english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. ஆவிக்குரிய பெருமையின் கனி
தினசரி மன்னா

ஆவிக்குரிய பெருமையின் கனி

Sunday, 29th of October 2023
0 0 759
Categories : Spiritual Pride
“அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.”
‭‭லூக்கா‬ ‭18‬:‭9‬-‭14‬ ‭

சில நேரங்களில், நாம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறோம் என்று நினைக்கிறோம். நாம் நமது தின தியானங்களை செய்கிறோம், தவறாமல் தேவாலயத்திற்குச் செல்கிறோம், மேலும் கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் சேவை செய்வதில் கூட பங்கேற்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் நம்மைத் தாங்கி நிற்கும் கிருபையின் பார்வையை இழந்து, ஆவிக்குரிய பெருமையின் வலையில் சறுக்குவது எளிது. பரிசேயர் மற்றும் ஆயக்காரனின் உவமை ஆவிக்குரிய பெருமைக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை அளிக்கிறது மற்றும் உண்மையான நீதிக்கான பாதையை நமக்கு காட்டுகிறது.

பரிசேயனின் ஆவிக்குரிய பெருமை

1. சுய நீதி:
பரிசேயர் தான் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதாக உணர்ந்தான். அவனது பிரார்த்தனை தேவனுடன்  பணிவான உரையாடலைக் காட்டிலும் சுய-வாழ்த்துத் தனிப்பாடலாக இருந்தது. ரோமர் 12:3 நம்மை எச்சரிக்கிறது, “அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.”

2. தீர்ப்பு மனப்பான்மை:
பரிசேயன் தனது குணத்தை தேவனின் பரிசுத்த குணத்தால் அல்ல, ஆனால் மற்ற மனிதர்களின் குணத்தால் மதிப்பிடுகிறான். எப்பொழுதெல்லாம் உங்கள் குணத்தை நீங்கள் தேவனின் பரிசுத்த குணத்தால் அல்ல, மற்ற மனிதர்களின் குணத்தை வைத்து மதிப்பிடுகிறீர்களோ, அப்போது நீங்கள் பெருமையுடன் நடக்கிறீர்கள்.

அவன் ஆயக்காரனை இகழ்ந்து, அவனுக்கு எதிராக தன்னை சாதகமாக ஒப்பிட்டான். மத்தேயு 7:1-2 எச்சரிக்கிறது, “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.”

3. கிரியைகளில் தவறான பாதுகாப்பு:
பரிசேயன் தனது செயல்களில் உறுதியைக் கண்டான்- வாரத்திற்கு இரண்டு முறை உபவாசம், தசமபாகம் கொடுப்பது போன்றவை. எபேசியர் 2:8-9 நமக்கு நினைவூட்டுகிறது, “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;”

4. மனந்திரும்புதல் இல்லாமை:
பரிசேயனின் ஜெபத்தில் ஒரு முக்கிய அங்கம் இல்லை: மனந்திரும்புதல் அவனுடைய பாவத்தை ஒப்புக்கொள்ளவோ ​​தேவனின் கிருபையின் தேவையோ இல்லை. 1 யோவான் 1:9 கூறுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

ஆவிக்குரிய பெருமையின் ஆபத்துகள்
A). நம் சொந்த தவறுகளுக்கு நம்மைக் குருடாக்குகிறது:
பரிசேயன் தனது சுயநீதியில் மிகவும் மூழ்கியிருந்தான், அவனுடைய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையை அவனால் பார்க்க முடியவில்லை.

B). சமூகத்தை பிளவுபடுத்துகிறது: ஆவிக்குரிய பெருமை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் தடைகளை அமைக்கிறது. யோவான் 17:21 இல் கிறிஸ்து ஜெபித்த ஒற்றுமையை அழிக்கிறது.

C) தேவனுடனான நமது உறவைத் தடுக்கிறது:
பரிசேயனின் ஜெபம் ஒருபோதும் தேவனை அடையவில்லை, ஏனென்றால் அது பெருமையுள்ளதாய் நிறைவுற்றது. யாக்கோபு 4:6 நமக்குச் சொல்கிறது, “அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.”

D). சாத்தானின் வஞ்சகத்திற்கு நம்மை ஆளாக்குகிறது:
நாம் உயரமாக நிற்கிறோம் என்று நினைக்கும் போது, ​​​​விழும் வாய்ப்பு அதிகம். 1 பேதுரு 5:8 “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.”
‭
ஜெபம்
தகப்பனே, எல்லா நன்மைகளும் உம்மிடமிருந்தே வருகின்றன என்பதை ஒப்புக்கொண்டு, நான் தாழ்மையுடன் உம் முன் வருகிறேன். ஒவ்வொரு கணமும் உமது கிருபையின் தேவையை உணர்ந்து பணிவுடன் நடக்க எனக்கு உதவும். ஆவிக்குரிய பெருமையின் வஞ்சகத்திலிருந்து என்னைக் காத்தருளும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Join our WhatsApp Channel


Most Read
● சிறிய சமரசங்கள்
● தேவன் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்
● ஆசீர்வாதத்தின் வல்லமை
● சர்வ வல்ல தேவனுடன் ஒரு சந்திப்பு
● தயவு முக்கியம்
● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 4
● ஐக்கியதால் அபிஷேகம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய