english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 4
అనుదిన మన్నా

உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 4

Sunday, 26th of January 2025
0 0 279
Categories : வளிமண்டலம் ( Atmosphere) விடுதலை (Deliverance)
“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” சங்கீதம் 119:105

தேவனுடைய வார்த்தைகள் நம் வாழ்க்கையையும் வீடுகளையும் இயக்குவதற்கான வடிவமாய் இருக்கிறது. தேவனின் வழியிலும் அறிவுரையிலும் நம் பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும் என்பதை வழிநடத்தும் திசைகாட்டியாக இருக்கிறது. தாவீது எந்த வசனத்தில், தேவனுடைய வசனம் அவர் கால்களுக்குத் தீபமும், அவர் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது என்று கூறினார். சமூக ஊடகங்களில் உள்ளதகவல்களைக் கொண்டு தனது வாழ்க்கையை அல்லது வீட்டை நடத்தும் ஒரு மனிதனையும், வேதத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு தனது வீட்டை நடத்தும் மனிதனையும் நீங்கள் சொல்லலாம். அதின் வித்தியாசம் மிகத்தெளிவாக தெரியும்.

கர்த்தராகிய இயேசு மத்தேயு 7:24-27 இல் போதித்தார், 24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
 
வார்த்தையே அஸ்திவாரம், அஸ்திவாரம் உறுதியானால், கட்டிடம் உறுதியாய் நிற்கும். ஆகவே, துருபதேசங்களும் சூனியம் என்ற காற்று ஜனங்களிடத்தில் வீசத் தொடங்கும் போது, வார்த்தையின்படி வாழும் ஒரு மனிதன் உறுதியாக நிற்கிறான்.

எனவே, நாம் குடும்பமாக வார்த்தையின்படி வாழும் வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும். உங்கள் கையில் ஒரு வேதத்தை வைத்திருப்பதாலோ அல்லது உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வேதத்தை வைத்திருப்பதாலோ தேவனின் வார்த்தை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தப்பட்டு செயல்படாது. தேவனுடைய வார்த்தையை ஆர்வத்தோடு வாசித்து, அதை தியானித்து, அந்த வார்த்தைகளை அறிக்கை செய்யும் போது தெய்வீக ஆற்றல் வெளியிடப்படுகிறது.
 
தாவீது சங்கீதம் 119:9-11 இல் கூறினார், 9. வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. 10. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். 11. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். உங்கள் வாலிபர்கள் வழிதவறாதபடிக்கு தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். சிலர் தங்கள் பிள்ளை களுக்கு அவர்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கற்பிக்க விரும்புகிறார்கள், ஆம், இது நல்லது, ஆனால் உங்கள் கலாச்சாரம் அவர்கள் சமூகத்தில் இருக்கும்போது மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவர்கள் வேறு இடத்தில் தங்களைக் கண்டால் என்ன செய்வது; அந்த நேரத்தில், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களை வழிநடத்த தேவனின் வார்த்தை மட்டுமே திசைகாட்டி. உலக அளவில் பொருத்தமான ஒரே புத்தகம் வேதாகமம் தான்.

எனவே, உங்கள் வீட்டின் மீதும், உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் மீதும், உங்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் மீதும் தேவனுடைய வார்த்தையை பேசுங்கள். உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் மீது நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசும்போது, நீங்கள் அவர்கள் மீது தெய்வீக நியமத்தைப் புகுத்துகிறீர்கள். நீங்கள் பூமிக்குரிய நிகழ்வுகளின் மீது தெய்வீக வெளிப்பாடுகளை மிகைப்படுத்துகிறீர்கள். நீங்கள் வழியில் இருக்கும் மலை களை பார்த்து பெயர்ந்து போ என்று சொல்லும் போது அது பெயர்ந்து போகும். உங்கள் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொடுங்கள், அவர்கள் அதை எப்போதும் சொல்லட்டும். அவர்கள் என்ன உணர்கிறார்கள் அல்லது பொருளாதாரம் என்ன சொல்கிறது என்பதை அல்ல, வார்த்தை என்ன சொல்கிறது என்பதை அவர்கள் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
 
யோவேல்  3:10 கூறுகிறது,உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
 
தேவனுடைய வார்த்தைக்கு நம்மை சுத்திகரிக்கும் வல்லமை உண்டு. யோவான் 15:3ல் இயேசு சொன்னார், நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
தேவனுடைய வார்த்தை நம்மை சுத்திகரிக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் உங்கள் பிள்ளைகள் அடிமைப்பட்டுருக்கீறீர்களா? அவர்கள் சில பலவீனங்களுடன் போராடுகிறார்களா? அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் ஒரு வழக்கமான நேரம் இருக்கட்டும்.

Bible Reading: Judges 10-12

ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வார்த்தையின் வெளிச்சத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். உமது வார்த்தைக்கு கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். உமது வார்த்தையையும் உமது வழிகளையும் பின்பற்ற கிருபை தரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். உமது வார்த்தையால் என் குடும்பத்தைப் பரிசுத்தப்படுத்துகிறேன், எங்கள் வாழ்வு வார்த்தையால் இயங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் பரிபூரண சித்தத்தை ஜெபியுங்கள்
● கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வீட்டைக் கட்டுதல்
● பாவ கோபத்தின் அடுக்குகளை அவிழ்ப்பது
● மனிதனின் பாராட்டுக்கு மேல் தேவனின் பலனைத் தேடுதல்
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 4
● உங்கள் வழிகாட்டி யார் - I
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్