english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. இயேசு உண்மையில் பட்டயத்தை கொண்டுவர வந்தாரா?
தினசரி மன்னா

இயேசு உண்மையில் பட்டயத்தை கொண்டுவர வந்தாரா?

Wednesday, 18th of September 2024
0 0 308
Categories : இறுதி நேரம் (End Time)
“பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.”
‭‭மத்தேயு‬ ‭10‬:‭34‬-‭36‬ ‭

மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த பகுதியில், இயேசு தீர்க்கதரிசி மீகாவை மேற்கோள் காட்டுகிறார் (7:6). மேலும், இயேசு குறிப்பிட்ட பட்டயம் சொல்லர்த்தமான ஒன்றல்ல மாறாக அடையாளப்பூர்வமானது.

கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைக் காக்க பேதுரு பட்டயத்தை எடுத்து, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதைத் துண்டித்தபோது, ​​இயேசு அவனைக் கடிந்து, அவனுடைய பட்டயத்தை எறிந்துவிடும்படி சொன்னார். “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.”

‭‭(மத்தேயு 26:52). பின்னர் அவர் முழு உலகத்தின் பாவங்களுக்காக தனது ஜீவனை ஆர்வமாய் கொடுத்து மரிக்கிறார்.

"அப்படியானால் ஏன், "சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்" என்று இயேசு சொன்னார்" என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று 'சமாதான பிரபு' (ஏசாயா 9:6)

யோவான் 14:27 ல் இயேசு, “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”

மேலே உள்ள வசனங்களும், பைபிளில் உள்ள இவை போன்ற பலவும் இயேசு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே சமாதானத்தை - சமாதானத்தை ஏற்படுத்த வந்தார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

இயேசு தெளிவாகக் குறிப்பிட்டார், "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான். (யோவான் 14:6) தேவனையும் இயேசுவின் மூலமாக இரட்சிப்பையும் நிராகரிப்பவர்கள் தங்களை நிரந்தரமாகக் தேவனோடு யுத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால், மனந்திரும்பி அவரிடம் வருபவர்கள் தேவனுடன் சமாதானமாக இருப்பார்கள்.

இந்த கடைசி காலங்களில், நன்மைக்கும் தீமைக்கும் இடையே யுத்தம் இருக்கும், கிறிஸ்துவுக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும், கிறிஸ்துவை ஒரே இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். பல சமயங்களில் இந்த குழுக்கள் ஒரு குடும்பத்தில் இருக்கிறதை பார்க்க முடியும், அதில் சிலர் விசுவாசிகளாகவும், மற்றவர்கள் அவிசுவாசிகளாக இருக்கீறார்கள்.

மத்தேயு 10:34-36 இல், இயேசு பூமியில் சமாதானத்தை கொண்டுவருவதற்காக அல்ல, ஆனால் ஒரு பட்டயத்தை, பிரிக்கும் ஆயுதம் என்று கூறினார். பூமிக்கு அவரது வருகையின் விளைவாக, சில பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக அமைக்கப்படுவார்கள், மேலும் ஒரு மனிதனின் சத்துருக்கள் அவனது சொந்த வீட்டில் உள்ளவர்களாய் இருக்கலாம் என்று கூறினார்.

ஏனென்றால், கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பும் பலர் பெரும்பாலும் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களால் வெறுக்கப்படுகிறார்கள். இது தேவனை உண்மையாக பின்பற்றுவதற்கான விளைக்கிரயம். நம் குடும்பத்தின் மீதுள்ள அன்பு கூட அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்பை விட அதிகமாக இருக்கக் கூடாது என்று ஆண்டவர் இயேசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். (மத்தேயு 10:37ஐ வாசியுங்கள்)

வரலாறு முழுவதும் வன்முறையை நியாயப்படுத்த இந்தப் பத்தியில் முறையிட்டவர்கள், தங்கள் சொந்த வன்முறை அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு அதைத் திரித்துக் கொண்டிருந்தனர்.
ஜெபம்
பிதாவே, உமது வார்த்தை எனக்குக் கொண்டு வரும் தெளிவு, ஊக்கம் மற்றும் நம்பிக்கைக்கு நன்றி. பிதாவே, நான் ஒவ்வொரு நாளும் உமது வார்த்தையைப் படிக்கும்போது, உம்முடன் என் உறவை ஆழப்படுத்த எனக்கு உதவும். பிதாவே, உம்மையும் உமது சித்தத்தையும் உமது வார்த்தையின் மூலம் எனக்கு வெளிப்படுத்தும். எனது சொந்த புரிதலை நம்பாமல் இருக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● வீழ்ச்சியிலிருந்து மீட்புக்கு ஒரு பயணம்
● தேவனுடைய வார்த்தை உங்களை புண்படுத்த முடியுமா?
● பொருளாதார சிக்கலில் இருந்து வெளிவருவது எப்படி?
● மறைந்திருக்கும் காரியங்களை புரிந்துகொள்வது
● தேவன் உங்கள் சரீரத்தைப் பற்றி கவலைப்படுகிறாரா?
● அசுத்த வடிவங்களை உடைத்தல்
● இன்றைய காலத்தில் இதைச் செய்யுங்கள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய