english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. நாள் 01 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
தினசரி மன்னா

நாள் 01 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்

Friday, 22nd of November 2024
0 0 261
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)
தேவனோடு ஆழமாக

“தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.”(சங்கீதம்‬ ‭63‬:‭1‬-‭3‬)

நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறீர்களா? அவர் "அடிக்கடி தனித்துப்போய்... ஜெபித்தார்" (லூக்கா 5:16). அவர் "ஜெபிக்க தனியாக ஒரு மலையின் மீது ஏறினார்" (மத்தேயு 14:23). எத்தனான யாக்கோபு எப்படி இஸ்ரவேல் ஆக மாறினார்? (ஆதியாகமம் 32:28-ஐ வாசியுங்கள்). அவர் "தனியாக விடப்பட்டார், ஒரு மனிதன் (கர்த்தருடைய தூதன்) அவனுடன் விடியும் வரை போராடினான்" (ஆதியாகமம் 32:24) என்று வேதம் கூறுகிறது.

கணவனும் மனைவியும் ஒருபோதும் தனியாக இல்லாவிட்டால் திருமணம் எவ்வாறு மோசமடைகிறதோ, அதுபோலவே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுடன் தனியாகச் செலவிடும் நேரத்தைச் சேர்க்காவிட்டால் கிறிஸ்துவுடனான நமது உறவும் தோல்வியடையும். கவனச்சிதறல் நிறைந்த இந்த யுகத்தில், தேவனுடன் தனியாக இருக்கும் நேரம் முதன்மையாக இருக்க வேண்டும்.

தேவனுடன் தனியாக இருப்பது எப்படி

1. ஜெபத்திற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்

“தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.”(தானியேல்‬ ‭6‬:‭10‬)

இந்த உபவாச காலத்தில், நீங்கள் ஜெபத்திலும் ஐக்கியத்திலும் தேவனுடன் தரமான நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எரேமியா எழுதினார், “உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்;” எரேமியா‬ ‭15‬:‭17‬ ‭

2. துதியும் ஆராதனையும்

துதியோடும் புகழ்ச்சியோடும் தேவனின் பிரசன்னத்திற்குள் பிரவேசிக்க நாம் அழைக்க படுகிறோம். 

“அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.”
‭‭(சங்கீதம் 100:4)

3. ஆவிக்குரிய ஜெபம் 

ஜெபத்தில் இரண்டு வகைகள் உள்ளன:
  • மனதளவில் ஜெபம் மற்றும்
  • ஆவிக்குரிய ஜெபம் 
நீங்கள் உங்கள் புரிதலுடனும் மனதுடனும் ஜெபிக்கும்போது மனதளவில் ஜெபிக்கும் ஜெபம் ஆகும், அதே நேரத்தில் நீங்கள் அந்நிய பாஷைகளில் ஜெபிக்கும்போது ஆவிக்குரிய ஜெபம் ஆகும்.

“என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.”‭‭(1 கொரிந்தியர்‬ ‭14‬:‭14‬-‭15‬ ‭)

4. வேதாகமத்தைப் படித்துத் தியானியுங்கள்

நீங்கள் வார்த்தையை வாசிக்கும்போது, ​​நீங்கள் தேவனோடு நேரடியான ஐக்கியத்தில் இருக்கிறீர்கள். வார்த்தையே தேவன், தேவனின் வார்த்தையைப் படிக்கும் அனுபவம் தேவனுடன் நேரில் பேசுவதைப் போன்றது.

தேவனுடன் தனியாக இருப்பதன் நன்மைகள்
  • ரகசியங்கள் வெளிப்படும்
தேவன் எல்லாம் அறிந்தவர், எல்லாம் ஞானம்முடையவர். நீங்கள் அவருடன் தனியாக நேரத்தை செலவுசெய்து அறியாமையில் இருக்க முடியாது. “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.”‭‭(தானியேல் 2:22)
  • நீங்கள் அதிகாரம் பெறுவீர்கள்
நீங்கள் தேவனுடன் தனியாக நேரத்தை செலவிடும்போது, ​​நீங்கள் சரிர வலிமையைப் புதுப்பித்துக்கொள்வது மட்டுமல்லாமல், ஆவிக்குரிய எரிபொருள் மற்றும் புத்துணர்ச்சியையும் அனுபவிக்கிறீர்கள். ஏசாயா 40:31 கூறுகிறது, “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”

‭‭சங்கீதம் 68:35-ன் படி, “இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்;”
  • ‭‭தேவனுடன் தனியாக நேரத்தை செலவிடுங்கள், அவர் உங்களுக்கு வல்லமையையும் பலத்தையும் தருவார்.
நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவீர்கள்
“துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;”
‭‭(எபேசியர் 5:18) நீங்கள் தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்டால், உங்கள் வாழ்க்கை முழுவதும் பரிசுத்த ஆவியால் நடத்தப்படுவீர்கள்.
  • நீங்கள் கடவுளோடு ஐக்கியம் கொள்ளும் காலத்தில் செய்யப்படும் அபிஷேகம் பிசாசின் நுகத்தை உடைக்கும்
“அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்.”(‭‭ஏசாயா‬ ‭10‬:‭27‬ )
  • நீங்கள் கடவுளின் சாயலாக மாற்றப்படுவீர்கள்
“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”(2 கொரிந்தியர் 3:18)

உங்கள் முழு இருதயத்தையும், தரமான நேரத்தையும் தேவனுக்கு கொடுங்கள். தேவனுடன் ஆழமாகச் செல்வதற்கான இரண்டு முக்கிய நிபந்தனைகள் இவை.

Bible Reading Plan : Matthew 1-7 
ஜெபம்
1. ஆண்டவரே, பாவம் என்னை உம்மிடமிருந்து விலக்கிய எல்லா வழிகளிலும் எனக்கு இரங்கும்.(சங்கீதம் 51:1-2, 1 யோவான் 1:9)

2. இயேசுவின் நாமத்தில் தேவனுடனான எனது உறவைப் பாதிக்கும் பாவத்தின் ஒவ்வொரு பாரத்தையும் நான் கீழே தள்ளுகிறேன்.(எபிரேயர் 12:1, ரோமர் 6:12-14)

3. இயேசுவின் நாமத்தில் என் மனதில் யுத்தமிடும் பிழைகள், பொய்கள், சந்தேகங்கள் மற்றும் பயங்களை நான் கீழே தள்ளுகிறேன். (2 கொரிந்தியர் 10:4-5, ஏசாயா 41:10)

4. பிதாவே! இயேசுவின் நாமத்தில் உமது வேதத்திலுள்ள உள்ள அதிசயங்களை நான் காண என் கண்களைத் திறந்தருளும். (சங்கீதம் 119:18, எபேசியர் 1:17-18)

5. இயேசுவின் நாமத்தினாலே என் பரலோகத் தகப்பனுடன் மீண்டும் ஐக்கியப்படுவதற்கு நான் கிருபையைப் பெறுகிறேன்.(2 கொரிந்தியர் 13:14, ஜேம்ஸ் 4:8)

6. ஓ, ஆண்டவரே! என் ஆவி மனிதனுக்கு பெலன் தாரும். (எபேசியர் 3:16, ஏசாயா 40:29-31)

7. என்னுடைய ஆவிக்குரிய பலத்தை வடிகட்டுகிற அனைத்தும் இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும்.(ஏசாயா 40:29, மத்தேயு 11:28-30)

8. தேவனுடைய காரியங்களிலிருந்து என்னை விலக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செல்வத்தின் ஒவ்வொரு வஞ்சகத்தையும் நான் கீழே தள்ளுகிறேன்.(மத்தேயு 6:24, 1 தீமோத்தேயு 6:9-10)

9. பிதாவே, இயேசுவின் நாமத்தில் உமது அன்பிலும் உமது ஞானத்திலும் என்னை வளரச் செய்யும்.(பிலிப்பியர் 1:9, கொலோசெயர் 1:10)

10. ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் உம்முடனும் எல்லா மனிதர்களுடனும் ஞானத்திலும், செல்வாக்கிலும் தயவிளும் என்னை வளரச் செய்யும். (லூக்கா 2:52, யாக்கோபு 1:5)




Join our WhatsApp Channel


Most Read
● இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?
● தேவனிடம் விசாரியுங்கள்
● உங்கள் வழிகாட்டி யார் - II
● தேவனுடைய ஏழு ஆவிகள்
● அண்ணாளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
● இழந்த ரகசியம்
● மூடப்படாத சாத்தியம்: பயன்படுத்தப்படாத ஈவுகளின் ஆபத்து
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய