english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. தவறான சிந்தனை
అనుదిన మన్నా

தவறான சிந்தனை

Tuesday, 1st of April 2025
0 0 622
Categories : நம்பிக்கைகள்(Beliefs) மனம் ( Mind) மாற்றம்(transformation)
அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. நீதிமொழிகள் 23:7.

வாழ்க்கையில் தேவனிடம் உங்களுக்கு ஒரு இடம் உண்டு. நீங்கள் ஏன் இன்னும் அங்கு வரவில்லை? ஏனென்றால், உங்களை வெளியே வைத்திருக்கும் "மதில்கள்" உள்ளன. அந்தச் மதில்களில் ஒன்று மனத் தடைகளை விளைவிக்கும் தவறான சிந்தனை. தவறான சிந்தனை என்பது தேவனின் விருப்பம், திட்டங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கான நோக்கங்களுடன் ஒத்துப்போகாத சிந்தனை என வரையறுக்கப்படுகிறது. நம் வாயினால் சொல்வதை விட நம் இருதயத்தில் என்ன நினைக்கிறோம் என்பதே முக்கியம். நம் மனம் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறது. நமது யதார்த்தம் என்பது நமது எண்ணங்களின் செயல்பாடாகும்.
 
தேவன் பிலேமோன் 1:14 இல் கூறுகிறார், ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதமில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.

எண்ணாகமம் 13:31-33ல் பைபிள் சொல்கிறது, 31. அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். 32. நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். 33. அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
அவர்களுக்காகத் ஆயத்தம் செய்ததைப் பற்றி தேவன் ஏற்கனவே அவர்களுக்கு அறிவித்திருந்தார். ஆனால் வேவுப்பார்க்க சென்றவர்கள் திரும்பி வந்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தேவன் ஆயத்தம் பண்ணியதை அவர்களின் எண்ணங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் மனதில் வெட்டுக்கிளிகளைப் போல எண்ணினார்கள் என்று வேதம் சொல்கிறது. இவர்கள் முழு வளர்ச்சியடைந்த மனிதர்கள், ஆனால் அவர்களின் சிந்தனை தவறாக இருந்தது. அவர்கள் அவருடைய ஆசீர்வாதங்களைப் பற்றி நினைக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார், ஆனால் அவர்கள் தங்களைத் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை முறை தேவன் உங்களுக்கு ஒரு பெரிய காரியத்தை காட்டியிருக்கிறார், ஆனால் அது வேறு யாருக்கோ என்று உங்கள் மனம் சொல்கிறது? “என்னால் பெரிய செல்வந்தனாக இருக்க முடியாதா? அப்படிப்பட்ட பதவிக்கு நான் தகுதியானவன் அல்லவா? இப்படிப்பட்ட சில தவறான எண்ணங்கள்தான் நம் வாழ்வில் தேவனின் ஆசீர்வாதத்திற்கு கீழே நம்மை வைத்திருக்கின்றன.
 
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 12:2-ல் எழுதினார், நாம் இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரியாமல், நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலம் மறுரூபமடைய வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். தவறான எண்ணம் தேவனின் சத்தியத்தை பார்ப்பதிலிருந்தும் அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதிலிருந்தும் நம்மைத் தடுக்கலாம். கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சீஷர்கள் ஒன்றுகூடியபோது, "கதவுகள் மூடப்பட்டிருந்தும்" இயேசு அறைக்குள் பிரவேசித்தார் (யோவான் 20:19-31ஐ பார்க்கவும்). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு மதில்கள் ஒரு தடையாக இருக்கவில்லை.

எந்தச் மதில்களானாலும் - சரீரப்பிரகாரமோ அல்லது மனதளவிலோ - உங்களைத் தடுத்து நிறுத்தலாம், அது உங்களை கட்டுப்படுத்தும் அல்லது விலக்கும். "என் தேவனால், நான் எந்தச் மதிலையும் தகர்க்க முடியும்" என்று தாவீது ராஜா கூறினார் (II சாமுவேல் 22:30).
 
எண்ணாகமம் 13:30 இல் காலேப் கூறினார், “அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.” இப்படிப்பட்ட மனநிலை தான் நமக்கு இருக்க வேண்டும். தேசத்தை நம்மால் எளிதாக சுதந்தரிக்க முடியும் என்று சொல்லும் சரியான சிந்தனை நமக்கு இருக்க வேண்டும். தேவனின் ஆசீர்வாதங்களை நாம் நன்றாக வெளிப்படுத்த முடியும். ஒவ்வொரு எதிர்மறையான கற்பனையையும் தூக்கி எறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. II கொரிந்தியர் 10: 5-6, “5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்து கிறவர்களாயிருக்கிறோம். 6. உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.”

ஒவ்வொரு எதிர்மறை எண்ணத்தையும் தேவனுடைய வார்த்தையால் தூக்கி எறியுங்கள். அவருடைய வார்த்தை உங்களுக்குள் செழுமையாக வாழட்டும். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றி தவறாக நினைத்தவர்கள் உள்ளே பிரவேசிக்க முடியவில்லை. எனவே, உங்கள் மனதைக் தேவனுடைய வார்த்தையால் நிரப்புங்கள். தேவன் உங்களால் முடியும் என்று சொன்னால், உங்கள் மனதும் அப்படியே நினைக்கட்டும், நீங்கள் அப்படியே ஆகுவீர்கள்.

Bible Reading: 1 Samuel 1-3
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைக்கு நன்றி. எப்பொழுதும் சரியாகச் சிந்திக்க நீர் எனக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உமது வார்த்தைக்கு என் மனதைச் சமர்ப்பிக்கிறேன், உமது வார்த்தையில் வாக்குத்தத்தங்களின்படி உம் ஆசீர்வாதங்களை என் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். என் வாழ்க்கை உமது மகிமையை முழுமையாக வெளிப்படுத்தும் என்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● அப்பாவின் செல்ல மகள் - அக்சாள்
● எண்ணிக்கை ஆரம்பம்
● இடறல் ஆவிக்குரிய அடிமைத்தனத்திற்கு கதவுகளைத் திறக்கிறது
● ஒவ்வொரு நாளும் புத்திமானாய் வளர்வது எப்படி
● அவர் உங்கள் காயங்களை குணப்படுத்த முடியும்
● உங்களுக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை
● தேவனின் சத்தத்தை நம்பும் வல்லமை
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్