english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. ஆவியானவர் ஊற்றப்படுதல்
అనుదిన మన్నా

ஆவியானவர் ஊற்றப்படுதல்

Thursday, 13th of March 2025
0 0 320
“கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.”
‭‭அப்போஸ்தலர்‬ ‭2‬:‭17‬-‭18‬ யோவேல்‬ ‭2: 28:29


நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. கடைசி நாட்களில் தேவனின் நிகழ்ச்சி நிரலில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் அமர்ந்து கடைசி நாட்களில் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைப் பார்க்கிறவர்களாக அல்ல, ஆனால் அவர்கள் பரலோகத்தின் ஆலோசனையை நிறைவேற்ற தேவனின் கடைசி கால சேனையின் ஒரு பகுதியாக உள்ளனர். "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்" என்று வேதம் சொல்கிறது. பார்த்தீர்களா? எனவே வாலிப மகனே, வாலிப மகளே, உன் பாலினம் எப்படியிருந்தாலும், நீ தேவனின் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறாய். ராஜ்யத்தின் கடைசி நாள் நோக்கங்களில் நீங்கள் இடம்பெறுகிறீர்கள்.

நீங்கள் மிகவும் சிறியவர் என்று சொல்பவர்கள் கடைசி நாட்களின் தேவனின் திட்டத்தை படிக்கவில்லை. தேவன் பெரியவர்களை மட்டுமே பார்க்கிறார், குழந்தைகளை அல்ல என்று உங்களிடம் சொல்பவர்கள், இந்த தலைமுறையில் கடவுளின் இறுதி கால நகர்வை அறியாதவர்கள். இந்த கடைசி நாட்களில் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்வீர்கள், தேவனின் அற்புதமான ஆவியின் அபிஷேகத்தால் தரிசனங்களைப் பார்ப்பீர்கள் என்று தேவன் கூறுகிறார். கிறிஸ்துவின் வருகைக்கு முன்வாலிபர்களுக்கு பரிசுத்த ஆவியின் தனித்துவமான ஊற்றுதல் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது!

ஆவியின் வெளிப்பாட்டின் மூலம், தெய்வீக தரிசனங்களும், சொப்பனங்களும் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள். தேவனின் திட்டங்களை வெளிப்படுத்தவும், எதிரியின் உத்திகளை அம்பலப்படுத்தவும் உங்களுக்கு என்ன தேவையோ அது இருக்கும். இந்த கடைசி நாட்களில், தேவன் உங்கள் கண்களை எதிர்காலத்தில் வெகுதூரம் பார்க்கவும், இன்றைய தேவனின் நோக்கத்துடன் மனுக்குலத்தை இணைக்கவும் அமைக்கிறார்.

உதாரணமாக, வேதம் 1 சாமுவேல் 3:1-4, 10-11 இல் கூறுகிறது, “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,”
‭‭ “அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.”
‭‭1 சாமுவேல்‬ ‭3‬:‭ 1-4; 10‬-‭11‬

பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை என்று வேதம் சொல்கிறது. அந்த நாட்களில் இருந்த ஆசாரியன் ஏலி, அவரது சரீரப்பிரகாரமான கண்கள் கூட மங்கி இருந்தது. முழு இஸ்ரேலும் குழப்பத்தில் இருந்தது. நிலத்திற்கான தேவனின் திட்டமும் நோக்கமும் யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியபடியே செய்தார்கள், ஆனால் தேவன் பிரவேசித்து மற்றவர்களுக்கு அப்பால் பார்க்கக்கூடிய ஒரு வாலிபனை அழைத்தார். தேவன் சாமுவேலைக் கூப்பிட்டு, அவருடைய நோக்கத்தையும் ஆலோசனையையும் அவனுக்கு வெளிப்படுத்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில் இஸ்ரவேலில் செய்யப்போகும் அனைத்தையும் சாமுவேலிடம் கூறினார். மறுநாளிலே, முதியவரான ஏலி கர்த்தர் என்ன சொன்னார் என்று சாமுவேலிடம் கேட்க வேண்டியிருந்தது. இதைத்தான் ஆவியானவரின் ஊற்றுதல் செய்யும். இது வாலிபர்களையும் பிள்ளைகளையும் தங்கள் குடும்பங்களுக்காகவும், தேசத்திற்காகவும் தேவனிடம் இருந்து அறிந்து கொள்ள வைக்கும்.

மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆம், பிறக்காத குழந்தைகளின் அகால மரணத்தில் பங்கேற்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் கண்களையும் கூட எதிரி குருடாக்கியதில் ஆச்சரியமில்லை. இத்தகைய ஆற்றல்மிக்க வாக்குத்தத்தத்துடன், நமது கால வாலிபர்கள் எதிரியின் மிக நுட்பமான மற்றும் தந்திரமான தாக்குதல்களை அனுபவித்து வருவது ஆச்சரியமாக இருக்கிறதா?

தேவனுடனான வாலிபர்களின் உறவைத் தடுப்பதன் மூலம், பிசாசானவன் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதைத் தடுக்கிறான். போதைப்பொருள் அல்லது மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதன் மூலம், பரிசுத்த ஆவியின் அமைதியான, மகிழ்ச்சியான பிரசன்னத்தை அவன் உணரவிடாமல் தடுக்கிறான். அவர்களை முரட்டாட்டத்தில் வைத்திருப்பதன் மூலம், அசுத்த ஆவிகளின் வல்லமைகள் அவர்கள் பெற்றோர்கள் மீது வைத்திருக்கும் அன்பை அனுபவிப்பதைத் தடுக்கின்றன. ஆனால் விடுபடுவதற்கான நேரம் இது. இந்த வாலிபர்களுக்காக ஜெபித்து, தேவனின் வல்லமையான கரத்தின் கீழ் அவர்களை சரியாக நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது, அதினால் ஆவியானவர் அளவில்லாமல் அவர்கள் மீது பரிபூரணமாக ஊற்றப்பட முடியும். அதனால், சாமுவேலைப் போல, அவர்களும் எழுந்து தங்கள் தலைமுறைக்கு வழி காட்ட முடியும்.

Bible Reading: Deuteronomy 33-34; Joshua 1-2
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இந்த வாலிபர்களுக்கு உமது ஆவியின் வாக்குத்தத்திற்கு நன்றி. அவர்கள் மீது நரகத்தின் ஒவ்வொரு பிடியும் உடைக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் மீது சாத்தானின் ஒவ்வொரு திட்டமும் அழிக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆவியானவரின் வெளிப்பாட்டின் மூலம், அவர்கள் தரிசனங்களைக் காண்பார்கள், மேலும் அவர்கள் தங்கள் தலைமுறைக்கான உமது நோக்கத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● ஒரே காரியம்: கிறிஸ்துவில் உண்மையான பொக்கிஷத்தை கண்டறிதல்
● அந்நிய பாஷை தேவனின் மொழி
● விதையின் வல்லமை - 3
● ஆவியிலே அனலாயிருங்கள்
● கர்த்தராகிய இயேசு: சமாதானத்தின் ஊற்று
● நாள் 14: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● அவரது வலிமையின் நோக்கம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్