english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. உங்களுக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை
தினசரி மன்னா

உங்களுக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை

Tuesday, 17th of June 2025
0 0 51
Categories : வழிகாட்டி (Mentor)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என்னுடைய தனிப்பட்ட இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்ட பிறகு,  நான் பெந்தெகோஸ்தே சபைக்கு செல்ல ஆரம்பித்தேன். ஆராதனை முடிந்ததும், ஒரு சிறிய குழு சிறுவர்கள் (மூன்று பேர்) அவர்களுடன் தேநீர் அருந்த என்னை அழைத்தனர். 

அவர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் வெயிட்டர்களாக வேலை செய்து வந்தனர். தேநீர் அருந்தும் போது, தேவனை பற்றிப் பேசுவோம், வேத வசனங்களை பகிர்வோம். மேலும், நான் புத்தகங்களைப் படிக்க விரும்புவதை  தெரிந்ததும், அவர்கள் சில கிறிஸ்தவ புத்தகங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். எங்கள் ஐக்கியம் நீண்ட நேரம் இருக்காது (குறைந்தது 45 நிமிடங்கள்). ஒரு நாள், நான் சபைக்கு செல்லாதபோது, அவர்கள் என் பக்கத்து வீட்டுக்காரரின் தொலைபேசிக்கு அழைத்தார்கள். அது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. 

வேதம் தெளிவாக கூறுகிறது: இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் (வழிகாட்டி) தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். (நீதிமொழிகள் 27:17)

இன்று சபையினுடைய சோகமான காரியம் ஜனங்கள் கலந்துகொண்டு வெளியேறுவது - யாரும் எதிலும் இணைந்துகொள்ள விரும்பவில்லை, யாரும் சமர்ப்பிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் யாரையாவது இணைக்கும்போது சமர்ப்பிக்கும் போது உண்மையான வளர்ச்சியை நீங்கள் காண்கிறீர்கள். எனது ஆரம்ப நாட்களிலும் இன்றும் கூட இதை நான் தொடர்ந்து செய்து வருவதற்கு நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

பெரும்பாலும், ஒரு திருமண விழாவில் பின்வரும் வசனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வசனங்களின் பயன்பாடு திருமணத்திற்கு மட்டுமல்ல, வழிகாட்டுதலுக்கும் பயன்படுத்தப்படலாம்.

9. என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். 10. உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! உன்னதப்பாட்டு 4:9-10

ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி தேவை என்று நான் நம்புகிறேன். இதோ ஏன்?

1. இது வேதத்தின் அடிப்படையில் சொல்கிறேன் 
யோசுவாவுக்கு மோசே வழிகாட்டினார். ஜெத்ரோ மோசேக்கு வழிகாட்டினார். நகோமிக்கு ரூத் இருந்தாள். எலியாவுக்கு எலிசா இருந்தான். இயேசு தம் சீஷர்களுக்கு வழிகாட்டினார். பவுலுக்கு தீமோத்தேயு இருந்தார். மூப்பர்கள் அடுத்த தலைமுறைக்குக் கற்பித்து வழிகாட்ட வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய  பவுல் தானே நமக்குக் கூறினார் (தீத்து 2).

2. நம் அனைவருக்கும் குருட்டுப் புள்ளிகள் உள்ளன
வரையறையின்படி, "குருட்டுப் புள்ளி" என்பது நாம் பார்க்க முடியாத ஒன்று. எனவே, உங்களுக்கு குருட்டுப் புள்ளிகள் இல்லை என்று நீங்கள் சொன்னால், நீங்கள் அதை ஒப்புக்கொண்டீர்கள். நம்மை முழுமையாகப் பார்க்க நமக்கு வேறு ஒருவர் தேவை.

3. ஜனங்கள் தேவன் நமக்கு அளித்த பரிசு
ஒருவர் இப்படி சொன்னார், "தேவன் நமக்கு ஒரு பரிசைக் கொடுத்தால், அவர் அதை ஒரு நபரின் ரூபத்தில் அனுப்புகிறார்".  நம்மை வழிநடத்தவும் ஊக்குவிக்கவும் யாரும் நம் அருகில் இல்லாத போது இந்த பரிசை இழக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் புறக்கணிக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்றாகும். நன்மைகள் விலைமதிப்பற்றவை மற்றும் அதிக புயல்களைக் கொண்ட வாழ்க்கைக் கடலில் ஒரு உயிர்நாடியை வழங்குகின்றன.

கருணா சதனில், எங்களிடம் ஜே-12 தலைவர் என்று ஒருவர் இருக்கிறார், அவர் ஒரு போதகரிடம் தனது வேலையின் அறிக்கையை கொடுப்பார், அவர் எனக்கு அறிக்கை செய்கிறார். நீங்கள் ஒரு J-12 தலைவரின் கீழ் இருக்கும்போது, இந்த நபர் ஒரு வழிகாட்டியாகவும், உதவியாளராகவும் செயல்படுகிறார் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுகிறார். இதற்கு பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

நீங்கள் கருணா சதனின் ஒரு பகுதியாக இருந்தால், நீங்கள் சில தலைவரின் கீழ் இருக்குமாறு நான் மிகவும் பரிந்துரைக்கிறேன். நீங்கள் ஒரு தலைவரின் கீழ் இருக்க விரும்பினால், நீங்கள் KSM அலுவலகத்தை அழைக்கலாம் அல்லது நோவா சாட்-இல் செய்தி அனுப்பலாம். மேலும், நீங்கள் வேறு சபையின் அங்கத்தினராக இருந்தால், ஜெபித்து, நீங்கள் சமர்ப்பிக்கக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நன்மைகள் விலைமதிப்பற்றவை.

வழிகாட்டுதல் உறவுகள் எளிதானது அல்ல, அதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம், ஆனால் இவை அனைத்திலும் தேவன் செயல்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (ரோமர் 8:28 வாசியுங்கள்)

Bible Reading: Job 9-13
ஜெபம்
(உங்களுக்கு வழிகாட்டி இல்லையென்றால் இந்த ஜெபத்தை செய்யுங்கள்): பிதாவே, உமது பிரசன்னத்தையும் உண்மைகளையும் என் வாழ்க்கையில் உண்மையிலேயே ஊற்றக்கூடிய ஒரு வழிகாட்டியை எனக்குத் தாரும்.

(உங்களுக்கு வழிகாட்டி இருந்தால் இந்த ஜெபத்தை செய்யுங்கள்): 
பிதாவே, நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் அவர்களுக்கு  அவரது குடும்பத்தினர் மீது ஒரு ஆசீர்வாதத்தை  கூறுகிறேன். இயேசுவின் நாமத்தில்.  ஆமென்!
[உங்கள் வழிகாட்டிக்காக எப்போதும் ஜெபிக்கவும்]


Join our WhatsApp Channel


Most Read
● நாள் 02:40 நாட்கள் உபவாச ஜெபம்
● காலத்தின் அடையாளங்களை பகுத்தறிவீர்களா?
● கிருபையின் ஈவு
● பரிந்து பேசுதல் பற்றிய தீர்க்கதரிசன பாடம்-2
● சர்ப்பங்களின்  தன்மைகளை நிறுத்துதல்
● அதிகாரப் பரிமாற்றத்திற்கான நேரம் இது
● பண்டைய இஸ்ரேலின் வீடுகளில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய