english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. நாள் 20:21 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை
தினசரி மன்னா

நாள் 20:21 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை

Saturday, 31st of December 2022
1 1 847

நிலை மாற்றம்


கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். (சங்கீதம் 115:14)

அநேகர் முன்னேற விரும்புகிறார்கள், ஆனால் அவர்களால்முன்னேற முடியவில்லை. அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது எது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று, அந்த கண்ணுக்கு தெரியாத தடை இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும்.

தேவன் நம்மை முன்னேற செல்லவே படைத்தார்; நாம்நிரந்தரமாக ஒரே இடத்தில் தேங்கி இருக்க அவருக்கு விரும்பவில்லை.

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். (நீதிமொழிகள் 4 :18)

நிலை மாற்றம் தேவைப்படுபவர்கள் யார்?

  • நீண்ட காலமாக அதே நிலையில் இருக்கும் எவரும்.
  • நீண்ட காலமாக நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் மறுத்த எவரும்.
  • மற்றவர்களுக்கு உண்மையாக சேவை செய்தவர்கள், அதற்கான தெய்வீக தயவுக்காக காத்திருப்பவர்கள்.
  • மற்றவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள்.
  • வாழ்க்கையின் பின் இருக்கையில் இருப்பவர்கள்.
  • எழுதப்பட்டவர்கள்.
  • உதவியற்று இருப்பவர்கள்.
  • போராடி உழைத்துக்கொண்டிருப்பவர்கள். 
  • பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள்.

நிலை மாற்றத்தை அனுபவித்தவர்களின் எடுத்துக்காட்டுகள்
  • மொர்தெகாய்
மொர்தெகாயின் நிலை ஒரே இரவில் மாற்றப்பட்டது; அது அவன் கூட எதிர்பார்க்காத ஒன்று; அது தெய்வீகமானது. (வாசியுங்கள் எஸ்தர் 6:1-12 எஸ்தர் 9:3-4)

  • எலிசா
எலியாவிடமிருந்து விழுந்த மேலங்கியும் ஆவியின் பரிமாற்றமும் எலிஷாவின் ஆவிக்குரிய நிலையை மாற்றியது. அவருடைய நிலை மாறியதைக் கவனித்த தீர்க்கதரிசியின்புத்திரர்கள் அவரை வந்து வணங்கினர். (வாசியுங்கள் II இராஜாக்கள் 2:9-15)

  • தாவீது
கோலியாத்தின் தோல்வி தாவீதின் நிலை மாற்றத்திற்கு வழிவகுத்தது. வாழ்க்கைப் போர்கள் உன்னை அழிப்பதற்காக அல்ல; அவைகள் உங்கள் நிலை மாற்றத்தை அறிவிக்கவேவருகின்றன.

சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.  ( I சாமுவேல்18:2 )

 இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து, II சாமுவேல்7:8 
  • பவுல்
தேவாலய (சுவாசம்) பயமுறுத்திய பவுல், நிலை மாற்றத்தை அனுபவித்தார், ராஜ்யத்திற்கு ஒரு அப்போஸ்தலன் ஆனார்.

அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். (I தீமோத்தேயு 1:16)
  • யோசேப்பு 
யோசேப்பு எண்ணி பார்க்க முடியாத ஒரு நிலைக்கு உயர்ந்தார். அந்நிய தேசத்தில், தேவன் அவரை தலைவராக்கினார். (ஆதியாகமம் 41:14-46)

நிலை மாற்றத்தை எப்படி அனுபவிப்பது

தேவன் எல்லோருடைய நிலையையும் மாற்றத் தயாராக இருக்கிறார், ஆனால் அவர் தனது வார்த்தையின்படி மட்டுமே செயல்படுவார். நிலை மாற்றத்தை அனுபவிக்க விரும்பும் எவராலும் மீறக்கூடாத குறிப்பிட்ட சில கொள்கைகள் உள்ளன. வேதாகமத்தில் நிலை மாற்றத்தை அனுபவித்தவர்கள் இந்த கொள்கைகளை பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படுத்தினர். சில அடிப்படைக் கொள்கைகளைப் பார்ப்போம்.
  • உண்மையாய் வாழுங்கள்
தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்து, அவன் உத்தமனாகஇருந்ததால் அவனுடைய நிலையை மாற்றினார். 

இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். (சங்கீதம் 78:72)
  • தேவனுக்கு பயந்து வாழுங்கள்
கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். தேவனுக்குபயப்படும் பயம் நிலை மாற்றத்திற்கு உங்களை நிலைநிறுத்தும். யோசேப்பு சோதிக்கப்பட்டார், அவர் சோதனையில் தோல்வியடைந்திருந்தால், அவர் சிங்காசனத்தை அடைந்திருக்க மாட்டார். பாவத்தின் இன்பத்தால் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; நிலை மாற்றத்தை நீங்கள் விரும்பினால், தேவனுக்கு பயப்படும் பயம் உங்கள் இதயத்தை ஆள வேண்டும். 

  • நிலை மாற்றத்திற்காக ஜெபியுங்கள்
நீங்கள் ஜெபிக்கிளீர்களே ஆனால் தேவன் உங்கள் நிலையை மாற்ற தயாராக இருக்கிறார்.

மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

10. கடல்தொட்டியை கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான். (II நாளாகமம் 4:9-10)
 
  • உங்களுக்கு தேவனுடைய தயவு வேண்டும்
போட்டிக்கு வந்த மற்ற பெண்களை விட எஸ்தர்க தயவைபெற்றதால், எஸ்தரின் நிலை மாறியது. தயவானது நிலை மாற்றத்திற்கு உங்களைத் தகுதிப்படுத்தும்.

ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான். (எஸ்தர் 2:17)
  • தேவனுடன் ஒரு உண்மையான நேர்முக சந்திப்பிற்கு செல்லுங்கள்
மோசேக்கு தேவனுடன் ஏற்பட்ட சந்திப்புதான் அவரது நிலையை மாற்றியது. மோசே பார்வோனிடமிருந்து வனாந்தரத்திற்கு ஓடினான், ஆனால் அவன் தேவனை சந்தித்தபோது, ​​அவன் பார்வோனுக்கு தேவனானான். (வாசியுங்கள் யாத்திராகமம் 3:2 / 4-10)
  • மற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வாக இருங்கள்

ஜோசப் பார்வோனுக்கும் எகிப்துக்கும் ஒரு தீர்வாக இருந்ததால் நிலை மாற்றத்தை அனுபவித்தார். நீங்கள் நிலை மாற்றத்தை அனுபவிக்க விரும்பினால் மற்றவர்களின் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கவும்.
  • ஞானத்தை தேர்ந்தெடுங்கள்
ஞானமே முதன்மையானது, அதைத்தான் சாலமோன்கேட்டார். தேவன் சாலமோனுக்குக் கொடுத்த ஞானம்தான் அவருடைய நிலையை மாற்றியது. ( வாசியுங்கள் II இராஜாக்கள் 3:5-10)

தேவன் எந்த நேரத்திலும் யாருடைய நிலையையும் மாற்ற முடியும், தேவனை விட்டுவிடாதீர்கள். அவருக்கு உண்மையாக சேவை செய்யுங்கள், சரியான நேரத்தில் அவர் உங்களை உயர்த்துவார்.
ஜெபம்
ஒவ்வொரு ஜெப ஏவுகணையும் உங்கள் இதயத்திலிருந்து வரும் வரை தொடர்ந்து செய்யவும். அதன் பிறகு அடுத்த ஜெப ஏவுகணைக்குச் செல்லுங்கள். (இதை தொடர்ந்து செய்யவும், சொந்தமாக்கி கொள்ளவும், ஒவ்வொரு ஜெப குறிப்பையும் குறைந்தபட்சம் 1 நிமிடம் செய்யவும்)

1. ஆண்டவரே, உமது வல்லமையால், இயேசுவின் நாமத்தில் நிலை மாற்றத்தை என்னை அனுபவிக்கச் செய்யும்.

2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், இந்த 21 நாள் உபவாசத்தில் உள்ள அனைவரும் உயர்ந்த நிலைக்கு செல்ல ஜெபிக்கிறேன்.

3. இயேசுவின் நாமத்தில் தோல்வியின் உணர்வை நான் நிராகரிக்கிறேன். 

4. இயேசுவின் நாமத்தினாலே என்னுடைய எல்லாப் பிரயாசங்களிலும் பலனளிக்கும் கிருபையைப் பெறுகிறேன்.

5. நான் வீணாக உழைக்க மாட்டேன். என் அன்புக்குரியவர்களும் இயேசுவின் நாமத்தில் வீணாக உழைக்க மாட்டார்கள்.

6. பிதாவே, இயேசுவின் நாமத்தில் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயார் செய்தவர்களுடன் என்னை இணைக்கவும்.

7. பிதாவே, இயேசுவின் நாமத்தில் எனது அடுத்த கட்டத்திற்கான திருப்புமுனை யோசனைகளை எனக்குக் தாரும்.
 
8. இயேசுவின் நாமத்தில் ஒரு திருப்புமுனை சாட்சியத்திற்கான புதிய நுண்ணறிவுகளை நான் பெறுகிறேன்.

9. பிதாவே, இயேசுவின் நாமத்தில் எனக்காக புதிய திருப்புமுனை கதவுகளைத் திறக்கிறதற்காய் ஸ்தோத்திரம்.

10. இயேசுவின் நாமத்தில் பொருளாதார முன்னேற்றங்களுக்கு நான் தயவை பெறுகிறேன்.

11. பிதாவே, இயேசுவின் நாமத்தில் எனக்காக சர்வதேச கதவுகளைத் திறக்கிறதற்காய் ஸ்தோத்திரம்.

Join our WhatsApp Channel


Most Read
● நாள் 20:40 நாட்கள் உபவாச ஜெபம்
● இந்த ஒரு காரியத்தை செய்யுங்கள்
● கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி
● மன்னா, கற்பலகைகள் மற்றும் கோல்
● தேவன் கொடுப்பார்
● தேவன் பலன் அளிப்பவர்
● பாவத்துடன் போராட்டம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய