english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. உங்கள் விதியை மாற்றவும்
தினசரி மன்னா

உங்கள் விதியை மாற்றவும்

Saturday, 7th of September 2024
0 0 375
Categories : கிறிஸ்துவில் நமது அடையாளம்(our identity in Christ)
“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”
‭‭எபேசியர்‬ ‭2‬:‭10‬ ‭

தேவன் முன்னறிவித்த, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, நேரத்திற்கு முன்பே ஆயத்தம்ப்பட்ட சொற்றொடர்களை கவனமாகக் கவனியுங்கள்.

சகேயு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முகமுகமாய் பார்க்க விரும்பினார், எனவே அவர் முன்னால் ஓடி ஒரு அத்திமரத்தில் ஏறினார், ஏனென்றால் கர்த்தர் இயேசு அவ்வழியாகப் போகிறார் என்பதை அறிந்திருந்தான். இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ​​சகேயுவை பார்த்து, “சக்கேயுவே, சீக்கிரமாக இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார்”. (லூக்கா 19:4-5)

ஒரு நாள் சக்கேயு தன்னைப் பார்க்க விரும்புவான் என்று கர்த்தர் அறிந்திருந்தார், அதனால் அவர் அத்தி மரத்தை முன்கூட்டியே ஆயத்தம் செய்தார் - அநேகமாக சக்கேயு பிறப்பதற்கு முன்பே ஆயத்தம் செய்திருப்பார்.

எதிர்காலத்தை விவரிக்க இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

"விதி" என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும் முன்னறிவிக்கப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறது; இது உங்கள் வாழ்க்கையில் உள்ளதைக் குறிக்கிறது. அதை மாற்ற வழியில்லை. இதைத்தான் பல உலகத் தத்துவங்கள் தம்மைப் பின்பற்றுபவர்களுக்குப் போதிக்கின்றன.

"இலக்கு" என்பது உங்கள் சிறந்த வாழ்க்கைக்கான தேவனின் திட்டம். முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலும், நீங்கள் உங்கள் இலக்கை தெரிந்துகொள்ளலாம் அல்லது அதிலிருந்து விலகலாம்.

வேதம் விதியை கற்பிக்கவில்லை, யோசித்துப் பாருங்கள். நம் வாழ்வின் எந்த நிகழ்வுகளிலும் நாம் செல்வாக்கு செலுத்தவில்லை என்றால், எவ்வாறு செழித்து ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வது என்பதற்கான வழிமுறைகளை தேவன் ஏன் நமக்கு வழங்குவார்? நமது வாழ்க்கை முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தால், அந்த அறிவுரைகள் தேவையற்றதாக இருக்கும்.

வேதம் விதியை கற்பித்தால் ஜெபம் பயனற்ற பயிற்சியாக இருக்கும். இருப்பினும், விசுவாசத்தின் ஜெபத்தால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு மலையையும் நகர்த்த முடியும் என்று கர்த்தராகிய இயேசு கற்பித்தார் - ஒருவேளை நாம் விரும்பும் வழியில் அல்லது நாம் விரும்பும் இடத்திற்கு நகர்த்த முடியாது, ஆனால் அது நகர்த்தப்படும்! மலையைக் கடக்கவோ அல்லது அதைச் சுற்றி வரவோ தேவன் நமக்கு உதவுவார்!

“யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.”
‭‭1 நாளாகமம்‬ ‭4‬:‭9‬-‭10‬ 

யாபேஸ் ஒரு பரிதாபமான நிலையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவன் தாய்க்கு சோகமாக இருந்தான். அவர் ஒரு களங்கத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது எதிர்காலம் பிரகாசமாகத் தெரியவில்லை. அவர் ஒரு பரிதாபகரமான  வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த பரிதாபமான நிலையில் தனது வாழ்நாள் முழுவதையும் கழிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தார். அவர் சிறந்த மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை விரும்பினார். அவர் தனது இலக்கை மாற்ற விரும்பினார், அதனால் அவர் ஜெபம் செய்தார், தேவன் அவரது இலக்கை மாற்றினார்.

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்க்கதரிசன இலக்கை ஆயத்தம் செய்துள்ளார் (எபேசியர் 2:10), நாம் அவருடைய பாதையில் சென்றால், நாம் சிறந்த வாழ்க்கையை வாழ்வோம். இருப்பினும், தேவனால் நிர்ணயிக்கப்பட்ட அந்த பாதைகளிலிருந்து நாம் விலகிச் சென்றால், நாம் உருவாக்கிய எந்தவொரு குழப்பத்திலிருந்தும் அவர் நம்மை இன்னும் வெளியே அழைத்துச் செல்ல முடியும் - ஒரே விஷயம் என்னவென்றால், நம் வாழ்க்கைக்கான அவருடைய திட்டங்களை நாம் தாமதப்படுத்துவோம்.

நாம் நம்மை அறிவதை விட கர்த்தர் நம்மை நன்கு அறிவார்; அவருடைய திட்டங்களுடன் ஏன் ஒட்டிக்கொள்ளக்கூடாது? உங்கள் செவிகளை திறந்து வைத்திருங்கள், அவர் உங்களை விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கும் மகிமையிலிருந்து மகிமைக்கும் வழிநடத்துவார்.


எனது முன்னேற்றம், வெற்றி மற்றும் சாட்சியங்களை மெதுவாக்க எதிரி பயன்படுத்தும் எந்த பிரச்சனையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்பட வேண்டும். என் வாழ்க்கையையும் இலக்கையும் தேக்குவதற்கு எதிரி பயன்படுத்தும் எந்த பிரச்சனையும் இயேசுவின் நாமத்தில் பிடுங்கப்பட வேண்டும்.
ஜெபம்
Any problem that the enemy is using to slow down my progress, success and testimonies, be cut off in the name of Jesus. Any problem that the enemy is using to stagnate my life and destiny be uprooted in the name of Jesus.

Join our WhatsApp Channel


Most Read
● மன்னிப்பின் செங்குத்து மற்றும் கிடைமட்ட
● நன்றி செலுத்தும் ஸ்தோத்திரபலி
● இயேசு உண்மையில் பட்டயத்தை கொண்டுவர வந்தாரா?
● உங்கள் வழிகாட்டி யார் - II
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● ஜெபம்யின்மையின் பாவம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய