english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. மூன்று மண்டலங்கள்
தினசரி மன்னா

மூன்று மண்டலங்கள்

Saturday, 12th of October 2024
0 0 419
Categories : இயேசுவின் பெயர்(Name of Jesus) நரகம் (Hell)
பின்வரும் வசனங்களை மிகவும் கவனமாகப் வாசியுங்கள்:

“புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.”
‭‭வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭5‬:‭2‬-‭3‬ ‭

“இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,”
‭‭பிலிப்பியர்‬ ‭2‬:‭10‬ ‭

மேற்கண்ட வேதம் வாசம் நமக்கு மூன்று மண்டலங்களை வெளிப்படுத்துகிறது:
  1. பரலோகம் 
  2. பூமி
  3. பூமியின் கீழ் 
பரலோகத்தில் உள்ள காரியங்கள் - தேவனின் சிம்மாசனம் அமைந்துள்ள ஆவிக்குரிய மண்டலத்தைக் குறிக்கிறது, இது "மூன்றாவது வானம்" என்றும் அழைக்கப்படுகிறது (2 கொரிந்தியர் 12:2). இது தேவன், தேவதூதர்கள் மற்றும் பரிசுத்தவான்கள் இருக்குமிடம்.

பூமியில் உள்ள காரியங்கள் - மனிதர்கள், விலங்குகள் போன்றவை அடங்கும்.

பூமியின் கீழ் உள்ள விஷயங்கள் (பாதாள உலகம் அல்லது நரகம்) - பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டட்ருக்கும் இடம்.
(2 பேதுரு 2:4-ஐ வாசியுங்கள்)

புதிய ஏற்பாட்டின் படி, இங்கு பிரிந்த ஆண் மற்றும் பெண்களின் அநீதியான ஆத்த்துமாக்கள் மற்றும் ஆவிகள் உள்ளன.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, தேவன் (பிதா) அவரைத் தமது வலது பாரிசத்தில் கனத்திற்குரிய நிலைக்கு உயர்த்தி, எல்லாப் நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குக் தந்தருளினார் என்று வேதம் கூறுகிறது (எபேசியர் 1:20; பிலிப்பியர் 2:9-11 வாசியுங்கள்)

ஆதலால் தேவன் (பிதா) எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் (பரலோகம்) பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய (நரகம்) முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

தேவன் கர்த்தராகிய இயேசுவை பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த நிலையில், அவருடைய சொந்த வலது பாரிசத்தில் அமரவைத்தார், மேலும் அவரை எல்லாவற்றின் மீதும் தலைவராக்கினார் (எபேசியர் 1:19-22 வாசியுங்கள்).

அதாவது இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது மிகவும் வல்லமைவாய்ந்தது. நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, ​​மூன்று பகுதிகளிலும் அவருடைய அதிகாரத்துடன் ஜெபிக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் வேறு பெயர் தேவையில்லை - இயேசுவின் பெயரைத் தவிர.
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில், நான் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் எங்கு சென்றாலும் தேவனின் தயவு என்னை ஒரு கேடயமாக சூழ்ந்துள்ளது. என் வாழ்க்கை இனி ஒருபோதும் இருந்தவன்னமாய் இருப்பதில்லை.


Join our WhatsApp Channel


Most Read
● அது உங்களுக்கு சாதகமாக திரும்புகிறது
● உங்கள் இணைப்பை இழக்காதீர்கள்
● பேசும் வார்த்தையின் வல்லமை
● நாள் 21: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● தேவன் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
● அசாதாரண ஆவிகள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய