தினசரி மன்னா
0
0
2
விசுவாசம்: கர்த்தரைப் பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
Tuesday, 4th of August 2026
Categories :
விசுவாசம் ( Faith)
”விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.“
(எபிரெயர் 11:6 )
”கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;“(எபேசியர் 2:8 )
ஒவ்வொரு நபரும் தங்களைப் போற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் ஆர்வத்துடன் பயணிப்பதைப் போலவே, தேவன் அனைவரும் அவரை நம்பி அவருடன் தங்கள் உறவை வளர்த்துக் கொள்ள நேரம் ஒதுக்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியவராகவும் எளிதாகவும் இருக்கிறார். உறவுமுறை விசுவாசம் இல்லாமல், நாம் செய்யும் அனைத்தும் இருதயத்திலிருந்து ஒருபோதும் வராது! உறவில் இருந்து வெளிப்படும் விசுவாசம் வல்லமை வாய்ந்தது.
நான் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நமது நற்செய்தி கூட்டங்களில் ஒன்றில் இருந்தேன். நான் நூற்றுக்கணக்கான மக்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜெபம் செய்து முடித்திருந்தேன், நான் சரிர ரீதியாக சோர்வாக இருந்தேன். நான் எனது காரில் உட்காரப் போகும் போது, ஒரு பெண் தன் மகளுடன் ஜெபத்திற்காக வந்தாள். வீட்டில் சில பிரச்சனைகளால் அவளால் சரியான நேரத்தில் ஆராதனைக்கு வரமுடியவில்லை. அந்தப் பெண் எனது குழு உறுப்பினர்களுக்கு தனது மகளின் மருத்துவ அறிக்கைகளைக் காட்டினார். வெளிப்படையாக, அந்த அறிக்கைகளில் எதுவும் காட்டப்படவில்லை, ஆனால் சிறுமியின் வயிற்றில் பல மாதங்களாக தொடர்ந்து கடுமையான வலி இருந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனது சரிர சோர்வின் காரணமாக அந்தப் பெண்ணின் சிறிய மகளுக்காக ஜெபம் செய்ய நான் ஒரு சதவீதம் விசுவாசத்தை உணரவில்லை. ஆனாலும், “மகனே, இந்த நேரத்தில் நீ எப்படி உணருகிறாய் என்பதைச் சார்ந்து இருக்காதே, மாறாக என்னுடன் உனது உறவை நம்பி, அதன் மீது நம்பிக்கை வைத்துக்கொள்ள்” என்று கர்த்தர் என் ஆவியில் சொல்வதை உணர்ந்தேன்.
அதனால் நான் என் கண்களை மூடிக்கொண்டு ஒரு எளிய ஜெபத்தை ஜெபித்தேன், “அப்பா, தயவுசெய்து இந்த சிறுமிக்கு உதவும். அவளுக்கு உமது தொடுதல் தேவை. இயேசுவின் நாமத்தில்." அவள் அபிஷேகத்தின் கீழே விழுந்தாள். வெளிப்படையாக, நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவள் சரீரத்தில் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு உணர்வை அவள் உணர்ந்தால் என்று தன் அம்மாவிடம் சொன்னாள்.
அடுத்த மாதம், நான் அந்த இடத்தில் இருந்தபோது, தேவன் தங்களுக்கு எப்படி கிருபை புரிந்தார் என்பதை மேடையில் தாயும் மகளும் சாட்சியளித்தனர். அவரது சிறிய மகள் உடல்நிலையில் இருந்து முற்றிலும் குணமடைந்தாள். மாதக்கணக்கில் அடிவயிற்றில் இருந்த சுடும் வலி அவளை விட்டுப் நீங்கியது, அது திரும்பி வரவில்லை.
கர்த்தருடன் உங்கள் உறவை வளர்த்துக் கொள்ள நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் இதைச் செய்யும்போது, நீங்கள் முன்பு செய்ததை விட விசுவாசத்தில் அதிக அடியெடுத்து வைப்பதை விரைவில் காண்பீர்கள். ஏன்? நீங்கள் விசுவாசித்திருக்கிறவர் இன்னார்ரென்று அறிவீர்கள். ( 2 தீமோத்தேயு 1:12 -ஐ வாசியுங்கள் ) அவருடன் உங்களுக்கு தனிப்பட்ட உறவு இருக்கிறது. போராட்டம் இருக்காது.
Bible Reading: Isaiah 42-44
ஜெபம்
ஆண்டவரே, நீர் யார் என்ற வெளிப்பாட்டுடன் எனது அவிசுவாசம் நீங்கட்டும். இயேசுவின் நாமத்தில்!
Join our WhatsApp Channel
Most Read
● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 4● இச்சையை மேற்கொள்வது
● விசுவாசிப்பதற்கான உங்கள் திறனை எவ்வாறு விரிவாக்குவது
● அவரது அலைவரிசைக்கு இசைதல்
● உங்களுக்கு அது முக்கியம் என்றால், அது கடவுளுக்கும் முக்கியம்.
● நான் கைவிட மாட்டேன்
● யாருடைய அறிக்கையை நீங்கள் நம்புவீர்கள்?
கருத்துகள்
