english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 3
தினசரி மன்னா

உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 3

Tuesday, 25th of March 2025
0 0 122
Categories : விடுதலை (Deliverance)
“அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.” 1 சாமுவேல்‬



மோசேயின் காலத்தில், பிரதான ஆசாரியன், அவருடைய பிள்ளைகள்,
ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்களை அபிஷேகத்திற்கு எண்ணெய் பயன்படுத்தப்பட்டது, மேலும்
யாத்திராகமம் 29, 30, மற்றும் 40 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சி அப்பத்தின்
மேசையில் இருந்த ரொட்டியோடும் கூட எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. யாத்திராகமம்
40:9-11 இல் கூறுகிறது, “அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும்
அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது
பரிசுத்தமாயிருக்கும். 10தகனபலிபீடத்தையும், அதின் சகல பணிமுட்டுகளையும், அபிஷேகம்பண்ணி,
அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்,
தொட்டியையும் அதின் பாதத்தையும் 11அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக."

அபிஷேக எண்ணெய் முக்கியமாக ஜனங்களை ஒரு பணிக்காக நியமிக்கும் நேரத்தில் பயன்படுத்தப்பட்டது. இது தேவனுடைய பிரசனத்திற்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலுக்கும் அது அடையாளமாகும். இஸ்ரவேலிலுள்ள அனைத்து ராஜாக்களும் அரியணை ஏறுவதற்கு முன் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். தாவீது அபிஷேகம் செய்யப்பட்டபோது, தேவனுடைய ஆவி அவர்மேல் வந்தது. எனவே, இது பரிசுத்த ஆவியின் பரிமாற்றத்திற்கான ஒரு செயல்பாடாகும். எனவே, எப்போதும் உங்கள் பிள்ளைகளை எல்லா நேரங்களிலும் அபிஷேகம் செய்யுங்கள்.

சில போதகர் ஒரு அபிஷேக ஆராதனையை நடத்தும் வரை, அவர்கள் கடமைப்பட்டிருப்பதாக உணரும் முன் அல்லது அதைப் பயன்படுத்துவதற்கு போதுமான நம்பிக்கை இருக்கும் வரை காத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. தேவன் மாறாதவராய் இருக்கிறார். அபிஷேகம் கடைசி நாட்களின் அசுத்த ஆவிகளை உங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலக்கி வைக்கிறது மற்றும் அவர்களுக்குள் பரிசுத்த ஆவியின் வெளியீட்டை செயல்படுத்துகிறது. அவர்கள் எங்கு சென்றாலும் பரிசுத்த ஆவியை சுமக்கும் பாத்திரங்களாக மாறுகிறார்கள்.
 
வேதம் யாக்கோபு 5:14-15ல் கூறுகிறது, “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக் கடவர்கள்.”
 
அதேபோல், உங்கள் வீட்டில் அபிஷேகம் செய்வது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணெயை எடுத்து, அதை உங்கள் வீட்டின் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. எண்ணெய்க்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்றாலும், வேதாகமத்தில், அபிஷேகம் என்பது தேவனுக்கென்று ஒரு நபரை அல்லது பொருளை அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது.

மோசே வாசஸ்தலத்தின் பாத்திரங்களை அபிஷேகம் செய்தார், அவை கர்த்தருக்காகப் பரிசுத்தமாக்கப்பட்டன. எனவே, உங்கள் வீட்டையும் உங்கள் குடும்பத்தையும் எப்போதும் அபிஷேகம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு மூலையையும் பாத்திரத்தையும் அபிஷேகம் செய்யுங்கள், அதனால் அவை கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருக்கும். நீங்கள் அபிஷேகத்தின் மூலம் பிசாசையும் அனைத்து அசுத்த ஆவிகளையும் உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்கிறீர்கள். பிசாசுகள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இது மாறுகிறது.
 
மோசே அபிஷேகம் செய்த பாத்திரங்கள் தேவனுக்கு மட்டுமே சேவையாகப் பயன்படுத்தப்பட்டன. அதேபோல், நீங்கள் அபிஷேகத்தில் ஈடுபடும்போது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பாத்திரமும் தேவனின் மகிமைக்கான கருவியாக இருக்கும்.

எனவே, நாம் எண்ணெய் எங்கே பயன்படுத்துவது?
எண்ணெய் கறையை ஏற்படுத்தும் என்பதால், வர்ணம் பூசப்பட்ட மேற்பரப்பைக் காட்டிலும் மர மேற்பரப்பில் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடங்களில் எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், இது விசுவாசத்தின் செயல்பாடாகும்.
 
வீட்டிற்கு அபிஷேகம் செய்யும்போது நாம் என்ன பேச வேண்டும்?
நீங்கள் உங்கள் வீட்டில் எண்ணெயைத் பயன்படுத்தும் போது, விசுவாசத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்லுங்கள், அசுத்த ஆவிகளுக்கு எதிராக நாங்கள் எங்கள் வீடுகளைப் பாதுகாக்கிறோம். எங்கள் வீடு கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டது. அசுத்த ஆவிகளின் ஊடுருவல்களிடமிருந்து நாம் இன்னும் எவ்வளவு பாதுகாக்க வேண்டும்? எனவே, நீங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையை அறிமுகப்படுத்தும்போது உங்கள் வீட்டின் சூழ்நிலையை மாற்றுகிறீர்கள்.


Bible Reading: Judges 8-9
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், அபிஷேகத்தைப் பற்றிய இந்த உண்மையை எனக்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி. இந்த உண்மையை நம்புவதற்கான நம்பிக்கையை நீர் எனக்கு தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இனிமேல் நான் அபிஷேக தைலத்தைப் பயன்படுத்தும்போது, உமது ஆவியானவர் என் வீட்டில் வாசம்பண்ணும்படி ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல் - II
● இனி தேக்கம் இல்லை
● மகத்துவத்தின் விதை
● தேவ வகையான அன்பு
● நித்தியத்தை மனதில் கொண்டு வாழ்வது
● விதையின் வல்லமை -1
● கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய