english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அரணான இடங்களைக் கையாளுதல்
అనుదిన మన్నా

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அரணான இடங்களைக் கையாளுதல்

Saturday, 19th of April 2025
1 0 264
Categories : விடுதலை (Deliverance)
கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை அனுபவிக்க விரும்புகிறோம். இருப்பினும், உண்மை என்னவென்றால், அந்த ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பதற்கு பெரும்பாலும் அரணான கோட்டைகள் கையாளப்பட வேண்டும். சில புதிதாய் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களையும், ஆவிக்குரிய யுத்தங்களையும் தங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது அவர்கள் ஏமாற்றமடையலாம்.
 
அவர்கள் எப்படி இருக்கிறார்கள், “அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், 17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.” மாற்கு 4:16-17., ஆசீர்வாதங்களுக்கு முந்திய யுத்தங்கள் உள்ளன என்பதை அவர்கள் உணர்வது இல்லை.
 
யோசுவா 1:3-ல், இஸ்ரவேலர்கள் கால் வைக்கும் எவ்விடத்தையும் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று தேவன் வாக்குப்பண்ணினார். இருப்பினும், இந்த வாக்குத்தத்தமானது அவர்கள் கீழ்ப்படிதல், நிலத்தில் வசிக்கும் எதிரிகளை விரட்டுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருந்தது. எண்ணாகமம் 33:55-ல், நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத்
 துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள் என்று தேவன் எச்சரித்தார்.
 
அவ்வாறே, நம்முடைய வாழ்வில், தேவன் நமக்கு வாக்குத்தந்துள்ள ஆசீர்வாதங்களை நாம் முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால், ஆவிக்குரிய அரண்களை கையாள வேண்டும். இந்த அரண்கள் அடிமையாதல், எதிர்மறை சிந்தனை முறைகள், பயம் அல்லது ஆரோக்கியமற்ற உறவுகள் போன்ற பல்வேறு வடிவங்களை எடுக்கலாம். அரண்கள் எதுவாக இருந்தாலும், அதை நாம் உணர்ந்து அதை முறியடிக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
 
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது 2 கொரிந்தியர் 10:4 சொல்கிறது. அரண்களுக்கு எதிரான யுத்தத்தில் நமது மிகப்பெரிய ஆயுதம் ஜெபமும் தேவனின் வார்த்தையும் ஆகும். நாம் ஜெபத்திலும், தேவனுடைய வார்த்தையைப் வாசிப்பதிலும் நேரத்தைச் செலவிடும்போது, நம் வாழ்வில் உள்ள அரண்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய முடிகிறது.
 
கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம் வாழ்வில் நிறைவேறுவதைத் தடுக்கும் ஒரு எதிரி நமக்கு இருப்பதை அங்கீகரிக்க வேண்டும். இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற காத்திருக்கும் காலங்களில், நாம் மனம் தளரக்கூடாது. மாறாக, எதிரியின் தந்திரங்களுக்கு எதிராக தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை பயன்படுத்தி ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட வேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு யுத்தமும் இறுதியில் ஒரு ஆசீர்வாதத்திற்கு வழிவகுக்கும் என்று விசுவாசிப்போம். அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார்: "குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம் பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. " (1 தீமோத்தேயு 1:18)
 
ஆவிக்குரிய யுத்தங்கள் பலவீனமாய் இருப்பதோ அல்லது அவிசுவாசமோ அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உண்மையில், நாம் நமது விசுவாசத்தில் வளர்ந்து முதிர்ச்சியடைந்து வருகிறோம் என்பதற்கான அடையாளமாக அவை இருக்கலாம். நம் வாழ்வில் உள்ள அரண்களை நாம் கடக்கும்போது, நம் வழியில் வரக்கூடிய சவால்களைக் கையாள்வதற்கு நாம் பலமாகவும், தயாராகவும் மாறுகிறோம்.
 
யாக்கோபு 1:2-4ல், 2. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, 3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் யுத்தங்கள் மூலம் நாம் கிறிஸ்துவைப் போல வளருகிறோம்.
 
எனவே, நம் வாழ்வில் ஆவிக்குரிய அரண்களையும் யுத்தங்களையும் எதிர்கொள்ளும்போது நாம் சோர்வடைய கூடாது. மாறாக, நாம் கர்த்தரில் நம்பிக்கை வைத்து, அவற்றைக் கடக்க அவருடைய பலத்தில் சார்ந்திருப்போம். அவ்வாறு செய்யும்போது, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும்.
 
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9

Bible Reading: 2 Samuel 19
ప్రార్థన
பிதாவே, எதிரியின் தந்திரங்களுக்கு எதிராக நான் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடும்போது, உமது சத்தியத்தில் உறுதியாக நிற்க எனக்கு உதவும். உமது வல்லமையால் என்னை பலப்படுத்தி, நீர் வாக்களித்த ஆசீர்வாதங்களுக்கு என்னை வழிநடத்தும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● ஏழு மடங்கு ஆசீர்வாதம்
● தேவனோடு அமர்ந்திருப்பது
● உங்கள் விடுதலையை எப்படி வைத்திருப்பது
● ஆவியிலே அனலாயிருங்கள்
● உங்கள் நாள் உங்களை வரையறுக்கிறது
● அசுத்த ஆவிகளின் நுழைவிடத்தை மூடுதல் - II
● ஐக்கியம் மற்றும் கீழ்ப்படிதல் ஒரு தரிசனம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్