english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. விசுவாசத்தில் அல்லது பயத்தில்
தினசரி மன்னா

விசுவாசத்தில் அல்லது பயத்தில்

Saturday, 25th of May 2024
0 0 648
Categories : விசுவாசம் ( Faith)
”அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். 

அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.“
‭‭மத்தேயு‬ ‭8‬:‭25‬-‭26‬

எனக்கு ஒரு சிறிய சகோதரியின் மகன் இருந்தான் (இப்போது அவன் வளர்ந்துவிட்டான்). அவன் சிறு குழந்தையாக இருந்தபோது, ​​நான் அவனை மெதுவாக காற்றில் வீசுவேன். முதல் தடவையாக, பயத்தில் அதிகமாக அழ ஆரம்பித்தான். இரண்டாவது சுற்றில், அவன் சிரிக்க ஆரம்பித்தான், அதன் பிறகு, அவன் பெருங்களிப்புடன் சிரிப்பான். மிகவும் ரசித்தான். நான் என் அறையில் ஏதாவது வேலையில் மூழ்கியிருக்கும் போது, ​​அவன் என்னைத் தேடி வந்து, அப்பட தூக்கி எறிந்து அவனுடன் விளையாடுமாறு தனது மழலை மொழியில் சொல்லுவான்.

என் சிறிய சகோதரியின் மகன் பயத்தை அனுமதிப்பதை நிறுத்திவிட்டு என்னை நம்பத் தொடங்கியபோது நான் உண்மையில் யார் என்பதையும் என் நோக்கங்களையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தான். நம் வாழ்விலும் அப்படித்தான் நடக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம், தேவன் நம் தகப்பன் என்பதை புரிந்துகொள்கிறோம், ஆனால் மனிதர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்ற இந்த ‘சுருக்க நம்பிக்கை’ நம்மிடம் உள்ளது. இருப்பினும், நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, ​​பயமும் கலக்கமும் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கிறோம். நாம் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவன் செயல்பட முயற்சிக்கும் அழகைப் பார்ப்பதிலிருந்து இது நம்மைத் தடுக்கிறது.

பயத்திற்கும் சந்தேகத்திற்கும் இடையே எப்போதும் ஒரு தொடர்பு உள்ளது, மேலும் அவை இரண்டும் ஒன்றையொன்று வழிநடத்துகின்றன. சந்தேகம் கொண்ட மனிதன் பயப்படுவான், பயமுள்ள மனிதன் சந்தேகப்படுவான்!

வேதம் சொல்கிறது, “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.“ (ரோமர் 8:15). பார்த்தீர்களா? சோதனைக் காலங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் வெளிப்படுத்த தேவன் எந்த வகையிலும் நம்மை வடிவமைக்கவில்லை, மாறாக, நாம் இப்போது தேவனின் குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ள அவர் மீதுள்ள விசுவாசம் நமக்கு உதவும் வகையில் அவர் தமது ஆவியை நம்மில் வைக்கிறார்.

இது ஒரு டோமினோ விளைவாக இருக்க வேண்டும், அது அவருடைய வல்லமை மற்றும் திறன்களை முழுமையாக சார்ந்து அழுவதற்கு வழிவகுக்கும்: அப்பா பிதாவே. விசுவாசமும் பயமும் ஒரே சமயத்தில் ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் ஒன்றாக இருக்கக்கூடாது. நாம் முழுச் சார்புடன் தேவனை நம்ப வேண்டும், வாழ்க்கை நம்மைக் கொண்டு வந்துள்ள எல்லாவற்றிலும் நமக்கு உதவ அவர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். விசுவாசத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்: தேவன் நம்மை கொண்டுவாதார் என்றால், இனியும் நம்மை கொண்டு செல்வார்.

இறுதியாக, கிறிஸ்து மாற்கு 4:40 இல் கூறினார், “அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.“

‭‭ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் விசுவாசத்தை விரட்டும் ஒரே விஷயம் பயம். இன்று தேவனை முழுமையாக நம்பி சரணாகதியுடன் பின்பற்ற முடிவு செய்யுங்கள், தேவனின் வார்த்தைகள் மற்றும் அவருடைய வாக்குறுதிகள் மீது விசுவாசன் வைப்பதை பயம் தடுக்க அனுமதிக்காதீர்கள்.
ஜெபம்
பிதாவாகிய தேவனே, நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உம்மை நம்புவதற்கு எனக்கு உதவும். பிசாசு எனக்கு பயப்படுவதற்கான காரணங்களைக் கூறும்போதெல்லாம், நான் உன்னுடையவன் என்பதையும், என் விசுவாசம் உங்களில் பலமாக இருக்க வேண்டும் என்பதையும் எனக்கு நினைவூட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● காணாமற்போன ஆட்டைக் கண்டுப்பிடித்த மகிழ்ச்சி
● அவருடைய சித்தத்தை செய்வதன் முக்கியத்துவம்
● சொப்பனத்தில் தேவதூதர்களின் தோற்றம்
● தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்
● ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல்-I
● பூமியின் ராஜாக்களுக்கு மேல் ஆளுகை
● என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய