4 அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன் இதோ, இருக்கிறேன்
என்று சொல்லி,
5 ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன். என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு
அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். அவன் போய்ப்
படுத்துக்கொண்டான்.
6 மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார். அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன். என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப் போய்ப் படுத்துக்கொள் என்றான்.
(1 சாமுவேல் 3:4-6)
கர்த்தர் சாமுவேலை அழைத்தார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது, ஆனால் அவர் ஏலியின்
குரலைக் கேட்டார்.
இங்கே ஒரு ஆழமான ஆவிக்குரிய சத்தியம் உள்ளது.
ஏனென்றால் சாமுவேல் ஏலிக்கு தன்னை சமர்பணிந்திருந்தான்
நீங்கள் உங்களை சமர்ப்பிக்கும் தேவனுடைய ஊழியர்கள் ஆண் அல்லது பெண் அவர்கள் குரலில் நீங்கள் அடிக்கடி தேவனுடைய குரலைக் கேட்பீர்கள்.
(இப்போது சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியவில்லை, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.) (1 சாமுவேல் 3:7)
கர்த்தருடைய சத்தத்தை அங்கீகரிக்காததற்கு ஒரு காரணம், சாமுவேல் கர்த்தரை இன்னும்
நெருக்கமாக அறியாததுதான்.
இது இரண்டு வழிகள்;
நீங்கள் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும்போது, நீங்கள் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ள
ஆரம்பிக்கிறீர்கள்.
இன்று, சாமுவேல் தீர்க்கதரிசியை விட நாம் சிறந்தவர்களாக இருக்கிறோம், ஏனென்றால்
அவருடைய வார்த்தையான அவருடைய சத்தம் நம்மிடம் உள்ளது.
சாமுவேல் தீர்க்கதரிசிக்கு அது இல்லை.
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.(1 சாமுவேல் 3:13)
ஏலிக்கு ஓப்னி மற்றும் பினேகாஸ் என்ற இரண்டு பொல்லாத மகன்கள் இருந்தனர், அவர்களும்
கூடாரத்தில் பணிபுரிந்தனர், ஆனால் கர்த்தரை அறியவில்லை (1 சாமுவேல் 2:12).
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படாத பலிகளிலிருந்து இறைச்சியை வைத்து உண்பதன் மூலம்
சட்டத்தை மீறினார்கள்.
அவர்கள் ஆசரிப்புக் கூடார வாயிலில் கூட்டங்கூடுகிற பெண்களோடும் சயனித்தனர்
(1 சாமுவேல் 2:22).
வெளிப்படையாக, ஏலியின் மகன்களின் தீய நடத்தை பரவலாக அறியப்பட்டது (1 சாமுவேல்
2:24), மற்றும் ஏலி அதைப் பற்றிய செய்தியைப் அறிந்தார்.
அவர் இதைக் கண்டுபிடித்தபோது, அவர் தனது மகன்களைக் கண்டித்தார், ஆனால் அவர்களைத் தடுக்கத் தவறிவிட்டார், அவர்கள் வாசஸ்தலத்தைத் தொடர்ந்து தீட்டுப்படுத்தினர். (1 சாமுவேல் 2:25).
எலி, ஒரு தகப்பனாகவும் ஒரு ஆசாரியணாகவும், தனது மகன்களைக் கட்டுப்படுத்துவதற்கு
பொறுப்பானவர்.
ஏலியின் இருதயம் கர்த்தரை விட அவனது மகன்களிடம் அதிகம் சாய்திருக்கலாம்
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர். அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.(1 சாமுவேல் 3:18)
எலி கர்த்தரிடமிருந்து பெற்ற எச்சரிக்கை செய்திக்கு மிகவும் சாதாரணமான அணுகுமுறையைக்
காட்டினார்.
அவன் தேவனுடைய பாதத்தில் விழுந்து அவருடைய வார்த்தைக்கு நடுங்கியிருக்க வேண்டும்.
தேவன் சொல்வதைக் கேட்க விரும்பும் எலி போன்றவர்கள் இன்று அநேகர் இருக்கிறார்கள்,
ஆனால் அவர்கள் அதைக் கேட்டும்,அதனை செயல்பாடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.