అనుదిన మన్నా
0
0
131
பாலியல் சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது
Friday, 29th of August 2025
Categories :
சலனம் (Temptation)
விடுதலை (Deliverance)
“தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.”
சங்கீதம் 51:1-4
சங்கீதம் 51 தாவீது என்ற மனிதனால் எழுதப்பட்டது, அவர் பாலியல் சோதனையுடன் கூடிய அதீத அவமானத்தை அனுபவித்தார். தேவனிம் சரணடைந்தபோது அதீத சுதந்திரத்தையும் கண்டார் என்பது நற்செய்தி.
தாவீது தனது தந்தையின் ஆடுகளை மேய்க்கும் சிறுவனாகத் தொடங்கினார். அவரது குடும்பத்தினர் அவரைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை, மேலும் அவரது அதிக வல்லமை வாய்ந்த மற்றும் திறமையான சகோதரர்களுக்கு பணிபுரிய விநியோகம் செய்கிற வாலிபனாக அவரைப் பயன்படுத்தினர். தேவனின் கிருபையால், அவர் பின்னர் தேவனுக்காகப் போரிடும் வீரனானார். இறுதியில் இஸ்ரவேலில் இராஜாவாக உயர்ந்தார்.
முரண்பாடாக, அவரது வாழ்க்கையின் உச்சத்தில், அவர் தனது குறைந்த தருணங்களை அனுபவித்தார். அவர் பாலியல் பாவத்தில் விழுந்தார். அவர் தனது பாவத்தை மறைக்க சூழ்ச்சி செய்து கொலை செய்தார். அவரது தோல்விகள் அனைத்தும் இருந்தபோதிலும், இறுதியில் தாவீதைப் பற்றி ஆண்டவர் கூறியதைப் பாருங்கள்:
“ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்.”
அப்போஸ்தலர் 13:22
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் தனித்துவமானதாக இருக்கிறது, நாம் ஒவ்வொருவரும் பாலியல் சோதனையை எதிர்த்துப் போராட வேண்டும். சமீபத்தில் ஒரு இளைஞரிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சல் இங்கே:
அன்புள்ள போதகர் மைக்கேல்,
என் இளமைக் காமங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆழ்ந்த ஆசை எனக்கு இருக்கிறது, ஆனால் அதற்கான வழி இதுவரை எங்களுக்குச் சொல்லப்படவில்லை. உங்களால் உதவ முடியுமா? தயவு செய்து!
மிகப் பெரிய போதகராகிய பரிசுத்த ஆவியானவர், தாவீதுக்கு நடந்த அனைத்தையும் நம் பொழுதுபோக்கிற்காகக் குறிப்பிடவில்லை. ஒரு காரணத்திற்காக அதை வேதத்தில் எழுத அனுமதித்தார்.
இப்போது இவை அனைத்தும் அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக நிகழ்ந்தன, மேலும் அவை யுகங்களின் முடிவுகளுக்கு வந்த நம் அறிவுரைக்காக எழுதப்பட்டன. (1 கொரிந்தியர் 10:11)
வேதத்தின் நோக்கம்
நமக்கு ஒரு உதாரணமாக
நமக்கு ஒரு அறிவுரையாக (எச்சரிக்கையாக)
ஒரு புத்திசாலி ஆணோ அல்லது புத்திசாலி பெண்ணோ அனுபவத்தால் கற்றுக் கொள்வதில்லை; கற்றுக்கொள்வதற்கு இது மிகவும் வேதனையான வழி. மற்றவர்களின் வெற்றி தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்.
தாவீது ராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. தேவன் தாவீதுக்குக் காட்டியதை நாம் கவனமாகக் கவனித்தால், நாமும் தேவனின் இருதயத்துக்கு ஏற்றவற்களாக மாறலாம் மற்றும் பாலியல் சோதனையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.
தாவீதுக்கு இந்தப் பயணம் சுலபமாக இருக்கவில்லை, ஆனால் ஆவியின் பட்டயத்தை - தேவனின் வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, நமது சுதந்திரத்திற்காகப் போராடுவதில் உறுதியாக இருந்தால், இயேசுவின் நாமத்தில் வெற்றி நமதே.
"இதுவரை அனுபவதித்தெல்லாம் போதும். இந்த அவமானச் சங்கிலிகள் என் வாழ்க்கையையுuம் என் அழைப்பையும் வீணாக்குகிறது" என்று நீங்கள் கூறினால், என்னுடன் இந்த ஜெபத்தை செய்யுங்கள்.
Bible Reading: Jeremiah 52 ; Lamentations 1
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், எனக்கு உதவ உமது வல்லமையை நான் a.அங்கிகரிக்கிறேன். என் பாவத்திற்காக உமது குமாரனாகிய இயேசுவை பலியிட அனுமதித்ததற்காக நான் உமக்கு மனமார்ந்த நன்றி கூறுகிறேன்.
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, கிறிஸ்துவில் நான் பெற விரும்பும் சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கான பெலனையும், ஞானத்தையும், ஆர்வத்தையும் எனக்குத் தாரும்.
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வழியிலே என்னை நடத்த ஒப்புக்கொடுக்கிறேன். இதனால் நீர் என்னை உமது சாயலில் உருமாற்றும். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● தேவதூதர்களிடம் நாம் ஜெபிக்கலாமா● எதற்காக காத்திருக்கிறாய்?
● திறமைக்கு மேல் குணம்
● நமது தேர்வுகளின் தாக்கம்
● குற்றமில்லா வாழ்க்கை வாழ்வது
● இந்த புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பது
● நாள் 17: 40 நாட்கள் உபவாச ஜெபம்
కమెంట్లు