தினசரி மன்னா
1
0
45
இனி தேக்கம் இல்லை
Friday, 27th of February 2026
Categories :
விசுவாசம்(Relationship)
குழந்தையாக இருந்தபோது, சரியான நண்பர்களை உருவாக்க வேண்டும் என்று என் அம்மா எப்போதும் என்னிடம் கூறுவார். என் பள்ளியில் உள்ளவர்கள் அல்லது நான் விளையாடிய நண்பர்கள் கூட்டமாக இருந்தாலும் சரி. ஆனால் என் இருபதுகளின் தொடக்கத்தில்தான் என் தாய் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்று எனக்குப் புரிந்தது.
"மோசம்போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்".
(1 கொரிந்தியர் 15:33)
சரியான நபர்களுடன் நேரத்தை செலவிடுவதைத் தேர்ந்தெடுப்பது வாழ்க்கையில் நீங்கள் எடுக்கக்கூடிய மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் குரலையும் அவருடைய விருப்பத்தையும் பகுத்தறியத் தொடங்குவதற்கான மிகவும் நடைமுறையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
நீதிமொழிகள் 13:20 சொல்கிறது, "ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான்".
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுமதிக்கும் நபர்களைப் பற்றி, நண்பர்கள், வணிக சகாக்கள் முதல் வாழ்க்கைத் துணைவர்கள் வரை ஞானமான தேர்வுகளைச் செய்ய கடவுள் உங்களுக்கு உதவ விரும்புகிறார். சரியான நபர்களைக் கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் விருப்பத்தை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பகுதியாகும்.
ஒவ்வொரு முறையும் தேவன் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்யும் போது, அவர் புதிய நபர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் - நமது வாழ்க்கைல்விதி ஒரு நோக்கத்துடன் இணைக்கப்பட்டவர்கள். தேவனின் சத்தத்தைப் பகுத்தறிந்து, அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றக் கற்றுக்கொள்வது, தவறான உறவுகளிலிருந்து உங்களை நீக்கி, சரியான நபர்களுடன் உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்யும்.
உங்கள் அதிக நேரத்தை நீங்கள் யாருடன் செலவிட விரும்புகிறீர்களோ அவர்களே உங்கள் வளர்ச்சிக்கும் அல்லது உங்கள் வீழ்ச்சிக்கும் பொறுப்பாவார்கள். எனவே உங்களைச் சுற்றி சரியான நபர்கள் இருப்பது முக்கியம்.
உங்களைச் சுற்றி சரியான நபர்களைப் பெற இரண்டு வழிகள்:
நீங்கள் தேட விரும்பும் முதல் தரம் மதிப்புகள் பொருத்தமாகும். உங்களின் மதிப்புகளுடன் எதிரொலிக்கும் நபர்களைத் தேடுங்கள். நீங்கள் ஜெபத்தை மதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் ஜெபத்தை மதிக்கும் நபர்களாக இருக்க வேண்டும். மற்றும் பட்டியல் தொடரலாம். நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இரண்டாவதாக, “ஆண்டவரே என்னை சரியானவர்களால் சூழ்ந்துகொள்ளுங்கள். சரியான நபர்களுடன் என்னை இணைக்கவும். வனாந்தரத்தில் காடைகளை அனுப்பிய அதே தேவன் உங்களைச் சுற்றி சரியான மனிதர்களை அனுப்புவார். இந்த தீர்க்கதரிசன வார்த்தையை பின்பற்றி உங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்வதை பாருங்கள்.
Bible Reading: Numbers 33-35
ஜெபம்
தந்தையே, என் வாழ்வில் பகுத்தறிவை எனக்குக் கொடுங்கள். தவறான நபர்களிடமிருந்து சரியான நபர்களை அறியவும், உமது ராஜ்யத்தை மேம்படுத்துபவர்களுடன் தொடர்பு கொள்ளவும் எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● கிருபையில் வளருத்தல்● நாள் 16: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல்-I
● நற்செய்தியை சுமப்பவன்
● யூதா எழுந்து புறப்படக்கடவன்
● நேரத்தியான குடும்ப நேரம்
● எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும்
கருத்துகள்
