தினசரி மன்னா
அகாப்பே அன்பில் எப்படி வளருவது
Monday, 11th of September 2023
1
0
456
Categories :
Fruit of the Spirit
Love
அகாப்பே அன்பு என்பது மிக உயர்ந்த அன்பு. இது 'தேவனின் ஒரு வகையான அன்பு' என்று குறிப்பிடப்படுகிறது. அன்பின் மற்ற அனைத்து வடிவங்களும் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அல்லது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தவை. அகாப்பே அன்பு நிபந்தனையற்ற அன்பு. கிறிஸ்தவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ள விரும்பும் அன்பின் வகை இதுவாகும். உண்மையான அகாப்பே அன்பு எப்போதும் ஒரு பரிசு.
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”
ரோமர் 5:8
தேவன் நம்மீது தம்முடைய அகாப்பே அன்பைக் காட்டியபோது, நாம் இன்னும் பாவிகளாக இருந்தோம். தேவனின் அன்பிற்கு ஈடாக நாம் எதுவும் கொடுக்க முடியாது.
“ஆவியின் கனியோ, அன்பு (Agape), சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”
கலாத்தியர் 5:22-23
ஆவியின் கனிகளின் பட்டியலில் அகாப்பே அன்பு முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அது தான் அனைத்திற்கும் அடித்தளம். அன்பு என்பது ஆவியின் கனி மட்டுமல்ல; மற்ற அனைத்து கனிகளையும் உற்பத்தி செய்யும் வேர் இதுவாகும். சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றின் முக்கிய ஆதாரம் அன்பு.
ஆவியின் கனிகள் பரிசுத்த ஆவியிலிருந்து வெளிப்படுகிறது. நாம் பரிசுத்த ஆவியானவருடன் நமது அனுதின ஐக்கியத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்போம். அவர் தேவனின் அன்பை நம் இருதயங்களில் ஊற்றுவார். (ரோமர் 5:5-ஐ வாசியுங்கள்)
ஜெபம்
ஒவ்வொரு ஜெபக் குறிப்பையும் குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் ஜெபம் செய்யப்பட வேண்டும்
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!
குடும்ப இரட்சிப்பு
தந்தையே, தயவுசெய்து எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னால் சென்று ஒவ்வொரு வளைந்த பாதையையும் நேராக்குங்கள் மற்றும் ஒவ்வொரு கடினமான வழியையும் சீராக்குங்கள்.
பொருளாதார முன்னேற்றம்
தந்தையே, சீஷர்கள் வெளியே சென்று, எல்லாமே தங்களுக்குக் கீழ்ப்படிந்தன என்பதற்கான சாட்சியங்களோடு திரும்பி வந்தபோது; அப்படியே வெற்றி மற்றும் ஜெயத்தின் சாட்சிகளோடு நானும் வர உதவும்.
KSM ஆலய வளர்ச்சி
பிதாவே, இயேசுவின் நாமத்தில், ஒவ்வொரு செவ்வாய்/வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான KSM நேரடி ஒளிபரப்புகளைஒளிப்பரப்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் உமது பக்கம் திருப்புங்கள். உம் அற்புதங்களை அவர்கள் அனுபவிக்கட்டும். உமது நாமம் உயர்த்தப்பட்டு மகிமைப்படும்படி அவர்களை சாட்சியளிக்க செய்யும்.
தேசம்
தந்தையே, இயேசுவின் நாமத்தாலும், இயேசுவின் இரத்தத்தாலும், துன்மார்க்கரின் முகாமில் உங்கள் பழிவாங்கலை விடுவித்து, ஒரு தேசமாக நாங்கள் இழந்த மகிமையை மீட்டெடும். உமது சமாதானம் எங்கள் நாட்டை ஆளட்டும். ஆமென்!
Most Read
● யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை● தேவனுக்காக மற்றும் தேவனுக்கும்
● அவரது வலிமையின் நோக்கம்
● சிறந்து விளங்குவது எப்படி
● நாள் 36 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● யூதா எழுந்து புறப்படக்கடவன்
● தேடி கண்டுபிடித்து ஒரு கதை
கருத்துகள்