english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. உங்கள் முழு திறனை அடையுங்கள்
தினசரி மன்னா

உங்கள் முழு திறனை அடையுங்கள்

Friday, 14th of July 2023
0 1 1449
Categories : Excellence
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” ‭‭சங்கீதம்‬ ‭139‬:‭14‬

உங்கள் உன்னதத் திறனை நீங்கள் அடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இப்போது நீங்கள் அப்படிப் பேசும்போது, நம் சொந்த கிறிஸ்தவ சகோதரர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம் நமது ஆரம்ப நிலைதான்; கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டுமானால் நாம் கற்பிக்கப்பட்டிருப்பது தாழ்ந்தவராகவும் முக்கியமற்றவராகவும் இருக்க வேண்டும் என்பதே.

“ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்பது முற்றிலும் உண்மை (யாக்கோபு 4:6). உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் விட நீங்கள் thaan சிறந்தவர் என்று நீங்கள் நினைப்பதை கர்த்தர் விரும்புவதில்லை என்பதே இந்த வேத வசனத்தின் பொருள் - அது பெருமை. இருப்பினும், நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

ஒருவர் இப்படி சொன்னது சரிதான். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அவ்வாறே  தேவன் உங்களை நேசிக்கிறார், ஆனால் அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அவ்வாறே இருக்க முடியாது. நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த முறையில், பிதா மகிமைப்படுத்தப்படுகிறார். (யோவான் 15:8)
தேவன் உங்களிடம் கேட்கும் எதையும் நீங்கள் செய்ய வல்லவர் என்று நம்புவது பெருமை அல்ல; அது விசுவாசம்!

“நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், ராஜாக்களைப் போல விருந்து புசிப்பீர்கள்.” (ஏசாயா 1:19 MSG) ஒரே நிபந்தனை, எந்த நேரத்திலும் நம் வாழ்க்கையில் தேவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதுதான். தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார், பாலைவனத்தில் அல்ல. அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்கள் ராஜாக்களைப் போல் வாழ்ந்தார்கள்.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இது உங்கள் வாழ்க்கையில் கவலையையும் பயத்தையும் கொண்டு வரும். இருப்பினும், உங்களில் உள்ள சிறந்ததை வெளிக்கொணடு வர நீங்கள் தேவனை அனுமதிக்கும் போது, ​​உங்களை சிறந்தவராக மாற்றுவார், விவரிக்க முடியாத நிறைவையும் திருப்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு (ரோமர் 1:17), பலத்திலிருந்து பலத்திற்கு, மகிமையிலிருந்து மகிமைக்கு முன்னேறுவீர்கள். (2 கொரிந்தியர் 3:16-18). தேவனின் பிள்ளைகளாக நாம் கொண்டிருக்கும் உயர்வு, மாற்றம், மகிமைப்படுத்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான முடிவற்ற சாத்தியத்தை இந்த வேத வசனங்கள் பிரதிபலிக்கின்றன.
ஜெபம்
பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு ஆயத்தமாக, நீங்கள் எங்களுடன் உபவாசத்தில் இணையலாம் (சனி, ஞாயிறு). மும்பை முலுண்டில் உள்ள காளிதாஸ் ஹாலில் நாளை சந்திப்போம்.

தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது பாதையில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கான திறனை எனக்குத் தாரும், எல்லா நேரங்களிலும் உமது நோக்கத்தில் உறுதியாகத் தொடர உதவும். ஆமென்!

குடும்ப இரட்சிப்பு 
18 உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். (சங்கீதம் 37:18-19) 

 பொருளாதார முன்னேற்றம் 
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (பிலிப்பியர் 4:19) எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எந்த நன்மையும் குறைவுபடாது. இயேசுவின்  நாமத்தில் ஆமென். 

கேஎஸ்எம் சர்ச் 
பிதாவே, உமது வார்த்தை கூறுகிறது, எங்களைக் காத்து, எங்கள் வழிகளில் எங்களைக் காக்கும்படி உமது தூதர்களுக்கு எங்களைக் கட்டளையிடுங்கள். இயேசுவின்  நாமத்தில், பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் மற்றும் கருணா சதன் அமைச்சகங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரையும் சுற்றி உங்கள் பரிசுத்த  தேவ தூதர்களை விடுவிக்கவும். அவர்களுக்கு எதிரான இருளின் ஒவ்வொரு செயலையும் அழித்துவிடுங்கள். 

தேசம் 
 பிதாவே, உமது அமைதியும் நீதியும் எங்கள் தேசத்தை நிரப்பட்டும். நம் தேசத்திற்கு எதிரான இருள் மற்றும் அழிவு  வல்லமைகள் அனைத்தும் அழிக்கப்படட்டும். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மாநிலங்களிலும் பரவட்டும். இயேசுவின்  நாமத்தில் ஆமென்.

Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் அன்பை அனுபவிப்பது
● விடாமுயற்சியின் வல்லமை
● விசுவாசத்தால் பெறுதல்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● உங்கள் தரிசு நிலத்தை பண்படுத்துங்கள்
● தேடி கண்டுபிடித்து ஒரு கதை
● புதிய ஆவிக்குரிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுங்கள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய