english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. ஏழு மடங்கு ஆசீர்வாதம்
தினசரி மன்னா

ஏழு மடங்கு ஆசீர்வாதம்

Sunday, 19th of January 2025
0 0 130
Categories : ஆசீர்வாதம் (Blessing)
“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி,
உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்;
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்,
உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்;
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”ஆதியாகமம்‬ ‭12‬:‭2‬-‭3‬ ‭

ஆபிராம் கல்தேயர்களின் ஊரில் இருந்தபோது அவருக்குக் தேவன் கொடுத்த ஏழு வாக்குத்தத்தங்கள்; அவர் தனது தாயகம், அவரது குடும்பம், அவரது சௌகறிய இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், ஆறான் வழியாக கானானுக்கு பயணம் செய்தார்:

1) நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்

2) உன்னை ஆசீர்வாதிப்பேன்

ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது, "நான் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தந்து ஆசீர்வதிப்பேன்." ஆபிரகாம் மிகுதியால் ஆசீர்வதிக்கப்பட்டார். உண்மையில், ஆதியாகமம் 24:1 ஆபிரகாம் எல்லா வகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கூறுகிறது.

3) நான் உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்

ஆதியாகமம் 12:2ல், "உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன், சிறப்பிக்கச் செய்வேன்" என்று ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது.

ஆபிரகாம் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவரை அறிந்திருந்தனர். அவருடைய புகழ் அவருக்கு முன்னும் பின்னும் வந்தது. அவர் ஒரு வலிமைமிக்க இளவரசன். அவர் தேவனுடைய மிகுதியான தயவைவை பெற்றார்!

4) நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

இங்கிருந்துதான் "நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்" என்ற சொற்றொடர் வருகிறது. நாம் போதுமானதை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதனால் நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் உதவவும் முடியும்.

கிறிஸ்தவர்களாகிய நாம், உங்கள் நன்மையை மட்டும் கவனியுங்கள் என்று கூறும் உலகத்தின் மாதிரியைப் பின்பற்றக் கூடாது. மாறாக, தேவனின்  வளங்களை அவர்கள் நோக்கமாகப் பயன்படுத்த வேண்டும்: நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு தேவனின்  மகிமையைக் காண்பிக்க வேண்டும்.

நாம் தாராளமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதற்கு நாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் நமது ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

5) உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன்

ஜனங்கள் உங்களை ஆசீர்வதித்து உதவும்போது, ​​தேவன் அவர்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தயவு அவர்கள் மீது பாய்ந்து போகும். உங்கள் வாழ்க்கையை நேர்மறையான வழியில் தொடும் ஒவ்வொரு நபரும் தேவனிடமிருந்து ஒரு தொடுதலைப் பெறுவார்கள்; நாம் எவ்வளவு பாக்கியவான்கள்.

6) உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன்

உன்னை எதிர்க்கும் எவரையும் தேவன் ஆசீர்வதிக்க மாட்டார். "உன் சத்துருக்களுக்கு நான் சத்துருவாய்யிருப்பேன், உன்னை எதிர்ப்பவர்களை எதிர்ப்பேன்" என்றார். உபாகமம் 28:7 கூறுகிறது, “உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.”

7) பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்

"உலகம் முழுவதும் உள்ள மக்களை நான் எப்படி ஆசீர்வதிக்க முடியும்?" என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் சேவை செய்யும்போது, ​​தேவனின் பணிக்கு நீங்கள் கொடுக்கும்போது, ​​உலகம் முழுவதும் நற்செய்தியை அனுப்புவதில் நீங்கள் முக்கிய அங்கமாகிவிடுவீர்கள்.

தேவன் கலாத்தியர் 3:9 இல் ஆபிரகாமுடன் சேர்ந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார். அதாவது, ஆபிரகாமுக்கு கிடைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும், நாமும் பெற முடியும்.

Bible Reading: Exodus 4-6
வாக்குமூலம்
கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நான், கிறிஸ்துவைத் தரித்துள்ளேன். யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நான் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறேன். நான் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறேன்.” (கலா 3:27-29).

ஆபிரகாமின் வாக்குத்தத்தங்கள் இயேசுவின் நாமத்தில் என்னுடையவைகள். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
● சாதாரண பாத்திரங்கள் மூலம் பெரிய கிரியைகள்
● ஒப்பீட்டுதல் என்னும் பொறி
● நேற்றைய தினத்தை விட்டுவிடுதல்
● நடவடிக்கை எடு
● பேசும் வார்த்தையின் வல்லமை
● ஜெபத்தின் நறுமணம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய