english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. அவிசுவாசம்
தினசரி மன்னா

அவிசுவாசம்

Thursday, 3rd of April 2025
0 0 99
Categories : நம்பிக்கைகள்(Beliefs) மனம் ( Mind) மாற்றம்(transformation)
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. எபிரெயர் 4:2

அவிசுவாசம் என்பது நமது ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் தேவனின் ஆசீர்வாதங்களின் முழுமையை அனுபவிப்பதிலிருந்து நம்மைத் தடுக்கும் ஒரு மதில். சங்கீதம் 78:41 கூறுகிறது, “அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எவ்வளவு சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறார், மேலும் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கிறார், நம் வாழ்வில் அவருடைய கரத்தையும் வல்லமையையும் கட்டுப்படுத்தலாம். எப்படி? அவிசுவாசத்தின் மூலம்.

தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் சந்தேகிக்கும்போது, நம் வாழ்க்கையில் அவர் என்ன செய்ய முடியும் என்பதை நாம் கட்டுப்படுத்துகிறோம். நாம் சந்தேகத்தின் மூலமாய் சந்தேகத்தின் மதில்களை  உருவாக்குகிறோம், அது உடைக்க கடினமாக இருக்கும். எபிரேயர் 11:6-ல் வேதம் கூறுகிறது, " விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்விசுவாசிக்கவேண்டும்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் விசுவாசம் இல்லாமல் இருக்கும்போது, அவருடைய கரத்தின் வல்லமையை நம் வாழ்வில் கட்டுப்படுத்துகிறோம்.

ஜனங்கள் விசுவாசம் இல்லாததால் ஆவிக்குரிய பலனையும் தயவையும் அனுபவிக்கவில்லை. அவர்கள் அவிசுவாசத்தால் பாதிக்கப்பட்டார்கள். வேதம் மத்தேயு 9:29-30ல் ஒரு உதாரணத்தை பதிவு செய்கிறது, “29. அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 30. உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.” இந்த ஜனங்கள் இயேசுவிடம் குணமடைய வந்தார்கள்; அவர்கள் பார்வையற்றவர்கள். அப்படியானால், இயேசு ஏன் அவர்களை வெறுமனே குணப்படுத்தவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சர்வ வல்லமையுள்ளவர். ஆனால் உங்கள் விவாசத்தின் அடிப்படையில் உங்கள் அற்புதம் இருக்கிறது என்றார். இந்த ஜனங்கள் ஒரு கண் திறக்க வேண்டும் என்று மட்டுமே நம்பினர் என்று கற்பனை செய்து பாருங்கள். வெளிப்படையாக, அது அவர்களின் விசுவாசம் போலவே நடந்து இருக்கும். எனவே, நம்பிக்கையின்மையால் உங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதங்கள் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

தேவன் தனது வழியை பின்ப்பற்ற வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை,0 ஆனால் நாம் அனைவரும் விசுவாசத்தின் மூலம் தேவனின் ஆசீர்வாதங்களின் புதிய பரிமாணங்களுக்குள் நுழைகிறோம். தேவனின் கிருபையால் அது முடியும் என்பது நற்செய்தி.

#1: அவிசுவாசத்தின் மதிலை உடைக்க மிகவும் வல்லமை வாய்ந்த வழிகளில் ஒன்று தேவனுடைய வார்த்தையை தியானிப்பதாகும். ரோமர் 10:17 ல் வேதம் கூறுகிறது, "ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் தியானிப்பதின் மூலம் தேவன் மீது நம்பிக்கையை வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. உங்கள் அவிசுவாசத்தை விசுவாசம் என்ற பட்டயத்தால் முறியடித்துவிடுங்கள். மேலும் விசுவாசம் தேவனுடைய வார்த்தையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

#2: அவிசுவாசத்தின் மதிலை உடைக்க மற்றொரு வழி ஜெபம். மாற்கு 9:23ல் இயேசு சொன்னார், “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.” நாம் ஜெபிக்கும்போது, தேவனை சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்கிறோம், அவருடைய வல்லமையில் நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். தேவனிடம் ஜெபம் செய்வது என்பது யுத்தத்தை தேவனிடம் ஒப்படைப்பதாகும், அதனால் அவருடைய வல்லமையான கரத்தை நாம் பார்க்க முடியும்.

#3: ஆவியில் ஜெபிப்பது உங்கள் விசுவாசத்தை வளர்ப்பதற்கான மற்றொரு வழியாகும். யூதா 20ல் வேதம் சொல்கிறது, 20.” நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, 21. தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.”

#4: முதிர்ந்த ஆவி நிறைந்த கிறிஸ்தவர்களுடன் நம்மைச் சூழ்ந்துகொள்வதன் மூலம் அவிசுவாசத்தின் மதிலை தகர்க்கலாம். எபிரேயர் 10:24-25 கூறுகிறது, 24. “மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” நீங்கள் யாருடன் உங்களைச் சூழ்ந்துள்ளீர்கள்? உங்கள் நெருங்கிய நண்பர்கள் யார்? நீங்கள் யாராக மாறுவதற்கு உங்கள் துணை முக்கியமானது. எனவே, தெய்வீக கரத்தை வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் தேவனுடைய  ஆராதனைகளில் கலந்துகொள்வதோடு, உங்களைச் சுற்றியுள்ள நம்பிக்கையின் அரவணைப்பை அனுமதியுங்கள்.
 
அவிசுவாசத்தின் சுவரை உடைப்பதற்கு நம் சார்பில் ஒரு நலமான முயற்சி தேவைப்படுகிறது.

Bible Reading: 1 Samuel 8-9
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது வார்த்தையின் உண்மைக்கு நன்றி. உம்மை என் வாழ்க்கையில் பின்பற்றவும் சீரமைக்கவும் எனக்கு உதவுமாறு நான் ஜெபம் செய்கிறேன். உமது வார்த்தையை நான் எப்போதும் வாசிக்க கிருபை தரும்படி ஜெபிக்கிறேன், அதனால் நான் உம்மில் என் விசுவாசத்தை வளர்க்க முடியும். உமது வார்த்தையின் உண்மை என் உள்ளத்தில் ஊடுறுவுவதற்காக நான் என் இருதயத்தைத் திறக்கிறேன். இனிமேல் என் நம்பிக்கை வீண் போகாமல் இருக்க ஜெபிக்கிறேன். என் வாழ்க்கையில் விசுவாசயின்மையின் ஒவ்வொரு மதிலும் இன்று உடைந்துவிட்டது. இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் தரிசு நிலத்தை பண்படுத்துங்கள்
● நீங்கள் ஜெபியுங்கள், அவர் கேட்கிறார்
● பூமியின் ராஜாக்களுக்கு மேல் ஆளுகை
● இயேசுவின் நாமம்
● வெறும் காட்சி அல்ல, ஆழத்தை தேடுகிறது
● நாள் 03:40 நாட்கள் உபவாச ஜெபம்
● நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய