english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. தலைப்பு: அவர் காண்கிறார்
தினசரி மன்னா

தலைப்பு: அவர் காண்கிறார்

Sunday, 21st of May 2023
0 0 760
Categories : Discipleship
“மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”
‭‭1 சாமுவேல்‬ ‭16‬:‭7‬

ஒரு நாள் ஆண்டராகிய இயேசு தேவாலயத்திலுள்ள காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்திருந்தபோது, ​​ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார். (மாற்கு 12:41) கர்த்தராகிய இயேசு ஆலயத்தின் காணிக்கைப்பெட்டியில் ஜனங்கள் வைத்த தொகையை மட்டும் பார்க்கவில்லை, ஆனால் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுத்த மனப்பான்மையைக் கண்டார் என்று நான் நம்புகிறேன்.

அற்பமான தோற்றமுடைய ஒரு விதவை ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போடுவதை இயேசுவின் கண்கள் கண்டது. அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இயேசுவின் கவனத்தை ஈர்த்தது காணிக்கையின் அளவு அல்ல, மாறாக விதவையின் கொடுக்கும் மனப்பான்மை. உங்கள் காணிக்கை தேவனின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பதையும் இது சொல்கிறது.

2 நாளாகமம்‬ ‭16‬:‭9‬ ‭சொல்கிறது, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.”

நலிந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும், வல்லமையற்றவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த செய்தி. உங்களுக்கு ஒரு அற்புதம் தேவையா? உங்கள் இருதயம் அவருக்கு உண்மையாக இருந்தால், உங்கள் சூழ்நிலையில் வல்லமை வாய்ந்ததாகக் காண்பிக்க தேவனின் கண்கள் உங்கள் மீது உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

“பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.”
‭‭ஆதியாகமம்‬ ‭6‬:‭11‬-‭12‬ ‭

ஆனால் நோவா வித்தியாசமாக இருந்தார். அவர் கூட்டத்தோடு ஓடாமல், தன் குடும்பத்தோடு சேர்ந்து தேவனைத் தேடினார். "ஆனால் நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபையை கிடைத்தது" என்று வேதம் கூறுகிறது. (ஆதியாகமம் 6:8)

இறந்த மீன்கள் கூட கீழ்நோக்கி பாயும், ஆனால் உயிருள்ள மீன் மட்டுமே ஓட்டத்திற்கு எதிராக செல்ல முடியும் என்று ஒருவர் கூறினார். ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி அநாகரீகம் அதிகரித்து வருகிறது, ஆனால் அதற்கு நம்மை விட்டுக்கொடுக்கக் கூடாது.

அதற்கு பதிலாக, நோவாவைப் போல நாம் கர்த்தரை மேலும் மேலும் பற்றிக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய கண்களுக்கு எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை நினைவில் வையுங்கள். "ஆண்டவரே, நான் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், எனக்கு உதவும், ஆண்டவரே" என்று தினமும் தேவனிடம் ஜெபிப்போம். உங்கள் எதிரிகள் கூட உங்கள் வாழ்க்கையில் தேவனின் வேலையை அங்கிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
ஜெபம்
1.நாம் 2023 ல் செவ்வாய்/வியாழன்/சனி) உபவாசம் இருக்கிறோம். இந்த உபவாசம் ஐந்து முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது.

2. ஒவ்வொரு ஜெபக் குறிப்பையும் குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் ஜெபம் செய்யப்பட வேண்டும்

3. மேலும், நீங்கள் உபவாசம் இல்லாத நாட்களிலும் இந்த ஜெப குறிப்புகளை பயன்படுத்தவும்

 ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உமக்கு விசுவாசமாக இருக்கும் இருதயத்தை எனக்குத் தாரும். உமது கிருபை இன்றும் என்றும் என் மீது இருக்கட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

குடும்ப இரட்சிப்பு
நான் முழு மனதுடன் நம்புகிறேன், நானும் எனது வீட்டாரும் உம்மையே சேவிப்போம் என்று அறிக்கை செய்கிறேன். வரும் என் தலைமுறையும் கர்த்தருக்கு சேவை செய்யும். இயேசுவின் நாமத்தில் .

 பொருளாதார திருப்புமுனை 
 பிதாவே, எனக்கு வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான தொழில் மற்றும் மனத் திறன்களைக் தாரும். இயேசுவின் நாமத்தில். என்னை ஆசீர்வாதமாக மாற்றும்.

 சபை வளர்ச்சி
 பிதாவே நேரலை ஆராதனைகளை, பார்க்கும் ஒவ்வொரு நபரும் குறிப்பிடத்தக்க அற்புதங்களைப் பெறட்டும், அதைப் பற்றி கேட்கும் அனைவரையும் திகைக்க வைக்கும். இந்த அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்படுபவர்களும் உங்களை நோக்கித் திரும்பும் நம்பிக்கையைப் பெற்று, அற்புதங்களைப் பெறட்டும்.

தேசம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இருளின் பொல்லாத வல்லமையின் அமைக்கப்பட்ட அழிவின் ஒவ்வொரு பொறியிலிருந்தும் எங்கள் தேசத்தை (இந்தியா) விடுவித்தருளும்.

Join our WhatsApp Channel


Most Read
● ஆவியின் கனியை எவ்வாறு வளர்ப்பது -1
● உங்கள் விடுதலையை இனி நிறுத்த முடியாது
● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 5
● விசுவாசத்தை முடத்தனத்திலிருந்து வேறுபடுத்துதல்
● நாள் 14: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● உங்கள் இருதயத்தை பரிசோயுங்கள்
● இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய