english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
தினசரி மன்னா

நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்

Monday, 9th of December 2024
0 0 591
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)
சாபங்களை உடைத்தல்

“யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை; இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை.
(எண்ணாகமம் 23:23)

சாபங்கள் சக்திவாய்ந்தவை; விதிகளை கட்டுப்படுத்த எதிரி அவற்றைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான விசுவாசிகள் அறிந்திராத சாபங்களைச் சுற்றி சில மர்மங்கள் உள்ளன.

பல விசுவாசிகளுக்கு தேவனுடைய வார்த்தையை எவ்வாறு சரியாக விளக்குவது என்று தெரியவில்லை. கலாத்தியர் 3:13 கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார் என்று கூறுகிறது. கிறிஸ்து எந்த வகையான சாபத்திலிருந்து நம்மை மீட்டார்? 
இது "மோசேயின் சட்டத்துடன்" இணைக்கப்பட்ட சாபம்.


மூன்று முக்கிய வகையான சட்டங்களை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவை:


1. பத்துக் கட்டளைகள். 
இந்த சட்டங்கள் "நியாயப்பிரமாணம்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.

2. முதல் ஐந்து புத்தகங்களான பஞ்சாகமம் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம்): இவை "நியாயப்பிரமாணம்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.

3. தேவனின் வார்த்தை. தேவனின் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் "சட்டம்" என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் தேவன் ஒரு ராஜா, மற்றும் ஒரு ராஜாவின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லப்பட்ட சட்டம்.

மோசேயின் சட்டத்தில் உள்ள நியாயப்பிரமானத்திலிருந்து கிறிஸ்து நம்மை மீட்டுக்கொண்டார். நீதிக்காக உருவாக்கப்பட்ட வேறு எந்த சடங்கு சட்டத்திலிருந்தும் அவர் நம்மை மீட்டார்.


ஒரு கிறிஸ்தவனை சபிக்க முடியுமா?

உண்மை என்னவென்றால், தேவனுடன் வலுவான உறவில் இருக்கும் ஒரு கிறிஸ்தவரை சபிக்க முடியாது. ஒரு கிறிஸ்தவருக்கு எதிராக சாபங்கள் செயல்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன, ஆனால் கிறிஸ்தவர் "நேரடியாக சபிக்கப்பட்டவர்" என்று அர்த்தமல்ல.

ஒரு கிறிஸ்தவருக்கு எதிராக சாபம் வேலை செய்யக்கூடிய நிபந்தனைகள் யாவை?

ஒரு கிறிஸ்தவர் தேவனின் ஐக்கியத்திற்கு வெளியே நடந்தால் சாபங்கள் அவருக்கு எதிராக செயல்படும்.

ஒரு கிறிஸ்தவர் பாவத்தின் வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் வேலியை உடைத்திருந்தால் அவருக்கு எதிராக சாபங்கள் செயல்படலாம். நாம் இன்னும் 100 சதவிகிதம் பூரணமாகாததால், எப்போதாவது ஒருமுறை பாவம் செய்யலாம், ஆனால் ஒரு நபர் நிரந்தரமாக பாவம் செய்யும் போது, அத்தகைய நபருக்கு எதிராக சாபங்கள் செயல்படக்கூடும், ஏனென்றால் அவர் பிசாசுக்கு இடம் கொடுத்தார். 
(எபேசியர் 4:27)

ஒரு கிறிஸ்தவர் தனது உடன்படிக்கை பாதுகாப்பு, நிலை மற்றும் உரிமை பற்றி அறியாதவராக இருந்தால், ஒரு கிறிஸ்தவருக்கு எதிராக ஒரு சாபம் செயல்பட முடியும்.

ஒரு கிறிஸ்தவர் தேவனுடைய வார்த்தையை கொள்ளையாடினால் அல்லது தேவனின் விஷயங்களை அவமதித்தால் ஒரு கிறிஸ்தவருக்கு எதிராக ஒரு சாபம் வேலை செய்யலாம்.

ஒரு கிறிஸ்தவர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்தால், அந்த கிறிஸ்தவருக்கு எதிராக அந்த  சாபம் வேலை செய்யலாம்.

ஒரு கிறிஸ்தவர் ஜெபிக்காமல் மற்றும் சாபங்களுக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்த தவறினால் அந்த சாபம் ஒரு கிறிஸ்தவருக்கு எதிராக வேலை செய்ய முடியும். நீங்கள் எதைச் செயல்படுத்துகிறீர்களோ அதைத்தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவர் ஆன்மீகப் போரில் செயலற்றவராக இருக்கக்கூடாது.

கிறிஸ்தவர் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால் அல்லது மற்றவர்களுக்கு தீமை செய்திருந்தால், அவர்கள் அவரை சபித்தால், அது வேலை செய்ய முடியும். சாபம் வேலை செய்ய ஒரு காரணம் இருக்கிறது. சாபம் செயல்பட சட்டப்பூர்வ அடிப்படை உள்ளது. (நீதிமொழிகள் 26:2) கூறுகிறது, "காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.”


சாபங்கள் பற்றிய உண்மைகள்

வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு வேகமாக, எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை சாபங்கள் தீர்மானிக்கும்.

சாபங்கள் ஒரு விதிக்கு எதிராக ஏவப்படும் ஆன்மீக ஆயுதங்கள்.

சாபங்கள் நோய், தோல்வி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.

சாபங்கள் ஆசீர்வாதங்களுக்கு எதிரானவை.

சாபங்கள் அழிவுகரமானவை.

சாபங்கள் உடைக்கப்படலாம்.

சாபங்கள் விடுவிக்கப்படும் போது, குறிப்பிட்ட நேரம் இணைக்கப்படவில்லை என்றால், அது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு இயக்கப்படும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சபிக்கவோ, ஆசிர்வதிக்கவோ அதிகாரம் பெற்றவர்கள்.

சாபத்தின் மிகவும் ஆபத்தான வடிவங்களில் ஒன்று சுயமாக ஏற்படுத்தப்பட்ட சாபங்கள்.

ஒரு தலைமுறை ஆசீர்வாதம் உள்ளது. 
மேலும் தலைமுறை சாபங்களும் உள்ளன.


சாபங்களின் செயல்பாட்டை குறித்து வேதத்தில் உள்ள எடுத்துக்காட்டுகள்

1. கேயாசியும் அவன் தலைமுறையும் தொழுநோயால் சபிக்கப்பட்டனர். 
(2 இராஜாக்கள் 5:27)

2. யோசுவா எரிகோவை சபித்தார். 
யோசுவா 6:26 இல், யோசுவா எரிகோ மீது ஒரு சாபம் வைத்தார், சுமார் 530 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈயேல் என்ற நபர் எரிகோவை மீண்டும் கட்டினார், மேலும் அந்த மனிதனின் முதல் குழந்தை மற்றும் கடைசிப் பிறந்தவருக்கு எதிராக சாபம் செயல்படுத்தப்பட்டது. 
(பார்க்க 1 இராஜாக்கள் 16:34)

ஒன்று ஈயேல் சாபத்தை இகழ்ந்தார், அல்லது அவர் அதை அறியாதவராக இருந்தார். அறியாமை ஒரு சாபத்தின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து ஒரு மனிதனை விலக்க முடியாது, அதனால்தான் இரத்தத்தில் இருக்கும் எந்தவொரு சாபத்தையும் அறியாமை விலக்கு என்று ஒரு கிறிஸ்தவர் உணரக்கூடாது.

3. ஆதாம் ஆசீர்வதிக்கப்பட்டான், ஆனால் அவன் கீழ்ப்படியாமை சாபங்களுக்கு வழிவகுத்தது. தேவன் பாவத்தை மன்னிப்பதில்லை; அவர் பாவியை நேசிக்கிறார், ஆனால் பாவத்தின் மீதான நமது கவனக்குறைவான அணுகுமுறையை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார்.பாவத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும். (ஆதியாகமம் 3:17-19)

4. பாலாக் மற்றும் பிலேயாம். பாலாக் பிலேயாமை வேலைக்கு அமர்த்தினான்; அவர் இஸ்ரவேலர்களைத் தோற்கடிக்க அவர்களை சபிக்க விரும்பினார். பாலாக் யாரையும் சபிப்பதன் ஆவிக்குரிய விளைவைப் புரிந்துகொண்டார், மேலும் அவர்களை உடல் ரீதியான போரில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு ஆவிக்குரிய அம்பை (சாபம்) செலுத்த விரும்பினார். இஸ்ரவேலர்களை சபிப்பதில் பிலேயாம் வெற்றி பெற்றிருந்தால், மோவாபியர்களுக்கு எதிரான எந்தவொரு சரீரப் போரிலும் அவர்கள் தோற்றிருப்பார்கள்.


சாபங்களை எப்படி உடைப்பது

வேலையில் சாபம் இருக்கிறதா என்று ஆவிக்குரிய ரீதியில் கண்டறியவும்.

சாபத்தின் காரணத்தைப் பற்றிய தெய்வீக வெளிப்பாட்டை ஜெபத்துடன் தேடுங்கள்.

பிசாசுக்கும் சாபத்துக்கும் சட்டப்பூர்வ ஆதாரத்தை அளிக்கக்கூடிய தெரிந்த மற்றும் அறியப்படாத எந்த பாவத்திற்கும் மனந்திரும்புதல்.

ஆவியின் பட்டயமாக நீங்கள் பயன்படுத்தும் தேவனின் வாக்குத்தத்ததை தேர்ந்தெடுங்கள். 
நீங்கள் வேதங்களை ஆராய்ந்து தேவனுடைய சித்தத்தை அறிய வேண்டும். சாபங்களின் கோட்டையையும் செயல்பாடுகளையும் நீங்கள் வீழ்த்தி செல்வது தேவனின் விருப்பம்.

சூழ்நிலையின் மீது இயேசுவின் இரத்தத்தைப் பிரயோகித்து, அந்தச் சாபங்களால் சட்டப்பூர்வ காரணங்களைத் வீழ்த்தவும்.

தேவனின் விருப்பப்படி ஜெபியுங்கள், தேவன் தலையிட ஜெபிக்கவும். 
அந்த பேய்களை சாபங்களுடன் செயல்படவிடாமல் கட்டுவதற்கு யுத்த ஜெபம் தேவை.

தீர்க்கதரிசன ஆணைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் கிறிஸ்துவில் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். அந்த சாபங்களை எதிர்கொள்ளும் ஆசீர்வாதங்களை நீங்கள் தொடர்ந்து அறிக்ககையிடவேண்டும்.

பரிசுத்தத்தில் வாழுங்கள். 
பாவமான வாழ்க்கை முறைக்குத் திரும்பாதே.


சாபங்கள் சக்திவாய்ந்தவை, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அவர்களுக்கு எதிராக போர் செய்ய வேண்டும். உங்கள் விதியை பாதிக்கும் இருளின் செயல்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்; இது உங்கள் பொறுப்பு, உங்களுக்கு அதிகாரம் உள்ளது. உங்கள் ஆவியில் கோபமாக இருங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட தீய சாபங்களை அழிக்கவும். உங்கள் வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் எந்த சாபமும் இன்று இயேசுவின் நாமத்தில் உடைக்கப்படும் என்று நான் உங்கள் வாழ்க்கையில் அறிவிக்கிறேன்.

Bible Reading Plan : John 20 - Act 4
ஜெபம்
1. என் விதிக்கு எதிராக செயல்படும் எந்த எதிர்மறை உடன்படிக்கைகளும் இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும். (ஏசாயா 54:17)

2. இயேசுவின் நாமத்தில் என் இரத்த உறவில் இருக்கும்  ஒவ்வொரு எதிர்மறை சாபத்தையும் உடைக்கிறேன். (கலாத்தியர் 3:13)

3. இயேசுவின் நாமத்தில் மூதாதையர் சாபங்கள் மற்றும் தீய பலிபீடங்களிலிருந்து நான் என்னைத் துண்டித்துக்கொள்கிறேன். 
(எசேக்கியேல் 18:20)

4. என்னை சபிக்கும் எந்த அமானுஷ்ய நபருக்கும் நான் அதிகாரம் எடுத்துக்கொள்கிறேன்; அந்த சாபங்கள் இயேசுவின் நாமத்தில் ஆசீர்வாதமாக மாறட்டும். (லூக்கா 10:19)

5. என் வாழ்க்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட எந்த சாபமும், தந்தையே, அவற்றை இயேசுவின் பெயரில் ஆசீர்வாதங்களாக மாற்றவும். (உபாகமம் 23:5)

6. எனது முன்னேற்றத்திற்கும் செல்வத்திற்கும் எதிராக செயல்படும் எந்த அதிபரையும் நான் இயேசுவின் நாமத்தில் கட்டுகிறேன். 
(எபேசியர் 6:12)

7. நான் இயேசுவின் நாமத்தில் என் இரத்தத்தில் உருவ வழிபாட்டின் எதிர்மறையான விளைவுகளை அழிக்கிறேன். (1 யோவான் 5:21)

8. பிதாவே, இயேசுவின் நாமத்தில் என் விதிக்கு எதிராக செயல்படும் எந்த சாபத்திலிருந்தும் என்னை விடுவிக்கவும். (சங்கீதம் 34:17)

9. இயேசுவின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தில் என் விதிக்கு எதிராக ஒவ்வொரு பெற்றோரின் சாபத்தையும் நான் நடுநிலையாக்குகிறேன். (எசேக்கியேல் 18:20)

10. நான் என் வாழ்க்கையில் தோல்வி மற்றும் ஆணையை நிராகரிக்கிறேன்; 
இயேசுவின் நாமத்தில் நான் வெற்றி பெறுவேன். (பிலிப்பியர் 4:13)

11. தேவனின் வல்லமையால், இயேசுவின் நாமத்தில் பரம்பரை  சாபத்திலிருந்து என்னை விடுவிக்கவும். (கலாத்தியர் 3:13)

12. நல்ல விஷயங்கள் என்னிடம் வருவதைத் தடுக்கும் எந்த தீய சாபமும், இயேசுவின் நாமத்தில் பரிசுத்த ஆவியின் அக்கினியால் நான் உன்னை உடைக்கிறேன். (ஏசாயா 54:17)


Join our WhatsApp Channel


Most Read
● தலைப்பு: அவர் காண்கிறார்
● இழந்த ரகசியம்
● தேவனுடைய ஏழு ஆவிகள்
● ஒரு நேர்முகசந்திப்பின் சாத்தியம்
● ஆபாச படங்கள்
● தெபொராளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
● இதற்கு ஆயத்தமாக இருங்கள்!
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய