english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. ஜெபயின்மை தேவதூதர்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது
అనుదిన మన్నా

ஜெபயின்மை தேவதூதர்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது

Monday, 11th of August 2025
0 0 164
Categories : தேவதூதர்கள் (Angles) பிரார்த்தனை (Prayer)
ஜெபயின்மையின் மிகப்பெரிய சோகங்களில் ஒன்று தேவதூதர்களின் வேலையின்மை. நான் என்ன சொல்கிறேன்? விளக்கமளிக்க என்னை அனுமதியுங்கள்.

வலிமைமிக்க சீரிய இராணுவம் எலிசா தீர்க்கதரிசியையும் அவருடைய வேலைக்காரனையும் பிடிப்பதற்காக அவர்களைச் சுற்றி வளைத்தபோது, தீர்க்கதரிசி தெய்வீக வெளிப்பாட்டிலிருந்து பேசினார், “அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடி ருக்கிறவர்கள் அதிகம் என்றான். (II இராஜாக்கள் 6:16)

அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.( II இராஜாக்கள் 6:17)

தேவதூதர்கள் ஜெபிக்கும் இடம் அல்லது ஜெபிக்கும் நபர் மீது ஈர்க்கப்படுகிறார்கள். தேவனுடைய மனுஷன் எலிசா ஜெபித்ததால் தேவதூதர்கள் தங்கள் வேலைக்கு தேவனுடைய மனுஷனான  எலிசா ஜெபிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய அதிக கற்பனை தேவையில்லை. வெளிப்படையாக, சீரிய இராணுவம் அவர்களைக் கைப்பற்றியிருக்கும் மற்றும் சிம்சோனைப் போல சித்திரவதை செய்திருக்கலாம்.

அப்போஸ்தலர் 27ல், கடலின் நடுவில் இருந்த அப்போஸ்தலனாகிய பவுல், முழுக் கப்பலையும் அழித்துவிடும் அபாயகரமான புயலில் சிக்கியிருப்பதைக் காண்கிறோம். அவர் ஜெபித்தார், அவருடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்த்தர் ஒரு தேவதூதனை அவனுக்கு அருகில் நிற்க அனுப்பினார்.

அப்போஸ்தலர் 27:23ல் மாலுமிகளிடம் இந்த பிரயாணத்தை பற்றி அவர் பேசினார். ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று:. பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். அவர்களின் ஜீவன் அதிசயமாக காப்பாற்றப்பட்டது. அதேபோல், நீங்கள் ஜெபிக்கும்போது, தேவன் தம்முடைய தூதர்களை விடுவித்து, ஒவ்வொரு புயலிலிருந்தும் உங்களை வெளியே கொண்டு வருவார்.

அப்போஸ்தலர் 12ல், ஏரோது ராஜா தேவஜனங்களை உபத்திரவப்படுத்த ஆரம்பிக்கிறதை காண்கிறோம். அவர் யோவானின் சகோதரரான யாக்கோபை கொன்றான். இப்போது ஏரோது யூதர்களிடம் தனது புக ழும் மதிப் பும் உயர்த்தியதைக் கண்டதும்,  பேதுருவையும் தூக்கிலிடத் திட்டமிட்டு கைது செய்தான். பேதுருவை  பொது விசாரணைக்குக் கொண்டுவரும் வரை அவனை பாதுகாக்க பதினாறு வீரர்கள் நியமிக்கப்பட்டனர். இதைப் பார்த்த தேவசபை, பேதுருவை விடுவிக்கும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிக்க ஆரம்பித்தனர்.

இந்த ஜெபத்தின் விளைவு என்னவென்றால், அது பரலோகத்தை செயலில் அமைத்தது. அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. (அப்போஸ்தலர் 12:7)

தேவசபையின் தீவிரமான மன்றாட்டு ஜெபத்தால் தேவதூதன் பேதுருவின் சார்பாக நடவடிக்கை எடுக்கச் செய்தது. அவர் அதிசயமாக விடுவிக்கப்பட்டார்.
தேவபிள்ளைகள் ஜெபிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பேதுரு நிச்சயமாகக் கொல்லப் பட்டிருப்பார். தேவதூதனின் செயல்பாடு தீவிரமான ஜெபத்தின் விளைவாகும். ஜெபமின்மை தேவதூதர்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றுகிறது.

அன்பான தேவ பிள்ளைகளே, இது சமூக ஊடகங்களில் விவாதங்கள் மற்றும் வாதங்களுக்கு நேரம் அல்ல. ஜெபம் என்பது காலத்தின் தேவை. ஜெபம் இல்லாதவன் பிசாசின் தயவில் இருப்பான். ஜெபம் இல்லாத குடும்பம் சூழ்நிலைகளின் தயவில் இருக்கும். ஜெபம் இல்லாத தேவசபை தோற்கடிக்கப்பட்ட சபையாக இருக்கும்.

ஜெபத்தில் எழுந்திருங்கள்.
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். சங்கீதம் 91:11-1

Bible Reading: Jeremiah 2-4
ఒప్పుకోలు
1. பிதாவே, இயேசுவின் நாமத்தில், என் ஜெப வாழ்க்கைக்கு இடையூறாக திறக்கப்பட்ட ஒவ்வொரு சாத்தானின் கதவையும் மூடுகிறேன்.

2. என் ஜெபத்தைத் தடுக்கும் ஒவ்வொரு கவனச்சிதறளையும், நான் இயேசுவின் நாமத்தில் கட்டுகிறேன்.

3. என் ஜெபத்தைத் தடுக்கும் ஒவ்வொரு தடைகளும் இயேசுவின்  நாமத்தில் பிடுங்குகிறேன்.

4. இந்த தருணத்திலிருந்து, நான் என் ஜெப வாழ்க்கையை இயேசுவின் நாமத்தில்  பரிசுத்த ஆவியானவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

5. பிதாவே,  இயேசுவின்  நாமத்தில், என் வாழ்க்கையில் "ஜெப அபிஷேகத்தை" விடுவியும்.

அந்நிய பாஷைகளில் ஜெபிப்பதில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

Join our WhatsApp Channel


Most Read
● ஒவ்வொரு நாளும் புத்திமானாய் வளர்வது எப்படி
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 1
● தலைப்பு: உங்கள் அணுகுமுறை உங்கள் உயரத்தை தீர்மானிக்கிறது
● நாள் 35 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● கவனச்சிதறலை வெல்ல நடைமுறை வழிகள்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● உபவாசம் - வாழ்க்கையை மாற்றும் பலன்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్