எனது தாயார் திருமதி.ரோஸி பெர்னாண்டஸ் (76 வயது) கர்த்தரோடு இருக்க மறுமைக்குள் பிரவேசித்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது சிறுநீரகங்கள் செயலிழந்தன, அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
அவர்கள் நல்ல போராட்டத்தை போராடி விசுவாசத்தை காத்துக் கொண்டு இந்த பூமியில் தனது ஓட்டத்தை முடித்தார்கள்.
(2 தீமோத்தேயு 4:7).
என் தாய் ஒரு ஜெப வீரராக இருந்தார், அவருடைய ஜெபங்கள் என்னையும், எனது குடும்ப உறுப்பினர்களையும், ஊழியத்தையும் பெரிதும்பலப்படுத்தியது.
நான் அவர்களை மிகவும் இழந்து தவிக்கிறேன், ஆனால் எனக்கு ஒரு அற்புதமான தாயைக் கொடுத்ததற்காக நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
மேலும், உங்களின் இடைவிடாத ஜெபங்கள் மற்றும் உபவாசத்தின் மூலம் என் தாயாருக்கு காட்டிய அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
(எபிரேயர் 6:10)
எனது இதயத்தின் ஆழத்திலிருந்து, எனது குடும்பத்தினர் சார்பாக உங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் செய்ததற்கு என்னால் ஒருபோதும் கைமாறு செய்ய இயலாது.
என் அப்பாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அவர் என் அம்மாவை மிகவும் இழந்து தவிக்கிறார்.
அவரது பிரசனத்தில்
போதகர் மைக்கேல் பெர்னாண்டஸ்