english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. இயற்கைக்கு அப்பாற்ப்பட்டதை அணுகுதல்
தினசரி மன்னா

இயற்கைக்கு அப்பாற்ப்பட்டதை அணுகுதல்

Thursday, 17th of August 2023
0 0 686
Categories : இரட்சிப்பு(Salvation) உறவுகள்(Forgiveness) விசுவாசம் (Faithfulness) விசுவாசம்(Relationship)
"நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்". II கொரிந்தியர் 5:7)

"தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;" (எபேசியர் 1:18)

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு மனிதனுக்காக ஜெபித்தேன், அவர் தனது மனைவியை ஆச்சரியப்படுத்தும் திட்டத்துடன் வெளிநாட்டில் தனது வேலையிலிருந்து வீடு திரும்பியதை என்னிடம் கூறினார். மாறாக, அவர் கதவைத் திறந்தபோது, அவர் மற்றொரு ஆணுடன் இருப்பதைக் கண்டார். அவர் முற்றிலும் மனம் உடைந்தார், ஆனால் அவரது குழந்தைகள் காரணமாக திருமணத்தைத் தொடர்ந்தார். அவர் அடிக்கடி எனக்கு எழுதுவார், "அவர் எப்படி தற்கொலை செய்து கொள்ள விரும்பினார், ஆனால் இயேசுவின் மீதான நம்பிக்கையால் மட்டுமே அவர் தொடர்ந்தார்."

சில சமயங்களில் அவருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இருப்பினும், ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் வல்லமைவாய்ந்த ஒன்றைச் சொன்னார். அந்த நபரிடத்தில் “அவனது இயற்கையான கண்களால் பார்க்காமல் அவனது ஆவிக்குரிய கண்களால் பார்க்கச் சொல்” என்று கூறினார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் தேவனுடைய ஆலயத்தை, தேவனை தேடும்போதும் தேவனை ஆராதிப்பதையும் பார்க்கச் சொல் என்று கூறினார். இந்த பெண் ஒருபோதும் ஜெபம் செய்ய மாட்டார், குழந்தைகளையும் தேவாலயத்திற்கு வர அனுமதிக்க மாட்டார்.

கர்த்தருடைய இந்த வார்த்தையை நான் அவரிடம் சொன்னபோது, அவர் மிகவும் கசப்புடன் அழுதார், ஆனால் சொன்னதைச் செய்வதாக உறுதியளித்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் தேவாலயத்தில் அவருடன் சேர்ந்து ஆராதனையில் கலந்துக்கொள்வதை அவர் பார்ப்பார். அவர் என்ன பார்க்கப் போகிறார் என்பதைப் பற்றியும் பேசுவார். இதை அவர் நான்கு மாதங்கள் தொடர்ந்தார்.

ஒரு நாள், தவிர்க்க முடியாதது நடந்தது. அவர் தேவாலயத்தில் பணிபுரிந்ததால், வழக்கம் போல் சீக்கிரம் வந்தார். ஒரு மணி நேரம் கழித்து, அவரது மனைவி பிள்ளைகளுடன் வந்து, அவருக்கு அருகில் அமர்ந்து, கன்னங்களில் கண்ணீர் வழிய ஆராதனை செய்தார்கள். அன்று, நான் சபையாரை விடுதலைக்காக முன் வருமாறு அழைத்தபோது, அவள் வந்து நம் ஆண்டவரால் மகிமையுடன் இரட்சிக்கப்பட்டாள். அந்த நாள் அவளுக்குள் ஆரம்பித்தது விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கும் மகிமைக்கும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. (2 கொரிந்தியர் 3:18) இந்த நபர் தன் மனைவியைக் கைவிட்டிருந்தால் என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நம்மில் பலருக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.

முதலில், நீங்கள் விரும்பும் நபர்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடாதீர்கள்.

இரண்டாவதாக, ஆவியின் கண்களால் பார்ப்பதன் மூலம் உங்கள் விசுவாசத்தை விடுவிக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய தேவனை நம்புகிறீர்கள்? முதலில், உங்கள் ஜெபத்திற்கு பதில் கிடைத்ததை விசுவாசக் கண்களால் பார்க்கத் தொடங்குங்கள் (எபிரெயர் 11:1) பின்னர் அதையே பேசுங்கள். அது தேவனின் மகிமைக்காக நடக்கும்.

ஜெபம்
ஒவ்வொரு  ஜெபக் குறிப்பையும்  குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல்  ஜெபம் செய்யப்பட வேண்டும்
 
தனிப்பட்ட  ஆவிக்குரிய வளர்ச்சி 
ஜெபம்:
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வார்த்தை என்னில் ஒரு பகுதியாக மாறும் வரை தியானிக்க எனக்கு உதவும். என் ஜெபங்கள் ஆவியின் மண்டலத்தில் வெளிப்படுவதைக் காண என் கண்களைத் திறவும். ஆமென்.

குடும்ப இரட்சிப்பு
இயேசுவின்  நாமத்தினால், நானும், எனது குடும்ப உறுப்பினர்களும், தேவாலயமும் ஒவ்வொரு கோட்பாட்டின்  ஆவி அல்லது மனிதர்களின் தந்திரத்தால் அங்கும் இங்கும் தள்ளப்படக்கூடாது என்று ஆணையிடுகிறேன்.

இயேசுவின்  நாமத்தினால், நான், என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவாலயம் வஞ்சகமான சதித்திட்டத்தின்  தந்திரத்திற்கு எதிராக பாதுகாக்கப்படுகிறோம், மேலும் கவனமாக மறைக்கப்பட்ட பொய்களை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம், அவற்றை முற்றிலும் நிராகரிக்கிறோம்.

பொருளாதார முன்னேற்றம்
என் தேவன் கிறிஸ்து இயேசுவின் மூலம் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி என் தேவைகளையும் என் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வார்.

KSM சர்ச் வளர்ச்சி
பிதாவே, பாஸ்டர் மைக்கேல் மற்றும் அவரது குழு உறுப்பினர்களை உங்கள் ஆவியின் புதிய அபிஷேகத்தால் அபிஷேகம் செய்யுங்கள், இதன் விளைவாக உங்கள் மக்கள் மத்தியில் அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மற்றும்  வல்லமையான செயல்களை  செய்வார்களாக. இதன் மூலம் மக்கள் உமது ராஜ்யத்தில் சேர்க்கப்படுவார்கள். இயேசுவின்  நாமத்தில்.

தேசம்
 பிதாவே, இயேசுவின்  நாமத்தினால், இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும், மாநிலத்திலும் உள்ள மக்களின்  இருதயங்கள் உம்மை நோக்கித் திரும்ப வேண்டும் என்று  ஜெபிக்கிறேன். அவர்கள் தங்கள்  பாவங்களை விட்டு மனந்திரும்பி, இயேசுவை தங்கள் இரட்சகராகவும்    ஏற்றுக்கொள்வார்களாக

Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் குணாதிசயம்
● அவரது வெளிச்சத்தில் உறவுகளை வளர்ப்பது
● உங்கள் விசுவாசத்தை சமரசம் செய்யாதீர்கள்
● உங்கள் ஜெப வாழ்க்கையை பெலப்படுத்த நடைமுறை குறிப்புகள்
● ஆராதனை: சமாதானத்திற்கான திறவுகோல்
● அக்கிரமத்தின் வல்லமையை உடைத்தல் – (I)
● அப்பாவின் செல்ல மகள் - அக்சாள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய