english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. இது எவ்வளவு முக்கியம்?
தினசரி மன்னா

இது எவ்வளவு முக்கியம்?

Monday, 28th of August 2023
0 0 624
Categories : நற்செய்தி (Gospel)
“நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭11‬:‭30‬ ‭

ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, அவருக்குப் பக்கத்தில் மற்றொரு இளைஞன் நடந்து வந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்த தனது சாட்சியைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இதனால் கவரப்பட்ட இந்த இளைஞன் தான் அழைத்த ஆராதனைக்கு சென்றான்.

ஒரு சிறிய அறையில் இந்த ஆராதனை நடைபெற்றது, மிகக் குறைவான மக்கள் இருந்தனர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இந்த இளைஞனைத் தொடுவதைத் தடுக்கவில்லை. அதனால் அந்த இரவில், தேவன் இந்த இளைஞனைத் தொட்டார், தற்கொலை எண்ணங்கள் அனைத்தும் மறைந்தன. இந்த இளைஞன் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா - அது நான்தான்.

நான் எப்பொழுதும் கற்பனை செய்து பார்ப்பேன், "இந்தப் இளைஞன் என்னிடம் இயேசுவைப் பற்றிச் சொல்லாவிட்டால் என்ன செய்து இருப்பேன்? நான் இப்போது எங்கே இருiந்திருப்பேன்?"

நம் சொந்த நலன்களில் மூழ்குவது மிகவும் எளிதானது, நித்தியத்தையும் நம்மைச் சுற்றியுள்ள அழிந்துவரும் ஆத்துமாக்களையும் நாம் இழக்கிறோம்.

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த ஒரு வழி, உங்கள் சாட்சியை உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வது. ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை தேவனிடம் கேளுங்கள். உங்கள் சாட்சி எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது மக்களை அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கான தேவனின் வல்லமையைக் கொண்டுள்ளது.

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த மற்றொரு வழி, சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு உங்கள் நேரத்தையும், திறமையையும், பொக்கிஷத்தையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் யாரையாவது கர்த்தரிடம் வழிநடத்தியிருந்தால், வளர சரியான வழியைக் கண்டுபிடிக்க அவர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள். அவர்கள் வேதத்தை வாசிக்க அவர்களை ஊக்குவிக்கவும். அவர்களை அழைக்கவும் அல்லது வேதத்தை போதிக்கும் விஷயங்களைக் கேட்க அவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு நல்ல தேவாலயத்திற்கு அவர்களை வழிநடத்தவும். ( மத்தேயு 28:19-20 ) இன்றைய காலங்களில், ஆன்லைன் சேவைகளைப் பார்க்க அவர்களை நீங்கள் அழைக்கலாம்.
ஜெபம்
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, இயேசுவின் நாமத்தில், என்னை ஆத்துமா ஆத்தும ஆதாயப்படுத்துபவனாக மாற்றியதற்கு நன்றி. உமது ராஜ்யத்தில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த உமது ஆவியால் எனக்கு அதிகாரம் தாரும். இரட்சிப்பின் நற்செய்தியை என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றி. ஆமென்!

குடும்ப இரட்சிப்பு
பிதாவே, உமது வார்த்தை கூறுகிறது, "“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" (யோவான் 6:44). என் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் உமது குமாரனாகிய இயேசுவிடம் இழுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், அவர்கள் உம்மை தனிப்பட்ட முறையில் அறிந்து, உம்முடன் நித்தியத்தை செலவிடுவார்கள்.

பொருளாதார ஆசீர்வாதம்
ஓ ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஆதாயமற்ற மற்றும் பயனற்ற உழைப்பிலிருந்து என்னை விடுவியும். என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதியும்.

இனி எனது தொழில் மற்றும் ஊழியத்தின் ஆரம்பம் முதல் எனது அனைத்து உழைப்பும் இயேசுவின் நாமத்தில் முழு ஆதாயத்தை அளிக்கத் தொடங்கும்.

கேஎஸ்எம் சபை:
பிதாவே, பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அனைவரும் சுகத்துடன் இருக்க இயேசுவின் நாமத்தில் பிரார்த்திக்கிறேன். உமது சமாதானம் அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சூழ்ந்திருக்கட்டும்.

தேசம்:
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இந்த தேசத்தை நிர்வகிக்க ஞானமும் புரிதலும் உள்ள தலைவர்களையும், சகோதர சகோதரிகளையும் எழுப்பும்.
ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● சமாதானம் - தேவனுடைய ரகசிய ஆயுதம்
● நாள் 31 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● வேதத்தை திறம்பட வாசிப்பது எப்படி
● மற்றவர்களுக்கு கிருபையை புரியுங்கள்
● நாள் 17: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● உங்கள் இலக்குகளை அடைவதற்கான வல்லமையை பெறுங்கள்
● மன்னா, கற்பலகைகள் மற்றும் கோல்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய