english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. நாள் 06: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்
అనుదిన మన్నా

நாள் 06: 40 நாட்கள் உபவாசமும் & ஜெபமும்

Wednesday, 27th of November 2024
0 0 483
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)
என் பிரயாசம் வீணாகப்போவதில்லை 

“சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” (நீதிமொழிகள்‬ ‭14‬:‭23‬ )

கணித்தரும் வாழ்க்கை ஒரு கட்டளை. மனிதனைப் படைத்த பிறகு தேவன் அவர்களுக்கு கொடுத்த முக்கிய கட்டளைகளின் ஒரு பகுதியாக இது இருந்தது. ஆதயமற்ற உழைப்பு என்பது உங்கள் வாழ்க்கையில் சத்துருவின் கிரியை செயலில் இருப்பதற்கான அறிகுறியாகும்.

இந்த வல்லமைகளால் ஜனங்கள் தாக்கப்படும் போது, ​​அவர்கள் தங்கள் உழைப்பை காண்பிக்க எதுவும் இருக்காது. சில நேரங்களில், இந்த வல்லமைகள் அவர்களை வேலை செய்து சில முடிவுகளைப் பெற அனுமதிக்கலாம், ஆனால் ஒரே இரவில், பிரச்சனையும் இழப்பும் ஏற்படும், அது அவர்களின் பல ஆண்டுகால உழைப்பை அழித்துவிடும்.

பல விசுவாசிகள் வீணாக உழைக்கிறார்கள்; அவர்கள் பிசாசின் செயல்பாட்டை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த விசுவாசிகள் நன்றாக உழைக்கும் திறன் பெற்றவர்கள் ஆனால் உயர்த்தப்படுவதில்லை; அவர்களுக்கு வேலை இல்லை, ஆனால் படிப்பறிவு உள்ளது, பணம் இல்லை ஆனால் புத்திசாலித்தனமும் இருக்கிறது. அவர்களில் சிலர் பல வேலைகளைக் கொண்டுள்ளனர், காலை முதல் இரவு வரை வேலை செய்கிறார்கள், இன்னும் கடனில் வாழ்கின்றனர். சில விசுவாசிகள் ஏற்கனவே தங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற்றுள்ளனர், எனவே அவர்கள் இந்த வகையான ஜெபங்களை ஜெபிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. பிசாசு வெற்றிகரமாகத் தாக்குதலைத் தொடுத்த பிறகு ஜெபிப்பதை விட, அவன் தாக்குவதற்கு முன் ஜெபிப்பது நல்லது என்பதை அவர்கள் உணருவதில்லை. கவனக்குறைவாக இருந்தால் எந்த நேரத்திலும் பிசாசு தாக்கலாம் என்பதால் இன்றைய வெற்றியை நாளை இழக்க நேரிடும். உதாரணமாக, யோபுவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஏற்கனவே வெற்றியடைந்து நன்கு நிலைநிறுத்தப்பட்டவர், ஆனால் பிசாசு அவரைத் தாக்கியபோது, ​​அவர் ஒரே நாளில் அனைத்தையும் இழக்க நேர்ந்தது. தேவன் அவருடன் இல்லாவிட்டால் யோபு அனைத்தையும் திரும்பியிருக்க முடியாது.

ஜனங்களின் பிரயாசம் வீணாக போவதர்க்கு சில முக்கிய காரணங்கள்

1. அடிமைத்தனம்

இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தில் இருந்தார்கள், அவர்களுடைய உழைப்பு அனைத்தும் பணியாட்களுக்காக இருந்தது.

“அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான். அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள். சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.”
யாத்திராகமம்‬ ‭1‬:‭9‬-‭11‬, ‭13‬-‭14‬ ‭

2. பொல்லாதவர்களின் அக்கிரமம்

மீதியானியர்கள் இஸ்ரவேலர்கள் நடவு செய்வதற்கும், விதைகள் வளருவதற்கும் காத்திருந்தனர், அறுவடை நேரத்தில், அவர்கள் தங்களுக்கு ஆதயம் தரக்கூடிய அனைத்தையும் அழிக்கக் காத்திருந்தனர்; எதிரி இப்படித்தான் செயல்படுகிறான்.

“பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள். அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.”
(‭‭நியாயாதிபதிகள்‬ ‭6‬:‭1‬-‭6‬)

சில சமயங்களில், ஒரு இளைஞனை அவனது இளமைப் பருவத்தில் வெற்றிபெற அனுமதிக்கலாம், மேலும் முதுமையில், அவனுடைய நிதியை வீணடிக்கும் நோயால் அவனைத் தாக்குவான்.

சில சமயங்களில், அவைகள் குழந்தைகளை மரிக்கவும், குழந்தைக்கான பெற்றோரின் முதலீடு அனைத்தும் வீணாகிவிடும். அவைகள் உங்களைத் தடுக்கும் முன் அவைகளை நிறுத்துங்கள்; அவைகள் உங்களுடன் சண்டையிடுவதற்கு முன்பு அவைகளுடன் சண்டையிடுங்கள். உங்கள் சத்துரு சரிர ரீதியானது அல்ல, உங்கள் சத்துரு பிசாசு, ஆனால் அவன் உங்களுக்கு எதிராக ஜனங்களை பாதிக்கவும் பயன்படுத்தவும் முடியும். அந்த ஜனங்கள் உங்கள் உண்மையான எதிரி அல்ல, ஆனால் அவர்கள் சாத்தானின் செல்வாக்கின் கீழ் உள்ளனர். ஆவிக்குரிய எதிரியை நிறுத்த நீங்கள் ஜெபம் செய்யும் தருணத்தில், மனித பாத்திரங்கள் மூலம் அவனது செல்வாக்கு நிறுத்தப்படும்.

3. பாவமான வாழ்க்கை முறை

பாவம் எதிரிக்கு அதிகாரபூர்வ அணுகலை வழங்க முடியும்.

“உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.”
(‭‭எரேமியா‬ ‭5‬:‭25)‬ ‭

ஆதயமற்ற உழைப்பை அனுபவித்தவர்களின் வேதத்தின் எடுத்துக்காட்டுகள்
  • மறந்து போன ஞானி
பிரசங்கி 9:15 இல், ஞானி ஒரு முழு நகரத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றினார், ஆனால் அவர் மறக்கப்பட்டார். அவரது உழைப்புக்கு வெகுமதி கிடைக்கவில்லை. இந்த மனிதன் புத்திசாலி, ஆனால் அவர் ஏழை, ஏனென்றால் அவர் மக்களுக்கு உதவும்போது, ​​​​அவர்கள் அவரை மறந்துவிடுகிறார்கள். ஞானம் உங்களை பணக்காரராக்கும், ஆனால் மக்களை வீணாக உழைக்க வைக்கும் இந்த மனப்பான்மையை நீங்கள் கையாளவில்லை என்றால், நீங்கள் ஒரு "ஏழை ஞானி" ஆவீர்கள்
  • யாக்கோபு 
யாக்கோபு பலமுறை ஏமாற்றப்பட்டான், அவனது உழைப்புக்கான முழுப் பலனையும் அவன் பெறவில்லை. அவனைக் காப்பாற்றியது அவன் உயிரின் மீது தேவன் செய்த உடன்படிக்கை.

“இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பி விட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.”(ஆதியாகமம்‬ ‭31‬:‭38‬-‭42‬ )

நமது சமூகங்களில் பலர் லாபானைப் போன்றவர்கள்; அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் மற்றும் அவர்களின் முழு ஆசீர்வாதத்தையும் மறுக்கிறார்கள். நீங்கள் ஜெபிக்க முடிந்தால், தேவன் உங்களுக்கு முழு உடைமையையும் தர முடியும்.

Bible Reading Plan :  Mark : 1 - 6

ప్రార్థన
1. என் அறுவடையை அழிக்க ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு வல்லமையையும் நான் இயேசுவின் பெயரில் சிதறடிக்கிறேன். (யோவேல் 2:25, ஏசாயா 54:17)

2. என் கைகளின் பிரயாசங்களுக்கு எதிராக செயல்படும் எந்த தீய வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் அழிக்கிறேன்.
(உபாகமம் 28:12, சங்கீதம் 90:17)

3.தேவனின் அபிஷேகத்தினாலும், இயேசுவின் இரத்தத்தினாலும், இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கையில் நல்ல விஷயங்களைத் தாக்கும் எந்த வல்லமையையும் அழிக்கிறேன். (ஏசாயா 10:27, வெளிப்படுத்துதல் 12:11)

4. என் சரிர சுகம், வணிகம் மற்றும் குடும்பத்தை விழுங்குபவர்கள், கொள்ளையர்கள் மற்றும் கெடுப்பவர்களை நான் இயேசுவின் நாமத்தில் கண்டிக்கிறேன். (மல்கியா 3:11, யோவான் 10:10)

5. இயேசுவின் நாமத்தில் என் உழைப்பை வீணாக்க எந்த அதிகாரமும் ஒதுக்கப்படுவதை நான் தடை செய்கிறேன். (ஏசாயா 65:23, சங்கீதம் 127:1)

6.பிதாவே, என் கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்து, இயேசுவின் நாமத்தில் நூறு மடங்கு அறுவடையை விளைவிக்கச் செய்வீராக. (ஆதியாகமம் 26:12, உபாகமம் 28:8)

7. நான் திருடப்பட்ட ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும், நல்லொழுக்கத்தையும், வாய்ப்புகளையும், செல்வத்தையும் இயேசுவின் நாமத்தில் மீட்டெடுக்கிறேன். (1 சாமுவேல் 30:18-19, யோவேல் 2:25)

8.இயேசுவின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தில் என் அடித்தளத்தில் எந்த தீமையையும் நிறுத்தி தடுக்கிறேன். (கொலோசெயர் 2:14, எபிரெயர் 12:24)

9. என் பரலோகத் தகப்பன் என் வாழ்க்கையில் நடாத எந்த தோட்டத்தையும் இயேசுவின் நாமத்தில் பிடுங்கபடுவதாக. (மத்தேயு 15:13, எரேமியா 1:10)

10. இயேசுவின் நாமத்தில் என் அடித்தளத்திலிருந்து என் வாழ்க்கையில் திட்டமிடப்பட்ட எந்த சாபத்தையும் தோல்வியையும் நான் அழிக்கிறேன். (கலாத்தியர் 3:13, புலம்பல் 5:7)





Join our WhatsApp Channel


Most Read
● துதி தேவன் வசிக்கும் இடம்
● தெய்வீக இரகசியங்களை வெளிப்படுத்துதல்
● தேவன் வித்தியாசமாக பார்க்கிறார்
● தேவன் கொடுத்த சொப்பனம்
● ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல் - II
● கர்த்தருக்குள் உங்களை எப்படி திடப்படுத்திக்கொள்வது ?
● நான் கைவிட மாட்டேன்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్