english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. தெய்வீக ஒழுக்கம் - 2
தினசரி மன்னா

தெய்வீக ஒழுக்கம் - 2

Sunday, 3rd of November 2024
0 0 212
Categories : தெய்வீக ஒழுக்கம் (Divine Order)
“உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.” ‭‭நீதிமொழிகள்‬ ‭27‬:‭23‬ 

மற்றும் நீதிமொழிகள் 29:18 சொல்கிறது, “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭29‬:‭18‬ ‭

தேவன் தனது இயற்கைக்கு அப்பாற்பட்ட பகுதியைச் செய்வதற்கு முன், நாம் செயக்கூடிய நமது பகுதியைச் செய்ய வேண்டும்.

லூக்கா 9:10-17 ஐ நீங்கள் வாசித்தால், கர்த்தராகிய இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன், வசனங்கள் 14 மற்றும் 15 நமக்குச் சொல்கிறது, “ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.”

‭‭ “அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.”

‭‭நீங்கள் பாருங்கள், கர்த்தர் சொன்னதை சீஷர்கள் செய்ய வேண்டியிருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அனைத்தும் ஒழுங்கான முறையில் இருந்தன. பெறுக்கம் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை.

தயவு செய்து இதை நினைவில் வையுங்கள்: காரியங்கள் ஒழுங்காக நடக்கும் இடத்தில் தேவன் எப்போதும் பெருக்கத்தை கொண்டு வருவார். இன்று, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நான் என் காரியங்களைச் செய்யும் விதத்தில் தெய்வீக ஒழுங்கு இருக்கிறதா?

“அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?”
‭‭யோவேல்‬ ‭2‬:‭7‬-‭11‬ ‭

11ஆம் வசனத்தில் உள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள், “கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்.” இதிலிருந்து, தேவனின் படையைப் பற்றிய விளக்கம் என்பது தெளிவாகிறது.

இப்போது நீங்கள் வசனங்கள் 7 மற்றும் 8 இல் உள்ள சொற்றொடர்களை கவனமாக கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: "அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்." தேவனின் படையில் தெய்வீக ஒழுங்கு இருப்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. மேலும் தேவனின் படையில் இத்தகைய தெய்வீக ஒழுங்கு இருப்பதால், அது அவர்களின் செயல்திறனை அதிகரிக்கிறது. இந்த தெய்வீக ஒழுங்கின் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அதை நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக: உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக உள்ளதா? உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களின் பதிவை நீங்கள் பராமரிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் தினமும் தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா? அதுவே காரியங்களைச் செய்யும் தெய்வீக ஒழுங்கு. முதல் விஷயங்களை முதலில் வைக்கவும்!

#1. தெய்வீக ஒழுங்கு உங்கள் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரிப்பைக் கொண்டுவரும்

#2. தெய்வீக ஒழுங்கு உங்கள் வாழ்க்கையில் தெய்வீக சமாதானத்தையும் கொண்டு வரும்.

“உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.”
‭‭சங்கீதம்‬ ‭119‬:‭165‬
ஜெபம்
பிதாவே, உமது மகிமை மேலும் என் வாழ்விலும் வெளிப்படும்படி என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் வரிசைப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்


Join our WhatsApp Channel


Most Read
● எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்
● கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றுவது
● ஆவியிலே அனலாயிருங்கள்
● தேவனின் வல்லமைமிக்க கரத்தின் பிடியில்
● வேதத்தை திறம்பட வாசிப்பது எப்படி
● தேவன் எப்படி வழங்குகிறார் #3
● நாள் 03 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய