english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. சமாதானம் உங்களை எப்படி மாற்றும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
అనుదిన మన్నా

சமாதானம் உங்களை எப்படி மாற்றும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

Friday, 23rd of May 2025
0 0 322
Categories : சமாதானம் (Peace)
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான் 14:27
 
கர்த்தராகிய இயேசு சொன்னார், "என் சமாதானத்தை நான் உங்களுக்கு தருகிறேன்...." சமாதானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து நமக்குக் கிடைக்கும் ஈவு. அதை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பத்தை இது வெளிப்படுத்துகிறது. ஒருமுறை ஒருவர் சொன்னார், "இயேசு இதோ நம்மில் வசிப்பவராக இருக்க விரும்புவதில்லை, ஆனால் அவர் நம்மில் ஒருவராக இருக்க விரும்புகிறார்." செயல்பாடுகள் அல்லது பிரதிபலிப்பு வாழ்க்கை முறைகள் மூலம் உலகம் சமாதானத்தை தேடும் அதே வேளையில், எல்லா சமாதானத்திற்கும், ஆதாரமாக இருக்கும், இயேசுவில் மட்டுமே சமாதானம் காணப்படுகிறது என்பதை உணருங்கள்.
 
மீண்டும் இயேசு சொன்னார், "(சமாதானத்தை) உலகம் கொடுப்பது போல் நான் உங்களுக்குக் கொடுப்பதில்லை... உலகம் தரும் சமாதானம் பெரும்பாலும் சமரசம் மற்றும் கையாளுதலின் அடிப்படையிலானது. இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் சமாதானம் அவருடைய சிலுவை மரணத்தின் அடிப்படையிலானது.
 
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர் 1:20
 
கிறிஸ்து நமக்கு அளிக்கும் சமாதானம் தியாகமானது, அது அவருக்கு எல்லாவற்றையும் - அவருடைய வாழ்க்கையையே செலவழித்தது.
கர்த்தராகிய இயேசு மேலும் கூறினார், "உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படடாமலும் இருப்பதாக " 
பலர் பயம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் பிற மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக எனக்கு எழுதுகிறார்கள். இது அவர்களின் உடல்நிலையையும் அடிக்கடி பாதிக்கிறது. ஒரு இளைஞன் எனக்கு எழுதினார், சோதனையிலிருந்து தப்பிக்க தினமும் ஐந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள், சமாதானமே உங்களது பயம் அனைத்திற்கும் நிச்சயமான தீர்வு.
 
என் வாழ்வில் நான் தற்கொலைக்கு முயன்ற ஒரு காலம் உண்டு. நான் ஒரு ஜெப ஆராதனையில் கலந்துகொண்டேன், நான் ஆராதிக்கும்போது, ஜெபித்தேன், “ஆண்டவரே, நான் முடிவை அடைந்துவிட்டேன்; நான் உம்மிடம் சரணடைகிறேன்; தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” அந்த நேரத்தில், நான் எந்த தேவதூதர்களையும் தரிசனங்களையும் பார்க்கவில்லை, ஆனால் இந்த சமாதானம் என் இருதயத்தை நிரப்பியது. தற்கொலை எண்ணங்கள் அனைத்தும் மறைந்தன.
 
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், அப்போஸ்தலர் 10:34

Bible Reading: 1 Chronicles 29, 2 Chronicles 1-2
ప్రార్థన
 ஒவ்வொரு ஜெபக்குறிப்பையும் குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் பிரார்த்தனை செய்யப்பட வேண்டும்
  
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
சமாதானத்தின் தேவனே, என் ஜீவனை உமது கரங்களில் ஒப்புக்கொடு க்கிறேன்; இயேசுவின் நாமத்தில் என்னுடனே கூட இரும்.
 
குடும்ப இரட்சிப்பு
என் வாழ்க்கையிலும் குடும்ப உறுப்பினர்களிலும் அமைதியைத் தடுக்கும் ஒவ்வொரு வல்லமையையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும். உமது சமாதானம் என் வாழ்விலும் குடும்ப உறுப்பினர்களிலும் ஆளுகை செய்யட்டும்.
 
பொருளாதார முன்னேற்றம்
நானும் என் குடும்ப உறுப்பினர்களும் நீர்க்கால்களில் நடப்பட்ட மரங்களைப் போன்றவர்கள். நாங்கள் செய்யும் அனைத்தும் தேவனின் மகிமைக்காக செழிப்போம். (சங்கீதம் 1:3) நாம் சோர்ந்துபோக மாட்டோம், ஏனென்றால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியன் 6:9)
 
கேஎஸ்எம் சபை
பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் ஆகியோரின் சமாதானத்தை தடுக்கும் ஒவ்வொரு வல்லமையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்பட வேண்டும். உமது சமாதானம் அவர்கள் வாழ்வில் ஆட்சி செய்யட்டும்.
 
தேசம்
கர்த்தராகிய இயேசுவே, நீர் சமாதானபிரபு. எங்கள் தேசத்தின் எல்லை முழுவதும் சமாதானம் நிலவ பிரார்த்திக்கிறோம். எங்கள் தேசத்தின் ஒவ்வொரு நகரத்திலும் மாநிலத்திலும் உமது சமாதானம் ஆட்சி செய்ய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

Join our WhatsApp Channel


Most Read
● மன்னிப்பின் செங்குத்து மற்றும் கிடைமட்ட
● இரகசிய வருகையும் ரோஷ் ஹஷானாவும்
● அசுத்த எண்ணங்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி
● மலைகலும் பள்ளத்தாக்குகளின் தேவன் 
● தேவனுடைய ஏழு ஆவிகள்
● ஐக்கியதால் அபிஷேகம்
● நாள் 26: 40 நாட்கள் உபவாச ஜெபம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్