english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்
தினசரி மன்னா

கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்

Sunday, 15th of June 2025
0 0 57
Categories : பிரார்த்தனை (Prayer)
“துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.”
சங்கீதம்‬ ‭18‬:‭3‬ ‭

தாவீது, "நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்" என்றார். தேவனை நோக்கி கூப்பிடுதல் என்பது ஜெபத்தைக் குறிக்கிறது. ஒரு பழைய சீனப் பழமொழி, “ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுத்தால், அவனுக்கு ஒரு நாள் உணவளிக்கின்றாய்; ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் சரியான முறையில் ஜெபிக்கக் கற்றுக்கொண்டால், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மட்டுமல்ல, உங்களைப் பின்பற்றும் தலைமுறைகளுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”
‭‭எரேமியா‬ ‭33‬:‭3‬

நாம் கர்த்தரைக் கூப்பிடும்போது என்ன நடக்கும்?

எரேமியா 33:3 (ஆ) கூறுகிறது, "நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."

நம்மில் பெரும்பாலோர் ஜெபிக்கிறோம், ஆனால் பெரும்பாலும், தேவன் நமக்குச் செவிசாய்த்தார் என்பதில் நாம் உறுதியாக இல்லை அல்லது நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒரு வீட்டிற்காக ஜெபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் ஜெபித்தவுடன், உங்கள் வீடு மற்றும் பிற விவரங்களை ஒரு கனவில் அல்லது ஒரு தரிசனத்தில் தேவன் உங்களுக்கு காட்டுகிறார். இது தேவன் மீதான விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் உயர்ந்த மட்டத்தில் உங்களை கொண்டு செல்லும், அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும். வீடு கட்டுவதில் தாமதம் ஏற்பட்டாலும் உறுதியாக இருப்பீர்கள். இதற்குக் காரணம், கர்த்தர் ஏற்கனவே உங்களுக்கு காண்பித்துள்ளார். இது ஜெபத்தின் தீர்க்கதரிசன பரிமாணம்.

நீங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது நடக்கும் இரண்டாவது விஷயம்: சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள் (சங்கீதம் 18:3)

எதிரிகள் மாம்ச பிரகாரமாகவோ அல்லது ஆவிக்குரிய எதிரிகளாக இருக்கலாம் (அசுத்த ஆவிகள் போன்றவை). ஜெபம் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எதிரிகளிடமிருந்து (காணக்கூடியது மற்றும் காணப்படாத) விடுதலையைக் கொண்டுவரும்.

ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பம் இரவு நேரத்தில் தங்கள் வீட்டில் நிழல்களைப் பார்க்கத் தொடங்கும். அவர்கள் விரக்தியடைந்து பல வழிகளில் முயற்சி செய்தனர். ஒரு நாள் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவர்களின் வீட்டிற்கு (வேறு மாநிலத்தில் இருந்த) பயணம் செய்யச் சொல்லி, என்னுடைய பிஸி ஷெட்யூல் காரணமாக என்னால் வர முடியவில்லை என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், நான் அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளை அவர்கள் கவனித்தால், அவர்கள் விடுதலை பெறுவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.

தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். முழு குடும்பமும் இரண்டு நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அன்று முழுவதும் தங்கள் இல்லத்தில் அபிஷேகம் செய்து தேவனை ஆராதிக்க வேண்டும். இரண்டாவது நாள், என் தொலைபேசி ஒலித்தது. அது அந்த வீட்டின் தலைவர். அவர் மகிழ்ச்சியில் கூச்சலிட்டார், “பாஸ்டர் மைக்கேல், என் வீட்டில் எந்த நிழல்களும் இல்லை. கர்த்தராகிய இயேசு எங்களை விடுதலையாக்கினார்."

இதைப் படிக்கும் என் அன்பு நண்பர்களே. தேவன் பட்சபாதமுள்ளவரல்ல. நீங்கள் யாராக இருந்தாலும் - பணக்காரர் அல்லது ஏழையாக இருந்தாலும் நீங்கள் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டால்:

1 - உனக்கு அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார்.

2 - உன் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிப்பார்.

Bible Reading: Esther 9-10 , Job 1-2
ஜெபம்
பிதாவே, உமது வல்லமையினால், இயேசுவின் நாமத்தினாலே, என் முன்னேற்றத்திற்கும் என் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கும் இடையூறாக இருக்கும் ஒவ்வொரு வல்லமையையும் சிதறடித்து அழித்துவிடும்.

என் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒவ்வொரு சாத்தானின் தடையும், இயேசுவின் நாமத்தில் அக்கினியால் சிதறடிக்கப்படும்.



Join our WhatsApp Channel


Most Read
● தேவன் கொடுப்பார்
● நீங்கள் ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்?
● மன்னிப்பதற்கான நடைமுறை படிகள்
● குறைவாக பயணித்த பாதை
● நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● ஒரு தேசத்தைக் காப்பாற்றிய காத்திருப்பு
● வித்தியாசம் தெளிவாக உள்ளது
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய