english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. எதுவும் மறைக்கப்படவில்லை
தினசரி மன்னா

எதுவும் மறைக்கப்படவில்லை

Saturday, 18th of January 2025
0 0 180
Categories : கொடுப்பதன் (Giving) சீடத்துவம் (Discipleship)
“சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.”‭‭அப்போஸ்தலர்‬ ‭4‬:‭36‬-‭37‬ ‭

மேற்கண்ட வேத வசனத்தில், பர்னபா என்ற நபர், தனது சொத்தை விற்று, அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டு வந்ததைக் காண்கிறோம். இது விசுவாசமும் பெருந்தன்மையின் செயல்.

“அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.”அப்போஸ்தலர்‬ ‭5‬:‭1‬-‭2‬ ‭

சாதாரண பார்வையாளருக்கு, அனனியாவும் சப்பீராவும் அதையே செய்து கொண்டிருந்தாக தோன்றும். இருப்பினும், அவர்களின் இருதயங்களில் ஆழமாக, ஒருவேளை பண ஆசை நீடித்திருக்கலாம்.

அவர்கள் இருவரும் உண்மையில் தாராளமாக இல்லாமல் மக்கள் முன் பெரும் தாராளத்தின் உருவத்தை காண்பிக்க விரும்பினர். தெளிவாக, அவர்கள் தேவனின் புகழைக் காட்டிலும் மனிதர்களின் புகழை விரும்பினார்கள். (யோவான் 12:43)

ஜனங்களில் இரண்டு வகைகள் உள்ளன:

முதலாவது சொல்லப்பட்ட நபர் தேவனை பிரியப்படுத்தவும் அவனிடமிருந்து மட்டுமே புகழைப் பெறவும் ஒரே விருப்பத்துடன் காரியங்களைச் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக, இந்த வகையினர் மிகவும் குறைந்த அளவே உள்ளனர்.

மற்ற வகை ஜனங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், அவர்களைச் சுற்றியுள்ள மக்களால் பார்க்கவும் பாராட்டவும் மட்டுமே செய்கின்றனர். அவர்கள் பாராட்டப்படாவிட்டால், அவர்கள் புண்படுத்தப்பட்டு கசப்பானவர்களாக மாறுவிடுகின்றனர். எனவே நீங்கள் பாருங்கள், மேற்பரப்பில் மிகவும் அழகாகத் தோன்றும் ஆனால் முற்றிலும் தவறான காரணங்களுக்காக செய்யப்படும் விஷயங்களைச் செய்ய முடியும்.

இந்தக் கேள்விகளின் வெளிச்சத்தில் உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்:

நான் கர்த்தருக்கு சேவை செய்கிறது மற்றவர்கள் காணவும் பாராட்டவும் செய்கின்றேனா?

நான் தேவனுக்கு கொடுக்கும்போது, ​​நான் செய்ததை அறிவிக்க எக்காளம் ஊதுகிறேனா?

நாம் தேவனுக்கு முன்பாக தனிமையில் இருக்கும் போது இது போன்ற கூர்மையான கேள்விகளைக் கேட்பது நம்மை மனந்திரும்பி அவருடைய கிருபையில் மேலும் வளரச் செய்யும்.

அனனியாவும் சப்பீராவும் மறந்த விஷயம் என்னவென்றால், தேவனுடைய கண்களுக்கு முன்பாக எதுவும் மறைக்கப்படவில்லை. “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”(1 சாமுவேல் 16:7)

தியத்தீராவில் உள்ள சமரசம் செய்யும் சபைக்கு இயேசு கூறியது போல், “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.”

‭‭வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭2‬:‭23‬ ‭

மனிதர்களின் உள்ளங்களையும் மனதையும் ஆராய்பவர் தேவன் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவருடைய கண்களுக்கு எதுவும் மறைக்கப்படவில்லை. கர்த்தருக்கு முன்பாக உண்மையில் எண்ணப்படுவது வெளிப்புற இணக்கம் அல்ல, மாறாக நல்ல செயல்களில் வெளிப்படுத்தப்படும் இருதயத்திலிருந்து உள்ளான மாற்றமாகும்.

Bible Reading: Genesis 50 ; Exodus 1-3
வாக்குமூலம்
“பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக் கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.”
‭‭சங்கீதம்‬ ‭119‬:‭23‬-‭24‬ ‭

Join our WhatsApp Channel


Most Read
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 1
● தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் ஐந்து விதமான நன்மையின்
● நாள் 05:40 நாட்கள் உபவாச ஜெபம்
● வேதத்தை திறம்பட வாசிப்பது எப்படி
● துதி தேவன் வசிக்கும் இடம்
● ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
● உபத்திரவம் - ஒரு பார்வை
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய