையொருவர் மன்னித்து, ஒருவருக்கொருவர் கருணையோடும் இரக்கத்தோடும் இருக்கஅப்போஸ்தலனாகிய பவுல் நமக்குக் கற்றுக் கொடுத்தார். எபேசியர் 4:32ல், 32. “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர்மன்னியுங்கள்.”

 மன்னிக்க முடியாத இந்த சிறையில் நான்கு சுவர்கள் உள்ளன.

1. பழிவாங்கும் மதில்
இங்குதான் நமக்கு அநீதி இழைத்தவர்களை பழிவாங்க வேண்டும் என்ற ஆசையை நாம் பிடித்துக் கொள்கிறோம். இது மூன்று வெவ்வேறு வழிகளில் வெளிப்படும்: நாம் சம பலத்துடன், அதிக வல்லமையுடன் அல்லது குறைவான பதிலடியுடன் பதிலளிக்க விரும்பலாம். எதுவாக இருந்தாலும், இவை மூன்றும் பழிவாங்கும் வடிவங்கள். சிலர் பழிவாங்கும் செயலைத் திட்டமிட்டு வருடக்கணக்கில் செலவழித்து, பழிவாங்கும் வரை எதிலும் நிறைவைக் காண மாட்டார்கள். தன் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அம்னோனை மன்னிக்காத அப்சலோமைப் பற்றி வேதம் பேசுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் வாய்ப்பைப் பார்த்தார். பழிவாங்கத் திட்டமிடும்போது ஒரு மனிதன் எவ்வளவு தண்டிக்கப்பட்டிருப்பான் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

2.மனக்கசப்பு என்ற மதில்
இங்குதான் நாம் நம் இருதயங்களில் கசப்பைப் பிடித்துக் கொண்டு, குற்றத்தின் காயத்தை மீண்டும் மீண்டும் உணர்கிறோம். உங்களை புண்படுத்தும் ஒருவரைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? நீங்கள் அவர்களை நன்றாக விரும்புகிறீர்களா, அல்லது நீங்கள் கோபப்படுகிறீர்களா? முற்றிலும் எரிச்சல் உணர்வு உங்களுக்குத் தெரியும், மேலும் காயம் மீண்டும் திறக்கிறது. மனக்கசப்பு நம் இருதயங்களை மகிழ்ச்சியின் முழுமையை அனுபவிப்பதிலிருந்து தடுக்கிறது.

3. வருத்தத்தின் மதில்
இங்குதான் கடந்த காலத்தை மாற்றியமைத்து, குற்றம் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்று நாம் நம்புகிறோம். "என்னால் ஏதாவது செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் அல்லது செய்திருக்கலாம்" என்று நாம் நினைக்கலாம்.

4. எதிர்ப்பின் மதில்
நான்காவது மதில் ஆசீர்வாதத்தை எதிர்க்கிறது. இங்குதான் நாம்குற்றவாளியை தேவனுக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக வாழ்த்த மறுக்கிறோம். மன்னிக்காததின் விளைவின் உச்சம் இது. ஒரு நபர் தேவனி டமிருந்து ஆசீர்வாதங்களை தனக்காக விரும்புகிறார் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம், ஆனால் அவரது அண்டை வீட்டாருக்கு அல்ல.

உங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதத்தை நீங்கள் விரும்புகிறீர்களா? ஒவ்வொரு மன்னிப்பின்மையிலிருந்தும் உங்கள் இருதயத்தை விடுவியுங்கள், அதனால் தேவனின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் சுதந்திரமாகப் வந்தடையும். அந்த நபரிடம் சென்று நீங்கள் அவரை மன்னித்துவிட்டீர்கள் என்று சொல்லுங்கள். உங்களை காயப்படுத்துபவர்களுடன் சமாதானம் செய்யுங்கள்; அப்போது உங்கள் வாழ்க்கையில் தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.

Bible Reading: 1 Samuel 4-7


ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வார்த்தையின் உண்மைக்கு நன்றி. மன்னிப்பில் நடக்க நீர் எனக்கு உதவும்படி பிரார்த்திக்கிறேன். ஜனங்கள் அவர்களின் கண்ணோட்டங்களை தழுவும் சதையான இருதயத்திற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் உம் மன்னிப்பைப் பெறுவதற்கும், ஒவ்வொரு காயத்தையும் போக்க கிருபைபுரிய பிரார்த்திக்கிறேன். இனி என் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● எவ்வளவு காலம்?
● நாள் 19: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● நற்செய்தியை சுமப்பவன்
● பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-2
● கெட்ட மனப்பான்மையிலிருந்து விடுதலை
● அவருடைய நீதியை அநிந்திரிக்கிறோம்
● சரணடைவதில் உள்ள சுதந்திரம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్