english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. உபவாசம் - வாழ்க்கையை மாற்றும் பலன்கள்
தினசரி மன்னா

உபவாசம் - வாழ்க்கையை மாற்றும் பலன்கள்

Saturday, 24th of May 2025
0 0 116
Categories : உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை ( Fasting & Prayer)
நான் சந்தித்த ஒவ்வொரு கிறிஸ்தவரும் உபவாசத்தைப் பற்றி சில தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். உபவாசம் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பாடங்களில் ஒன்றாகும். உண்மை என்னவென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையின்படி உபவாசம் இருக்கும் போது நீங்கள் நம்பமுடியாத நன்மைகளைப் பெறுவீர்கள்.
 
"தேவன் தேர்ந்தெடுத்த உபவாசத்தின்" பன்னிரண்டு குறிப்பிட்ட நன்மைகள் ஏசாயா புத்தகம், அதிகாரம் 58 -ல் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், இன்று, நாம் சரியான உபவாசத்தின் ஐந்து விதமான நன்மைகளைப் பார்ப்போம்.
 
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். 9. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, (ஏசாயா 58: 8-9)
 
1. உன் வெளிச்சம் விடியற்காலைப்போலப் பிரகாசிக்கும்
வெளிப்பாடு உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். நீங்கள் இதுவரை பார்த்திராத விஷயங்களை வார்த்தையில் பார்க்கத் தொடங்குவீர்கள். இந்த "வெளிச்சம்" என்பது ஞானம், புரிதல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் அதிகரிப்பைக் குறிக்கிறது.
 
2. உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்
முறையான உபவாசம் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தரும். உபவாசம் உங்கள் சரீரத்தில் இருந்து நச்சுகளை நீக்குகிறது மற்றும் சரீரத்தை மிகவும் திறமையாக சரிசெய்கிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
3. உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்
உபவாசம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தார்மீக வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படும். இந்த ஆவிக்குரிய ஒழுக்கத்திற்கு தன்னை அர்ப்பணிப்பதன் மூலம், தனிநபர்கள் தெய்வீக மதிப்புகள் மற்றும் கொள்கைகளுடன் மிகவும் இணக்கமாகி, அவருடைய நீதியின் வலுவான உணர்விற்கு வழிவகுக்கும். நீங்கள் கர்த்தருடன் தொடர்ந்து நடக்கும்போது, சரியானதைச் செய்கிறவர்கள் என்ற நற்பெயரைப் பெறுவீர்கள்.
 
4. கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது, தேவன் மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் அவர்களை பாதுகாத்தார், அவர்கள் செங்கடலைக் கடக்கும்போது அவர்களைப் பாதுகாக்க இஸ்ரவேலுக்கும் பின்தொடர்ந்த எகிப்திய இராணுவத்திற்கும் இடையே ஒரு சுவரை உருவாக்கினார் (யாத்திராகமம் 14:19-20). இருப்பினும், அமலேக்கியர்கள் பின்முனையில் இருந்த இஸ்ரவேலரை தாக்கினர். நீங்கள் உபவாசித்து ஜெபிக்கும்போது, உங்கள் பின்னால் இருப்பதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கர்த்தருடைய பிரசன்னம் உங்களை காக்கும்.
 
5. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்
உபவாசம் உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயான தொடர்பை அதிகரிக்கும். இது உபவாசத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் - பயனுள்ள ஜெபம். தேவன் உங்கள் ஜெபங்களுக்கு விரைவாக பதிலளிக்க வேண்டுமாஉபவாசத்தை கடைப்பிடியுங்கள்.
 
உங்களின் உபவாசம் மேற்கூறிய பலன்களைத் தரும். அதுமாத்திரமல்ல, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பெலனடையும், உங்கள் உபவாசம் நூற்றுக்கணக்கான ஜீவன்களை தொடும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

Bible Reading: 2 Chronicles 3-5
வாக்குமூலம்
1. என்னையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் கருணா சதன் ஸ்தாபனத்துடன் தொடர்புடைய அனைவரையும் இயேசுவின் இரத்தத்தால் மறைக்கிறேன்.
 
2. என் வாழ்க்கையையும், என் குடும்பத்தையும், கருணா சதன் ஸ்தாபனத்தை தாக்கும் ஒவ்வொரு சக்தியும் இயேசுவின் நாமத்தில் தேவனின் அக்கினியால் அழிக்கப்படும்.
 
3. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, பெரிய மீட்பரே, என் பொருளாதாரத்தை மீட்டெடும்
 
4. பிதாவே, இயேசுவின் நாமத்தில், உமது பொருளாதார முன்னேற்றத்தின் தேவதூதர்கள் என் வாழ்க்கையில் வெளிப்படட்டும்.
 
5. என் பொருளாதாரத்தை பாதிக்கின்றன என் குடும்பப் பரம்பரையிலிருந்து வரும் பொருளாதார பிணைப்புகlளை, இயேசுவின் நாமத்தில் சுட்டெரிக்கிறேன்.
 
6. புறஜாதிகளின் செல்வங்கள் இயேசுவின் நாமத்தில் எனக்கு மாற்றப்படட்டும்.
 
7. கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற நான் பாக்கியவான். செல்வமும் செழிப்பும் என் வீட்டில் இருக்கும்
 
8. என் வாழ்வில் எதிரிகளால் விதைக்கப்பட்ட ஒவ்வொரு தீய விதையும் இயேசுவின் நாமத்தில் அக்கினியால் சுட்டெரிக்கப்படட்டும்.


Join our WhatsApp Channel


Most Read
● நற்செய்தியை சுமப்பவன்
● விசுவாசத்தின் குணப்படுத்தும் வல்லமை
● தேவனை சேவிப்பது என்றால் என்ன -I
● சமாதானமே நமது சுதந்திரம்
● அதிகப்படியான சாமான்கள் இல்லை
● நாள் 20:40 நாட்கள் உபவாச ஜெபம்
● தேவன் மீது தாகம்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய