english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உங்கள் விசுவாசத்தை சமரசம் செய்யாதீர்கள்
అనుదిన మన్నా

உங்கள் விசுவாசத்தை சமரசம் செய்யாதீர்கள்

Friday, 18th of April 2025
0 0 247
Categories : விசுவாசம் ( Faith)
“நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” யோவான்‬ ‭17‬:‭14‬-‭16‬ ‭

கிறிஸ்தவர்களாகிய நாம் உலகத்தில் இருக்க அழைக்கப்படுகிறோம், ஆனால் உலகத்தாரல்ல. (யோவான் 17) நாம் நமது அண்டை வீட்டாரை, நமது எதிரிகளை கூட நேசிக்க அழைக்கப்படுகிறோம், ஆனால் நமது மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடன் நாம் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

இன்றைய உலகில், கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை மதிக்காத, அவர்களுடைய நம்பிக்கைகளுக்காக அவர்களைத் துன்புறுத்தும் நபர்களுடன் வேலை செய்வது அல்லது அவர்களைச் சுற்றி இருப்பது அதிகரித்து வருகிறது. இது கிறிஸ்தவர்களுக்கு சவாலாக இருக்கலாம், ஏனெனில் இது அவர்களின் ஆவிக்குரிய பகுத்தறிவையும் தேவனுடனான நமது நடையையும் பாதிக்கலாம். இதன் பொருள் நாம் உலகத்திலிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல, மாறாக நாம் எப்படிப்பட்டவர்களோடு இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

சமரசம் என்பது உங்களுக்கு சரியானது என்று தெரிந்ததை விட சற்று கீழே செல்வதை உள்ளடக்குகிறது. வேதம் இத்தகைய சமரசங்களை "திராட்சைக் கொடியைக் கெடுக்கும் சிறு நரிகள்" (சாலொமோனின்  உன்னதப்பாட்டு 2:15) என்று குறிப்பிடுகிறது. இதனால்தான் நமது உண்மைத்தன்மை, குறிப்பாக சிறிய விஷயங்களில், மிகவும் முக்கியமானது.

தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
‭‭தானியேல்‬ ‭6‬:‭10‬ ‭

உண்மைத்தன்மை எவ்வாறு பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதற்கு தானியேலின் கதை ஒரு பிரதான உதாரணம். மரண அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதிலும், தானியேல் தனது நம்பிக்கைகளை சமரசம் செய்ய மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் பெர்சியாவின் மிகவும் வல்லமை வாய்ந்த மனிதர்களில் ஒருவராக மாறுவதற்கான கதவைத் திறந்தார்.

சமரசம் செய்ய மறுக்கும் ஒரு நபர், வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகளுடன் தேவன்  நம்பக்கூடிய ஒருவராக இருப்பர். அப்படிப்பட்ட நபர்களை தேவன் மட்டும் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக முதலாளிகளாக இருந்தாலும் சரி, சக ஊழியர்களாக இருந்தாலும் சரி, சக வேலையாளாக இருந்தாலும் சரி மற்றவர்களும் கவனம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

யாக்கோபு‬ ‭4‬:‭4‬ எச்சரிப்பது போல், "“ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” என்று எச்சரிப்பது போல், சமரசம் செய்துகொள்வது தொலைந்து போன மற்றும் இறக்கும் உலகத்திற்கான உங்கள் சாட்சியை அழிக்கக்கூடும். கிறிஸ்தவர்களாகிய, நம்முடைய இரட்சிப்பு, சத்தியத்தைப் பற்றிய அறிவு மற்றும் உன்னதமான தேவனின் பிள்ளைகளாக ஆசீர்வதிக்கப்பட்ட நிலை ஆகியவற்றுடன் வரும் ஒரு பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள மக்களை நாம் நிச்சயமாக மதிக்க வேண்டும் என்றாலும், நம்முடைய வேதாகம மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை நாம் சமரசம் செய்யக்கூடாது.

Bible Reading: 2 Samuel 16-18
ప్రార్థన
அன்பான பிதாவே, உமது வார்த்தை கடினமாகவோ அல்லது விரும்பத்தகாததாகவோ தோன்றினாலும் சமரசம் செய்வதை மறுக்க எனக்கு கிருபைத் தாரும்.
உங்கள் பார்வையில் நான் நம்பகமானவனாக இருக்க விரும்புகிறேன். இந்த இருண்ட உலகில் பிரகாசமாக பிரகாசிக்கும் உமது அன்பின் உண்மையை பிரதிபலிப்பாக என் வாழ்க்கையை மாற்றும். இயேசுவின் நாமத்தில், ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● சிறந்து விளங்குவது எப்படி
● உறவுகளில் கனத்துக்குரிய பிரமாணம்
● நன்றி செலுத்தும் வல்லமை
● ஞாயிறு காலை தேவாலயத்திற்கு சரியான நேரத்தில் இருப்பது எப்படி
● ஜீவ புத்தகம்
● தெளிந்த புத்தி ஒரு ஈவு
● தேவன் உங்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్