english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. மனித இயல்பு
అనుదిన మన్నా

மனித இயல்பு

Friday, 13th of June 2025
0 0 286
Categories : பாவம்(Sin)
நீங்கள் எப்போதாவது ஏதாவது தவறு செய்து, அதை மறைக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறீர்களா?

ஆதாமும் ஏவாளும் அதைச் செய்தார்கள். ஏவாள் பாம்பின் வஞ்சகத்திற்கு அடிபணிந்து, நன்மை தீமை அறியும் மரத்தின் கனிகளைப் புசித்தாள். ஆதியாகமம் 3:6 கூறுகிறது, அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். 

அப்பொழுது அந்த மனிதனும் (ஆதாமும்) அவன் மனைவியும் கர்த்தராகிய ஆண்டவர் தோட்டத்தில் நடமாடுவதைக் கண்டனர். எனவே அவர்கள் தேவனாகிய ஆண்டவருக்கு பயந்து மரங்களுக்கு மத்தியில் மறைந்தார்கள். (ஆதியாகமம் 3:8)

கர்த்தராகிய தேவனுடைய சந்நிதியிலிருந்து மறைக்க வழி இல்லை, ஆனாலும் அவர்கள் முயற்சித்தார்கள். எபிரெயர் 4:13-ல் அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

தாவீது மிகவும் தீவிரமாக, விபச்சாரம் மற்றும் கொலை செய்த பாவத்தை மறைக்க முயன்றார். (வாசியுங்கள் 2 சாமுவேல் 11) காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? (சங்கீதம் 94:9) அப்படியிருந்தும், மனிதன் இன்னும் மறைக்க முயற்சிக்கிறான்.

"பாவம்" என்ற வார்த்தை கிரேக்க மற்றும் எபிரேய வார்த்தைகளிலிருந்து உருவானது, இது "குறி தவறியதை" விவரிக்கிறது. உண்மையில், நாம் ஒவ்வொருவரும் ஏதோவொன்றில் குறி தவறிவிட்டோம்.


நாம் நம்முடைய பாவத்தை மறைக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ வேண்டியதில்லை, ஏனென்றால் இயேசு நமக்காக தண்டனையைச் செலுத்தி, தகுதியற்ற மன்னிப்பைக் கொண்டுவந்தார். எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள், தேவனின் சமாதானம் உங்களை நிரப்பும். ஆண்டவருடனான உங்கள் நட்பு மீட்டெடுக்கப்படும். அவர் ஒளியில் இருப்பது போல நாமும் ஒளியில் நடந்தால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம் சுத்திகரிக்கும்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேபோல், நாம் யாருக்காவது தவறு செய்திருந்தால், அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். (சில சமயங்களில் இது சாத்தியமில்லை என்று நான் புரிந்துகொள்கிறேன்). நமது அன்பின் நடத்தையின் மூலமாக நம் ஐக்கியத்தை அமைதியானதாக வைத்திருப்போம்.

செங்கற்களுக்கு இடையே உள்ள வலுவான சிமென்ட் ஒரு கட்டிடத்தின் வலிமையை தீர்மானிப்பது போல, கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வலுவான ஐக்கியம் ஒவ்வொரு தேவாலயத்தின் பலத்தையும் தீர்மானிக்கிறது. இதை தள்ளிப் போடாதீர்கள்.

Bible Reading: Esther 1-4
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில் நீதியாகச் செயல்படவும், இரக்கத்தை விரும்பவும்,  உம் முன் தாழ்மையுடன் நடக்கவும் எனக்கு கிருபை அருளும். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● அந்த வார்த்தையைப் பெறுங்கள்
● நித்தியத்தில் முதலீடு
● நாள் 02 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● தேவனின் அன்பை அனுபவிப்பது
● நல்ல பண மேலாண்மை
● ஞாயிறு காலை தேவாலயத்திற்கு சரியான நேரத்தில் இருப்பது எப்படி
● சிறிய சமரசங்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్