english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 1
தினசரி மன்னா

ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 1

Wednesday, 8th of May 2024
1 0 525
Categories : வாழ்க்கை பாடங்கள் (Life Lessons)
வேதம் மனிதனின் பாவத்தை மறைக்கவில்லை. தேவ மனிதர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவும், அதே இடர்களைத் தவிர்க்கவும் இதுவே ஆகும்.

ஹோவர்ட் ஹென்ட்ரிக்ஸ், தார்மீக தோல்வியை அனுபவித்த 237 கிறிஸ்தவ ஆண்களின் (பெரும்பாலும் கிறிஸ்தவ தலைவர்கள்) ஆய்வு செய்துள்ளார். அவர் ஒரு பொதுவான காரணியைக் கண்டறிந்தார்: 237 பேரில் ஒருவர் கூட மற்ற ஆண்களுடன் பொறுப்புக்கூறல் உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.

237 நிகழ்வுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதுதான் வெளிவந்தது.

விழுந்தவர்களில் 81 சதவீதம் பேர் தேவனுடன் ஜெபத்தில் நேரத்தை செலவிடவில்லை
வீழ்ந்தவர்களில் 57 சதவீதம் பேர் ஊழியத்தில் சோர்வை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் சரியான ஓய்வு எடுக்கவில்லை
வீழ்ச்சியடைந்த 45 சதவீதம் பேர் சவாலான சூழ்நிலைகளை கடந்து சென்றனர்
வீழ்ச்சியடைந்த 42 சதவீதம் பேர் மாற்றத்தைக் கையாள முடியவில்லை
குறிப்பிடத்தக்க வெற்றிக்குப் பிறகு 37 சதவீதம் சரிந்தது
வாழ்க்கை சுலபமாக சென்றதால் 30 சதவீதம் சரிந்தது

ஒருவர் இப்படி சொன்னார், "மற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவற்றையெல்லாம் நீங்களே உருவாக்குவதற்கு நீங்கள் நீண்ட காலம் வாழ முடியாது." "தவறுகளைச் செய்வதும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதும் நல்லது, ஆனால் அது மிகவும் வேதனையான கற்றல்" என்று நான் அதைச் சொல்லுவேன்.

தேவனை பின்பற்றவும் ஆராதனை செய்யவும் முயன்றாலும் சில சமயங்களில் வழியில் தடுமாறிய மனிதர்களின் குணாதிசய ஆய்வுகளை வேதம் வழங்குகிறது.

”இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.“
‭‭1 கொரிந்தியர்‬ ‭10‬:‭11‬-‭12‬ ‭

நினைவில் கொள்ளுங்கள்...
தேவனுடைய இ௫தயத்திற்கேற்ற மனிதன் விழுந்திருக்கிறான் (தாவீது)
பூமியில் ஞானியாக இருந்த  மனிதன் விழுந்திருக்கிறான் (சாலொமோன்)
பெலசாலியான மனிதன் விழுந்திருக்கிறான் (சிம்சோன்)
வீழ்வது சாத்தியமில்லை என்று நினைக்க நாம் யார்?

”இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.“
‭‭1 கொரிந்தியர்‬ ‭10‬:‭12‬ ‭

வரலாற்றில் இருந்து பாடம் கற்கத் தவறினால், அதையே திரும்பத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும் என்று ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வதன் நன்மைகளில் ஒன்று, சரியான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனமாக இல்லாவிட்டால், அதே தவறுகளை நாமும் செய்யலாம் என்பதை உணர்ந்துகொள்வது.

இன்று, தாவீதின் வாழ்க்கையைப் பார்ப்போம், அவருடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்.

”மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.“
‭‭2 சாமுவேல்‬ ‭11‬:‭1‬ ‭

தாவீது யுத்தத்தின் இடத்தில் இருப்பதற்கான ஒரு காலம் என்று வேதம் குறிப்பிடுகிறது. இருப்பினும், தாவீது வசதியாக இருக்க சாக்கு சொல்லி விட்டு விலகி நின்றார். தாவீது தெளிவாக தவறான இடத்தில் இருந்தார்.

நம்மைப் பற்றி எத்தனை முறை சொல்ல முடியும்? ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், நாம் தேவனின் வீட்டில் இருக்க வேண்டும், ஆனால் செல்லாமல் இருப்பதற்கு  நமக்கு சரியான மற்றும் உறுதியான காரணங்கள் உள்ளன (ஒருவேளை தாவீதுக்கும் இப்படிஇருந்திருக்கலாம்). ஆனால், தாவீதின் வீழ்ச்சிக்கு இதுதான் முதல் படி என்று நீங்கள் பார்க்கிறீர்கள்.

சரியான இடத்தில் இருப்பது நம்மை அவருடைய பாதுகாப்பிலும் அனுகூலத்திலும் வைத்திருக்கிறது. தவறான இடத்தில் இருப்பது பெரும் துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் காரணமாக இருக்கலாம்.
ஜெபம்
தகப்பனே, நீர் விரும்பும் இடத்தில் நான் இருப்பதற்காக எப்போதும் என் படிகளை வழிநடத்துum. இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● அலங்கார வாசல்
● ஆவியின் பெயர்கள் மற்றும் தலைப்புகள்: பரிசுத்த ஆவியானவர்
● துளிர்விட்ட கோல்
● கிறிஸ்துவின் தூதர்
● நாள் 23: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● பணம் குணத்தை பெருக்கும்
● திறமைக்கு மேல் குணம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய