english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
தினசரி மன்னா

இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

Sunday, 10th of August 2025
0 0 47
Categories : பிரார்த்தனை (Prayer) மன்றாட்டு (Intercession)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்போது பரலோகத்தில் இருக்கிறார், உங்களுக்காகவும் எனக்காகவும் பரிந்து பேசுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எபிரேயர் 7:25 நமக்குச் சொல்கிறது, “மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”

மேலும் ரோமர் 8:34 நமக்கு சொல்கிறது, “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”
‭‭
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இயேசுவின் ஊழியம் மணன்றாடுவது, மன்றாடுவது இயேசுவின் ஊழியம் என்றால், அது நம்முடைய ஊழியமாகவும் இருக்க வேண்டும், மன்றாட்டு ஊழியம் இறுதிக்கால ஊழியம்.

இயேசு சிங்காசனத்தின் முன் பரிந்து பேசுகிறார் என்பது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதையும், நம்முடைய பரிபூரண பிரதான ஆசாரியராக பிதாவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார் என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில், பிரதான ஆசாரியர்கள் மக்கள் சார்பாக செயல்பட நியமிக்கப்பட்டனர்.
1. அவர்கள் இஸ்ரவேலர்களுக்காக பாவநிவாரண பலிகளை கொண்டுவந்து அவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டியிருந்தது.(எபிரெயர் 5:1).
2. ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருந்தது.
3. ஆசாரியர்கள் இறந்துவிட்டார்கள், எனவே புதிய ஆசாரியர்கள் நியமிக்கப்பட வேண்டியிருந்தது (எபிரேயர் 7:23).

வித்தியாசம் என்னவென்றால்:
1. இயேசு ஒரே ஒரு முறை பலியை கொண்டு வர வேண்டும்.அவர் பின்னர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். இது அவருடைய தியாக மரணத்தின் நித்திய மதிப்பை நமக்கு காட்டுகிறது.
2. அவர் நித்திய நித்தியமாய் உயிரோடிருப்பதால், அவர் முடிவில்லாமல் நமக்காக பரிந்து பேச வல்லவராயிருக்கிறார்.

இயேசுவின் பரிந்துரையின் ஊழியம் சாத்தானின் செயல்பாட்டை எதிர்க்கிறது, அவன் தேவனுக்கு முன்பாக எப்போதும் நம்மைக் குற்றம் சாட்டுகிறான் (வெளிப்படுத்துதல் 12:10).

ஒருவேளை ஏதோ உங்களைத் தொந்தரவு செய்திருக்கலாம், அதினிமித்தம் சமாதானம் இல்லை. இப்போது இயேசு உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் பரிந்து பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Bible Reading: Isaiah 65-66 ; Jeremiah 1
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, பிதாவுக்கு முன்பாக என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், நீர் எப்போதும் எனக்காகப் பரிந்து பேசுகிறீர். இந்த ஆறுதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிந்து பேசவும் எனக்கும் கற்றுத்தாரும். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● கடவுளுக்கு முதலிடம் #3
● கடைசி காலத்தின் 7 முக்கிய தீர்க்கதரிசன அடையாளங்கள்: #1
● அபிஷேகத்தின் முதல் எதிரி
● விசுவாசித்து நடப்பது
● சமாதானம் - தேவனுடைய ரகசிய ஆயுதம்
● உங்கள் பிரச்சனைகலும் உங்கள் மனப்பான்மையும்
● சமாதானம் உங்களை எப்படி மாற்றும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய