english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உள்ளான அறை
అనుదిన మన్నా

உள்ளான அறை

Wednesday, 21st of August 2024
0 0 1064
Categories : பிரார்த்தனை (Prayer)
“அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைகட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ. நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய், தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்.”
‭‭2 இராஜாக்கள்‬ ‭9‬:‭1‬-‭3‬ ‭

வேதத்தில் யெகூ மிகவும் சுவாரஸ்யமான ஒரு பாத்திரம். மற்றவர்கள் தோல்வியுற்ற இடத்தில் அவர் வெற்றி பெற்றார். எலியா தேவனின் வல்லமைவாய்ந்த மனிதராக இருந்தார், ஆனால் யேசபேல் எலியாவுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தினால். இந்த அசுத்த ராணியின் அக்கிரமத்தை நீங்கள் கற்பனை செய்யலாம். இருப்பினும், இந்த பொல்லாத ராணி யேசபேலை அழிக்க தேவன் யெகூவைப் பயன்படுத்தினார். எனவே யெகூ சுமந்த அபிஷேகத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

இந்தச் செய்தியின் மூலம், தேவனுடன் உங்கள் பயணத்தில் உங்களுக்கு உதவும் சில உண்மைகளை நான் வெளியே கொண்டு வர விரும்புகிறேன்.

#1 ... அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்

எலிஷா தீர்க்கதரிசி தனது மாணவர்களில் ஒருவரிடம் சென்று யெகூவைக் கண்டுபிடித்து சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணு என்று கூறுகிறார். நம் இலக்கை நோக்கி செல்வதற்கான முதல் படி, நாம் பழக்கமாகிவிட்ட நமது ஆறுதல் மண்டலத்திலிருந்து எழுவதுதான்.

இந்தத் தலைமுறைக்கு அவருடைய மகிமையைக் தேவன் நம்மைப் பயன்படுத்த விரும்புகிறார், ஆனால் அதற்கு முன், நாம் தற்போது இருக்கும் நிலையில் இருந்து உயர வேண்டும். நம்மை திசை திருப்பும் விஷயங்களிலிருந்து நம்மை நாமே துண்டித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை யெகூ முழுமையாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், கீழ்ப்படிந்து தன் சகோதரர்கள் மத்தியில் இருந்து எழுந்தார். நம்மை பிரிப்பது நமது அழைப்பு அல்ல, ஆனால் அழைப்புக்கான நமது செயல் என்று நான் நம்புகிறேன்.

#2 அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்

நாம் பரிச்சயம் மற்றும் மந்தமான தன்மையிலிருந்து எழுந்தால், தேவனின் உள் அறைக்குள் நடக்க நமக்கு ஒரு திறந்த அழைப்பு உள்ளது. உட்புற அறை அனைத்து மக்களும் வசிக்காத இடத்தைக் குறிக்கிறது. இந்த இடம் தேவனின் இருதயம்.

உள் அறை என்பது கவனச்சிதறல்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடம். கர்த்தராகிய இயேசு இந்த உள் அறை அனுபவத்தைப் பற்றிப் பேசினார், “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.”
‭‭மத்தேயு‬ ‭6‬:‭6‬ ‭

பழைய ஏற்பாட்டில், பிரதான ஆசாரியர் மட்டுமே தேவனின் பிரசன்னத்தின் உள் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார், மேலும் "... வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, இரத்தம் இல்லாமல் அனுமதி இல்லை...' [எபிரேயர் 9:7]

கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் முன்னோடியில்லாத பாக்கியத்தைப் பெறுகிறார்கள் என்று புதிய ஏற்பாடு நமக்குச் சொல்கிறது இயேசுவை நேசிக்கும் அனைவருக்கும் உள் அறை கதவு திறக்கப்பட்டுள்ளது!

நீங்கள் அவருடைய இருதயத்தை அணுக வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் தேவனின் உள் அறைக்குள் நுழையும்போது, ​​அவர் உங்கள் மீது ஒரு புதிய அபிஷேகத்தை ஊற்றுவார். புதுப்பெயரைச் சொல்லி அழைப்பார்! (வெளிப்படுத்துதல் 2:17, ஏசாயா 62:2)

#3 தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி

கவனியுங்கள், யெகூவின் தலையில் எண்ணெய் வார்க்கபட்டது உள் அறையில். உள் அறை உங்கள் மீது புதிய அபிஷேகம் ஊற்றப்படும். நீங்கள் வறட்சியாக உணர்கிறீர்களா? அப்படியெனில் உள் அறைக்குள் செல்லுங்கள்; ஒரு புதிய அபிஷேகம் உங்களுக்கு காத்திருக்கிறது.

உட்புற அறை என்பது தேவனின் குரலை நீங்கள் தெளிவாகக் கேட்கும் இடம். தீர்க்கதரிசி இந்த இடத்தில் பிறந்தார். ஜெகூ உள் அறையில் தீர்க்கதரிசனத்தைக் கேட்டான்.

யெகூவின் அழைப்பு உள் அறையில் உறுதி செய்யப்பட்டது. இங்குதான் தான் இஸ்ரவேலின் ராஜாவாகப் போகிறான் என்பதை யெகூ அறிந்தான். ஒருவேளை நீங்கள் மனச்சோர்வு மற்றும் நிராகரிப்பு போன்றவற்றுடன் போராடி இருக்கலாம். உங்களைப் பற்றிய சுய உருவம் மிகக் குறைவாக இருக்கலாம். நீங்கள் உள் அறைக்குள் செல்ல வேண்டும். உங்கள் அழைப்பு உறுதிப்படுத்தப்படும், கழுகுகளைப் போல சிறகடித்து உயர எழும்புவீர்கள்.
ప్రార్థన
1. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, உம்முடைய பிரசன்னத்தை என்னுடைய இலக்காக மாற்றாததற்கு என்னை மன்னியுங்கள்.

2. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என்னைப் பரிசுத்தப்படுத்தி, இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் என்னைச் சுத்தப்படுத்தும், இதனால் நான் தினமும் உமது பிரசன்னத்திற்கு தடையின்றி அணுகுவேன். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● அடுத்த நிலைக்கு முன்னேறி செல்லுதல்
● மூடப்படாத சாத்தியம்: பயன்படுத்தப்படாத ஈவுகளின் ஆபத்து
● கிறிஸ்தவர்கள் மருத்துவர்களிடம் செல்லலாமா?
● தள்ளிப்போடும் எண்ணத்தை கொண்டுவரும் ராட்சதனை கொல்வது
● போற்றப்படாத கதாநாயகர்கள்
● நிச்சயமற்ற காலங்களில் ஆராதனையின் வல்லமை
● உங்கள் விடுதலை மற்றும் சுகத்திற்கான நோக்கம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్