english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி
தினசரி மன்னா

சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி

Saturday, 12th of August 2023
1 1 931
Categories : ஆராதனை (Worship)
“அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.”
‭‭யாத்திராகமம்‬ ‭10‬:‭24‬ ‭l

பார்வோன் மோசேயைக் azhaithu, கர்த்தருக்குப் போய்ச் aaradhikumbadi சொன்னார். மேலோட்டமாகப் பார்த்தால், பார்வோன் இறுதியாக தோல்வியை ஒப்புக்கொண்டது போல் தெரிகிறது. இருப்பினும், நீங்கள் உற்று நோக்கினால், பார்வோன் மந்தைகளையும் மிருக ஜுவன்களையும் பின்னால் வைத்திருந்தான்.

காரணம், பார்வோன் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேலின் திறனைக் குறைக்க விரும்பினான். எனவே மோசே மீண்டும் சமரசம் செய்ய மறுத்துவிட்டார்.

நீங்கள் யோபு 1ஐப் படித்தால், எதிரி முதலில் தாக்கியது கால்நடைகளைத் தான். இதற்குக் காரணம், யோபு தினமும் காலையில் தேவனுக்கு பலிகளைச் செலுத்துவார், இது ஆராதனையின் அடையாளமாக இருந்தது. கால்நடைகள் இல்லை என்றால், யோபு எப்படி தேவனை வணங்க முடியும்?

இன்று தேவனை ஆராதிக்க எருதுகளும் ஆடுகளும் தேவையில்லை என்பதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். கர்த்தராகிய இயேசு, தம்முடைய ஒரே பரிபூரண தியாகத்தின் மூலம், திரையை கிழித்தெறிந்தார், அதனால் இப்போது நாம் தேவனின் பிரசன்னத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

“ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.”
‭‭எபிரெயர்‬ ‭10‬:‭14‬ ‭

தேவன் தேடுவது ஒன்று என்றால் அது ஆராதனைதான்.  யோவான் 4:23 (NLT) நமக்குச் சொல்கிறது, ““உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”

எல்லாவற்றையும் விட தேவன்  விரும்புவது ஒன்றுதான்; அவருடைய முகத்தைத் தேட நாம் எடுக்கும் நேரம் இது. மேலும் எதிரி (பிசாசு) தேவனை ஆராதிப்பதை  தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாin. எதிரியின் உபாயங்களைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார் (2 கொரிந்தியர் 2:11 பாருங்கள்).

பெருமை
பெருமையை விட உண்மையான aaradhanaiku வேறு எதுவும் தடையாக இல்லை. ஒருவர் விழிப்புடன் இல்லாவிட்டால், ஒருவன் தன் பணிவைக் கண்டு பெருமைப்படலாம். சில கிறிஸ்தவர்கள் தேவன் அவர்களைப் பயன்படுத்துவதைப் பற்றி பெருமைப்படுகிறார்கள். இயேசுவை உட்கார வைத்துக்கொண்டு எருசலேமுக்குள் நுழைந்த கழுதையை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நமது பொருளால் தேவனை வணங்கத் தவறுவது
நீதிமொழிகள் 3:9-10ல், இந்தக் கட்டளையைக் காண்கிறோம்,

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து தங்கள் தேவனை ஆராதிப்பதற்காக வெறுங்கையுடன் செல்வதை பார்வோன் பொருட்படுத்தவில்லை, தங்கள் உடைமைகளை எகிப்தில் விட்டுவிட்டு செல்லும்படி கட்டளையிட்டான்.

பழைய உடன்படிக்கையின் கீழ் தேவன் உண்மையில் அவரை ஆராதிப்பதற்காக அவருடைய ஆசீர்வாதங்களில் இருந்து எந்த அன்பளிப்பும் அல்லது காணிக்கையும் இல்லாமல், வெறுங்கையுடன் தம் முன் வருவதைத் தடை செய்தார். “வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.” என்று தேவன் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 34:20).

நாம் கொடுப்பதன் மூலம் தேவனை ஆராதிப்பது, நம்மிடம் உள்ள அனைத்திற்கும் தேவனை ஆதாரமாக ஒப்புக்கொள்கிறது, மேலும் அவர் நமக்கு முதலில் கொடுத்தவற்றின் நிர்வாகிகள் மட்டுமே. இங்குதான் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் போராடுகிறார்கள்.
ஜெபம்
ஒவ்வொரு  ஜெபக் குறிப்பையும்  குறைந்தது 3 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல்  ஜெபம் செய்யப்பட வேண்டும்

தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
ஜுவனுள்ள தேவனே உம்மைஆராதிப்பதற்க்கு என்னைத் தடுக்கும் ஒவ்வொரு வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும். ஆமென்.

குடும்ப இரட்சிப்பு
பிதாவாகிய தேவனே, " தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 7:10) என்று  உமது வார்த்தை கூறுகிறது. எல்லாரும் பாவம் செய்து உமது மகிமையை இழந்து விட்டார்கள் என்ற நிஜத்திற்கு எங்கள் கண்களைத் திறக்க உங்களால் மட்டுமே முடியும். என் குடும்ப அங்கத்தினர்கள் மனந்திரும்பி, உம்மிடம் சரணடைந்து, இரட்சிக்கப்படுவதற்காக, தேவனுக்கேற்ற துக்க உணர்வோடு உமது ஆவியை அவர்கள் மீது செலுத்துங்கள். இயேசுவின்  நாமத்தில்.

பொருளாதார முன்னேற்றம்
பிதாவே, இயேசுவின்  நாமத்தில்  ஆதாயம் அற்ற உழைப்பு மற்றும் குழப்பமான செயல்களிலிருந்து என்னை விடுவிக்கவும்.
 
KSM சபை வளர்ச்சி
பிதாவே, இயேசுவின்  நாமத்தில்,  நேரடி ஒளிபரப்பு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சென்றடைய வேண்டும் என்று நான்  ஜெபிக்கிறேன்.  உம்மை   ஆண்டவராகவும்  ரட்சகராகவும் அறிய அவற்றை வரையவும். இணைக்கும் ஒவ்வொரு நபரும் வார்த்தை,  ஆராதனை மற்றும்  ஜெபத்தில்  வளர  உதவும்.
 
தேசம்
பிதாவே, இயேசுவின்  நாமத்தில், எங்கள் தேசத்தின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் உங்கள் ஆவியின்  வல்லமையான நகர்வுக்காக நான் ஜெபிக்கிறேன், இதன் விளைவாக தேவாலயங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்  அடைய உதவும்.

Join our WhatsApp Channel


Most Read
● இயற்கைக்கு அப்பாற்ப்பட்டதை அணுகுதல்
● கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றுவது
● சபை ஆராதனையை தவிர்த்துவிட்டு, வீட்டில் சபை ஆன்லைனில் பார்ப்பது சரியா?
● பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-1
● ஆராதனையின் நான்கு அத்தியாவசியங்கள்
● கதவை  அடையுங்கள்
● விதையின் வல்லமை - 3
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய